Wednesday, September 25, 2019

ஜீவன் சமாதி நிலை(ஜீவசமாதி நிலை)

#ஜீவன்_சமாதி_நிலை 🔱(ஜீவசமாதி நிலை)

1.உலகில் பொதுவாக எல்லோரும் இறக்கும் பொழுது முழுக்கு வெளியாகிவிடும், அதாவது இப்படி ஜலமும் வெளியே வந்துவிடும்.இப்படி வெளியாவதே தீட்டு என்று கூறுவதுண்டு.இந்த தீட்டின் காரணமாகத்தான் அந்த உடல் நாற்றம் வீசுகிறது (அதுவே பிண வாடை).

2.சித்தர்கள்,முத்தர்கள்,ரிஷிமார்கள்,சிவனடியார்கள், இறை பக்தி மார்க்கத்தில் சிறந்தவர்கள் போன்றோர் இறப்பது கிடையாது.அவர்களுடைய உயிர் அவர்களின் தலையில் சென்று அடங்கி விடும். இப்படி அடக்கம் ஆகும் உடலுக்கு 10 அடையாளங்கள் இருக்கின்றன

1.அந்த உடல் கெட்ட நாற்றம் வீசாது.தேவ மணம் வீசும். அந்த உடலில் முழுக்கு (தீட்டாகிய மலமும் ஜலமும்) வெளியாகாது.

2.அந்த உடல் விரைப்பாகாது.எவ்வளவு நேரம் ஆனாலும் வளைந்து கொடுக்கும். அதற்க்கு நாடி கட்டு, கால் கட்டு இட தேவையில்லை.

3.அந்த உடல் கணக்காது,ஒரு பூ கூடையை தூக்கினார் போல லேசாக இருக்கும்.

4.இந்த உடல் நேரம் ஆக ஆக அதில் வியர்வை கொட்டும்.

5.உடல் குளுந்து போகாமல் எப்பொழுதும் வெது வெதுவென்று அதன் சூடு மாறாமல் இருக்கும்.

6.பொதுவாக பிணத்தின் தொண்டை அடைபட்டுவிடும் ஆனால் அடக்கமான உடலின் தொண்டையோ எவ்வளவு தீர்த்தம் கொடுத்தாலும் அது தொண்டையின் வழியாக இறங்கும்.

7.உயிர் உள்ள பொழுது எப்படி ஒரு உடலுக்கு சொடுக்கு எடுக்க முடியுமோ அது போல இந்த அடக்கமான உடலிலும் எடுக்கலாம்.

8.உயிர் உள்ள பொழுது இந்த உடலில் இருந்த கூன் மேலும் பல கோளாறுகள் எல்லாம் அடக்கமானவுடன் அது நேராகிவிடும்.பார்ப்பதற்கு இளமை தோற்றம் திரும்பிவிடும்.80 வயதில் அடக்கம் ஆகும் ஒரு உடல் அடக்கமானவுடன் அதன் தோற்றம் 40 வயது உடலை போல் ஆகிவிடும்.

9.இறந்தவர்களின் உடலின் முகம் அரண்டு காணப்படும்.அடக்கமனவர்களின் முகம் இள சிரிப்புடன் காணப்படும். "அகத்தின் அழகு முகத்தில் தெரியும்" என்பார்கள். நாம் தூங்கி கனவில் ஒரு கெட்ட கனவு கண்டு விழிக்கும் பொழுது நமது முகம் அரண்டு காணப்படும்,இதே ஒரு நல்ல கனவு கண்டு விழித்தால் சிரிப்புடன் எழுவோம்.இறந்த ஆன்மா நரகத்தை கண்டு அது அரண்டு விடுகின்றது. அடக்கமாகும் ஒரு ஆன்மாவோ இறைவனை கண்டு அந்த எக்களிப்பில் சிரிக்கின்றது.

10.அடக்கமாகும் உடல் எக்கோடி காலமானாலும் மண்ணில் மக்காது.இறந்த உடலோ 6 மாதத்திற்குள் கிட்ட தட்ட சின்னா பின்னமாகிவிடும். பூமியை நாம் தாய் என்று கூறுவோம். ஒரு தாய் தன் மகனை தின்பதாக இருந்தால் இவன் எக்கேடு கெட்ட நிலைக்கு தள்ளபட்டால் இது நடக்கும்? அடக்கமான சடலத்திற்கோ அந்த பூமி அது மக்காமல் பாதுகாக்கின்றது. ஏனெனில் இவர்களோ வந்த கடமையை சரி வர செய்ததால் இந்த நிலை.

சாகாக்கலை பெற்றவர்களின் (ஜீவ சமாதி) ஸ்தூல அடையாளங்களளே...இவை.

🔱சித்தர்கள் வழிபாடு வாழ்வில் சிறப்பைத் தரும்.🔱

🔱ஓம் சிவயநம.🔱
🔱 ஓம் சிவ சிவ ஓம்.🔱

Saturday, September 21, 2019

குழந்தை இன்மைக்கு காரணம்

குழந்தை இன்மை

பெண்களுக்கு
கற்பபை ரோகம்

1கற்பபையில் புழு கிருமி
2கற்பபையில் கட்டி
3கற்பபையில் பாசம்
4கற்பபையில் சதை
5கற்பபையில் கொழுப்பு
6கற்பபையில் சோர் படிதல்
7கற்பபையில் வாயு
பித்தம் நீர் பேய் கிரகம்

குழந்தை இன்மைக்கு
மேற்படி விசயம்மே காரணம்.

 1 கற்பபையில் கிருமி புழு இருந்தால் அங்கே செல்லும் விந்துவை கிருமியும் புழுவும்
உண்ணும்.

2 சதை கொழுப்பினால் கற்பபை அடை பட்டிருந்தால் அங்கே
விந்து செல்லாது வெளியே வந்து விடும்.

 3 பாசம் வாயு பற்றியிருந்தால்
கற்பபையில் அதி உஷ்ணம் உண்டாகி
உவர் உப்பு உண்டாகி இருந்தாலும் அதில் சேரும் விந்து பாழாகிவிடும்.

இவைகளை எவ்வாறு கண்டு பிடிப்பது
1 உடலுறவின் போது பெண்ணுக்கு தலை நொந்தால் கற்பபையில் பாசம் பற்றியுள்ளது

2உடல்உறவினபோது். உடல் வலித்தால்
கற்பபையில் வாயுநிறைந்து உள்ளது.

3 உடல் உறவின் போது நெஞ்சில் குத்தி வலித்தால் கற்பபையில் சதை வளர்ந்து உள்ளது.

4 உடல் உறவின் போது கெண்டை கால் வலித்தால் சோர் படர்ந்து கட்டியாக உள்ளது.

5 உடல் உறவின் போது ஏப்பம் வந்தால்
கொழுப்பு படிந்துள்ளது.

6. உடல் உறவின் போது முதுகு வலித்தால் கிருமி நிறைந்துள்ளது.

7 உடல் உறவில் வெறுப்பு பயம் இருந்தால் பேய் &கிரக பீடை இதுவே குழந்தை இன்மைக்கு காரணம் ஆகும்.

இன்னும் சில அறிகுறிகள்
சிறுநீர் மஞ்சள் கரைத்தது போல் இறங்கும்.

சிறுநீர் இரத்தம் போல் இறங்கும்.

சிறுநீர் கடுத்து வெளுத்து கருப்பாகவும் சிவப்பாகவும் இறங்கும்.

உடல்பருத்து வலித்து உஷ்ணமுடன் காலெறியும்.

எவ்வளவு உணவு உண்டாலும் உடல் தளரும் அடிக்கடி கொட்டாவி வரும் பலவித கணவுகள் காணும்.

உணவு செறிக்காது வயிறு பொருமி ஏப்பம் உண்டாகும்.

அடி வயிற்றில் சுருக்சுருக்கென வலிக்கும்.

உடல் வெளுப்பு வலி வாந்தி காணும்.

சிலமாததிற்க்கு ஓர்முறை வயிறு நொந்து அடிவயிற்றில்
சுருக்கென குத்தி மாமிசம் கழுவிய நீர் போல் மாதவிடாய் வெளிபடும்.

உடல்உறவின் போது
கற்பபையில் இருந்து நீர் வெளிபடும் அந்த நீர் சேலையில் கரைபடும்

மாதவிடாய் காலத்தில் இரத்தம் கட்டியாகி வயிற்றில் வலி உண்டாகி மாதவிடாய் ஆனவுடன் வலி நீங்கும்.தொடைகள் உளையும்.தலைவலி உடல் மெலிவு காணும் மலம் இறுகித் திரண்டு புழுக்கை போல் விழும்.

முதுகு கருவிழி தலை கடுத்து வலிக்கும்.
உடலும் வயிறும் பெருக்கும்.

இதுவே குழந்தை இன்மைக்கு காரணம் ஆகும்.

பலகரை தரம்


Saturday, September 7, 2019

காடி நீர்


காடி நீர் - Vinegar


காடி செய்யும் விதம்:

ஒரு பெரிய பாத்திரத்தில் கால் படி கருங்குருவை அரிசியை சமைத்து கஞ்சியும் சாதமும் இரண்டையும் கொட்டி 6 படி சுத்தநீர் விட்டு துணியால் வாய்கட்டி சூரிய புடத்தில் வைத்துவர வேண்டும் வாரத்திற்கு ஒரு முறை வேறு பாத்திரத்தில் மாற்றி விட வேண்டும் இப்படி ஒரு மாதம் கழிந்தபின் பார்க்க முதலில் போட்ட அன்னமானது காணப்படாது அந்த சமயம் மறுபடியும் கால் படி அன்னம் சமைத்து அதில் கலந்துவிட வேண்டும் கலந்தபின் நாள் தவறாமல் சூரிய  புடத்தில் வைப்பதுவும் வாரத்திற்கு ஒரு முறை பானை மாற்றுவதுவும் முக்கியமாய் கவனித்தல் வேண்டும் இதன்படி மாதம் ஒருமுறை அன்னம் சமைத்து கலந்துகொண்டு வரவேண்டும் இப்படி செய்துகொண்டு வருங்காலத்தில் மூன்று மாதத்திற்கு மேல் அந்த காடியை உபயோகித்து வரலாம் எவ்வளவு காடி எடுத்து கொள்ளுகின்றோமோ அவ்வளவு நீரை அதில் கலந்துவிட வேண்டும் இப்படி கலந்து வருவதால் எத்தனை ஆயிரம் பேருக்கு நாம் கொடுத்தாலும் காடி குறைந்துவிடாது ஆறு மாதத்திற்கு பின் காடியில் அதிக புளிப்பு ஏறிவிடும் ஆகையால் 4 நாளைக்கு ஒரு முறை பானை மாற்றுதல் வேண்டும் மழைக்காலங்களில் சூரிய புடத்தில் வைக்க இயலாத காரணத்தால் காடியில் பூசணம் பிடிக்காதபடி தடுக்க சமையல் செய்த பிறகு அடுப்பில் உள்ள நெருப்பை எடுத்து விட்டு அடுப்பின் மேல் காடியை வைத்து விட வேண்டும் இப்படி செய்ய காடி கெடாமல் இருக்கும் காடிக்கு அதிக நாள் ஏற ஏற புளிப்பு அதிகரிக்கும்புளிப்பு அதிகரிக்க அதிகரிக்க கொடுக்க வேண்டிய அளவை குறைத்தல் வேண்டும் ஆறு மாதத்திற்கு மேற்பட்ட காடியானது பௌர்ணமி தினத்தில் இரவில் ஒருவித சப்தத்தை உண்டு பண்ணும் .

காடியால் தீரும் வியாதி:

வயிற்று வலி, நீர் கடுப்பு ,மார்வலி, உஷ்ண பேதி ,அஜீரண பேதி ,விஷ பேதி முதலிய வியாதிகள் நீங்கும் சரீரத்திலுள்ள வெக்கையை போக்கும் .

காடி நீர் என்பது நம் நாட்டில் பழமையான ஒரு பெரிய மருந்து .

 கடையில் விற்கும் காடியானது சர்க்கரையை வாணலில் போட்டு வறுக்க வறுக்க ஒருவித கருநிறமாக மாறிவிடும் அப்பொழுது அஸெட்டிக் ஆசிட் வேண்டிய அளவிற்கு சேர்த்து நீரைக் கொட்டி வடிகட்டி புட்டியில் பதனம் பண்ணி  விற்கப்படுவதே காடி ஆகும் இந்த காடியும் புளிப்புள்ளதாக காணப்படும்.இந்த காடியை வாங்கி ஊர்காய்களுக்கும் மற்றும் மருந்தின் பிரயோகங்களுக்கும் உபயோகப்படுத்தி  வருகின்றார்கள் எனவே கடையில் விற்கும் காடியானது முன்னோர்கள் சொல்லி வைத்த காடி அன்று ஆனால் இது உடலுக்கு பெரும் தீங்கை விலைவிக்கும் என்று கூறப்படுகிறது.