Monday, October 29, 2018

தும்பை மூலிகை❄

தும்பை:-
தும்பை இலை சாற்றினால் பாதரசத்தை சுத்திசெய்யலாம். ரசமணிகளை தும்பை இலையை அரைத்து அதனுள் வைத்து புடம் போட்டால் யட்சனிகளை வசியப்படுத்தும் வல்லமை பெறும். தும்பை வேருக்கு முறைப்படி காப்பு கட்டி எடுத்த வேர் மஹா வசியமாகும்.
தும்பை இலைச் சாறு 10 முதல் 15 மிலி வரை தினமும் காலையில் மட்டும் 15 நாட்கள் குடித்து வர அலர்ஜி தீரும்.
தும்பைச் செடியை, இலை, பூ நன்கு கொதிக்க வைத்த தண்ணீரில் இட்டு வேது பிடிக்க ஒற்றைத் தலைவலி குணமாகும்.
தும்பைப்பூவைத் துணியில் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து, 10 மி.லி அளவு, அதே அளவு தேனுடன் கலந்து காலையில் குடித்துவர, நாக்கு வறட்சி,தாகம், அசதி போன்றவை தீரும்.
தும்பை இலைகளை அரைத்து 5 நாட்கள் வரை தொடர்ந்து, உடலில் பற்றிட கொப்புளம், நமைச்சல், சிரங்குகள் குணமாகும்.
அதிகாலையில் தும்பைப் பூவைப் பசும்பால் விட்டு அரைத்து 100மி.லி அளவு குடித்து வர  விக்கல் சரியாகும்.
தும்பைப் பூவையும், ஊமத்தம் பூவையும் அரைத்து நெய்யில் கலந்து காய்ச்சி வடிகட்டி  காதிற்குச் சொட்டு மருந்தாக விட்டு வர  காதுப் புண், காதில் சீழ் வடிதல், காது இரைச்சல் குணமாகும்.

தும்பை இலை, உத்தாமணி இலை சம அளவு எடுத்து அரைத்து நெல்லிக்காய் அளவு பசும்பாலில் குடித்து வர மாத விலக்கினால் ஏற்படும் பிரச்சனை நீங்கும்.
தும்பைப் பூவை வெள்ளாட்டுப் பாலில் கலந்து காயச்சி வடிகட்டிப் பாலைமட்டும் காலையில்  வெறும் வயிற்றில் தொடர்ந்து நாற்பது நாள் குடித்து  வரக் கர்ப்பப்பை சம்பந்தமான நோய்கள் குணமாகும்.
தும்பைப் பூவையும், ஒருமிளகையும் அரைத்து நெற்றியில் பற்றிட தலைவலி, தலைபாரம், நீர்க்கோர்வை நீங்கும்.
தும்பை இலையையும், மிளகையும் அரைத்து, மேலே  பூச விஷம் இறங்கும்.
தும்பை இலையையும் தேள் கொடுக்கு இலையையும் அரைத்துத் சாப்பிட  தேள் கடி விசம் நீங்கும்.
தும்பைப் பூவையும், ஆடுதீண்டாப் பாலை விதையையும் அரைத்து நெல்லிகாய் காலை, மாலை  சாப்பிட்டு , பசும் பால் குடித்து வர   ஆண்மை அதிகரிக்கும்.
தும்பைச் சாறு, முசுமுசுக்கைச் சாறு, வல்லாரைச் சாறு இவைகளில் சீரகத்தைத் தனித்தனியே ஊறவைத்து உலர்த்திச் சூரணம் செய்து 10 கிராம் கொடுத்து வர இதயப் பலவீனம் நீங்கும். மஞ்சள் காமாலை குணமாகும். பித்த மயக்கம், வாந்தி சரியாகும். நினைவாற்றல் அதிகரிக்கும்.
தும்பைச்சாற்றைக் கண், காது, மூக்கில் நசியமாய்ப் பயன்படுத்தி சாப்பிட்டு கடிவாயிலும் பூசப் பாம்புக் கடி விஷம் இறங்கும்.
கவிழ்தும்பைச் சாற்றைப் பசும் பாலில் கலந்து குடித்து வர இரத்தக் கழிச்சல், சீதக் கழிச்சல், மூலக் கடுப்பு குணமாகும்.
தும்பை இலையை அரைத்து சாப்பிட்டு  , உடலில்  பூச செய்யான் கடி குணமாகும். அதனால் ஏற்பட்ட தடிப்பும், அரிப்பும் மறையும்.
தும்பை இலை, அவுரி இலை, மிளகு ஆகிய இவற்றைச்சேர்த்து அரைத்து சாப்பிட்டு உடல் முழுவதும் பூசிவர எந்தக் கடிவிஷமும் குணமாகும்.
தும்பைச்சாறு 500 மி.லி. தேங்காய்எண்ணெய் 500 மி.லி.இரண்டையும் கலந்து காய்ச்சி பூசி வர  வெட்டுக் காயம், ஆறாத புண்கள் ஆறும்.

தும்பை வேர், தைவேளை இலை, வெங்காயம் மூன்றையும் அரைத்து வைத்துக் கட்டப் பவுத்திரம் குணமாகும். தும்பைச் சாற்றுடன் சிறிது சோற்றுப்பு கலந்து கரைத்து மேலுக்குப் பூசி உலரவிட்டுக் குளித்துவரச் சிரங்கு, சொறி, நமச்சல் குணமாகும். தும்பைச் செடியை அரைத்துத் தேமல் உள்ள இடத்தில் தொடர்ந்து பூசிவரத் தேமல் குணமாகும். தும்பைச் சாறும், வெங்காயச்சாறும் கலந்து ஐந்து நாள் காலை, மாலை  குடித்து வர  ஆசனப் புண் குணமாகும்.
தும்பைச் சாறும், விளக்கெண்ணெய்யும் கலந்து குடித்து வர  வயிற்றில் உள்ள கிருமிகள் வெளியேறும்.
தும்பைப்பூவை நீரில்  கொதிக்க வைத்து, அதன் சாறை100  மி.லி அளவு காலை, மாலை   குடித்து வர  சளி, இருமல் சரியாகும்.

Thursday, October 18, 2018

மூலிகை ஆவி பிடித்தால்

பலஇடங்களுக்குபயணம்செய்தும்
பலதரபட்டதண்ணில்குளித்தும்
நீஇருந்தியும்பின் இதனால்ஏற்பட்ட
காச்சல் .தலைபாறம் .சலதேஷம் .
சளி . இருமல்இவைகளுக்குஉடண்தீர்வுக்கு
மூலிகைஆவிபிடித்தால்உடனேநிவர்த்தி
கிடைக்கும்முறை1/2தண்ணிரைநல்லசூடக்கிகொள்ளவம்எல்லமூலிகையும்
ஒருகைபிடிஅளவு
ஆடாதேடா  .நொச்சி- நிலவோம்புமூலிகை
நல்லவேளை.    முடக்கத்தான்
சிறிதுநல்லமிளகு  .சிறிதுமஞ்சள்பொடி
மூலிகையைசிறிதாகவெட்டிகொதித்த
தண்ணிரில்பேட்டுஅதற்க்கு குடமஞ்சள்பொடி நல்லமிளகும்சேர்த்து
நன்குகொதித்தபின்இரக்கிஆவிவெளியேபேகதுதலையைமுடிஆவியை
சுவாசிக்கவேண்டும் சிறிதுநேரம்
பின்புபாருங்கள்உங்களுடைய
பிணிகள்தீரும்சிறிதுநோரத்தில்சரிய
பயன்படுத்திபலன்கொள்ளுங்கள்
பின்புமூலிகைதழையைசிறிதுதுணியில்கட்டிமுதுகிலும் நெஞ்சுபகுதியில்
ஒத்தடம்கொடுக்கமார்பு சளிகரைந்துவிடும் இது அனுபவமுறை

உலர் திராட்சை செய்முறை

உலர் திராட்சை செய்முறை:

பன்னீர் திராட்சை - 1கிலோ
நெய் (அ) எண்ணை - 4 சொட்டு

நல்ல இனிப்பான பன்னீர் திராட்சையை சிறிது உப்பு மஞ்சள் (அ) வினிகர் சேர்த்து 4 - 5 முறை சுத்தம் செய்யவும்.

திராட்சை முழ்கும் அளவு தண்ணீர் எடுத்து அதில் சிறிது நெய் விட்டு வேக வைக்கவும், திராட்சையின் தோலில் சுருக்கம் வந்ததும் இறக்கி 5 நிமிடம் ஒரு தட்டைக் கொண்டு மூடி விடவும்.

பிறகு திராட்சை மட்டும் எடுத்து நல்ல வெயிலில் 5 - 6 நாள் பரப்பி காயவிடவும்.

நல்ல சுவயான உலர் திராட்சை தயார். ஒரு கிலோ திராட்சைக்கு கால் கிலோ உலர் திராட்சை கிடைக்கும்.

கடைகளில் கிடைப்பது ரசாயனம் சேர்த்தது உடலுக்கு மிகவும் கெடுதல்ங்க.

அனைவரும் வீட்டில் செய்து பயன் பெறவும்.

இனிப்பு நெல்லி

இனிப்பு நெல்லி:

நெல்லிக்காய் - 1/4 கிலோ
வெல்லம்(அ)நா.சர்க்கரை - 1/2 கிலோ
பனஞ் சர்க்கரை - சிறிது

நன்றாக முற்றிய நெல்லிக்காய்களை எடுத்து நல்லா கழுவி ஆவியில் ஐந்து நிமிடம் கேவ வைக்கவும்.

அதிலுள்ள விதையை எடுத்து விட்டு உதிர்க்கவும். ஈரம் போக நில லில் உலர்த்தி நா. சர்க்கரை சேர்த்து இரவு முழுதும் ஊற விடவும்.

மறுநாள் காலை நெல்லியை மட்டும் எடுத்து நல்ல வெயிலில் காயவைக்கவும். திரும்பவும் மாலையில் அதே நா. சர்க்கரை கலவையில் ஊற விடவும். இதுபோல ஒரு 5 நாள் செய்யவும்

ஐந்தாம் நாள் மாலையில் திரும்பவும் நா. சர்க்கரையில் போடாமல்.சிறிது பனஞ் சர்க்கரையை பொடித்து நெல்லிக்காயின் மேல் தூவவும். ஒன்றுடன் ஒன்று ஒட்டாதுங்க.

மீதமான நா. சர்க்கரைப் பாகை 2 ஸ்பூன் எடுத்து எலுமிச்சை சாறு,சிறிது புதினா, தண்ணீர் சேர்த்து பருக அருமையான சத்தான பானம் தயார். இல்லையெனில் இந்த பாகை அப்படியே தினமும் 1 ஸ்பூன் சாப்பிடலாம்ங்க.

இதே போல உப்பிலும் செய்யலாம் - நெல்லி வற்றல்

Wednesday, October 17, 2018

Magical pain reliefer

Magical Pain Reliefer:

கருஞ்சீரகம் - 1 கப்
ஓமம் -3/4 கப்
சீரகம் - 1/2 கப்
தனியா - 1/2 கப்
வெந்தயம் - 1/4 cup

இவைகளை தனி தனியாக வறுத்து ஒன்றாக கலந்து பொடிக்கவும். ஒரு டிஸ்பூன் பொடி எடுத்து 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து 1 டம்ளர் ஆனவுடன் வடித்து தேவைப்பட்டால் பனஞ் சர்க்கரை கலந்து பருகலாம்.கை,கால்,மூட்டு,முதுகு, joints போன்ற வலி எல்லாம் பறந்துப் போகும் தொடர்ந்து பயன்படுத்தவும்.reliefer

Sunday, October 14, 2018

அஷ்டகர்ம மூலிகைகள்


அஷ்டகர்ம மூலிகைகள்

அஷ்டகர்ம மூலிகைகள் அறுபத்தி நான்கு :


பண்டைய காலத்தில் வாழ்ந்து பல அற்புதங்களை செய்த நம் தமிழக சித்தர்கள் மூலிகைகளை கொண்டே மந்திர உருவேற்றி பல காரியங்களில் வெற்றியடைந்தனர். அதன்படி அவர்கள் பயன்படுத்திய மூலிகைகள் அஷ்டகர்மங்கள் ( எட்டு சித்திகள் ) செய்ய ஒரு சித்திக்கு 8 மூலிகை என அஷ்ட சித்திக்கு 64 மூலிகைகள் ஆகும். அஷ்டகர்மம் என்பது 1. ஆகர்ஷனம், 2. உச்சாடனம், 3. தம்பனம், 4. பேதனம், 5. மாரணம், 6. மோகனம், 7. வசியம், 8. வித்வேஷனம் ஆகும். இந்த அஷ்ட கர்ம செயல்களை பற்றி விரிவாக காணலாம்.

1. ஆகர்ஷனம் : நமக்கு தேவையானதை இருக்கும் இடத்திலிருந்து நாம் இருக்கும் இடத்திற்கே வரவழைக்கும் வித்தையாகும். இதற்கு உதவும் மூலிகைகள் 1. வேளை, 2. உள்ளொட்டி, 3. புறவொட்டி, 4.சிறு முன்னை, 5. குப்பைமேனி, 6. அழுகண்ணி, 7. சிறியாநங்கை, 8. எருக்கு என எட்டு மூலிகைகளாகும். இதில்
மிருகங்களை அழைப்பதற்கு - வேளை, குப்பைமேனி.
பெண்களை அழப்பதற்கு - உள்ளொட்டி, அழுகண்ணி.
அரசர், பிரபுக்ளை அழைப்பதற்கு - சிறுமுன்னை.
துர்தேவதைகளை அழைப்பதற்கு - புறவொட்டி.
தேவதைகளை அழைப்பதற்கு - எருக்கு.
அனைத்து அழைப்பிற்கும் - சிறியாநங்கை.


2. உச்சாடனம் : பேய், பிசாசு, கெட்ட ஆவிகள், நோய்கள் தீமைகளை விரட்டியடித்தல். இதற்கு பயன்படும் மூலிகைகள் 1. பேய் மிரட்டி, 2. மான் செவிகள்ளி, 3. தேள்கொடுக்கி, 4. கொட்டைகரந்தை, 5. வெள்ளை கண்டங்கத்திரி, 6. மருதோன்றி, 7. பிரமதண்டு, 8. புல்லுருவி ஆகும். இதில்
மிருகங்களை விரட்ட - பேய்மிரட்டி.
எதிரிகளை விரட்ட - மான்செவிகள்ளி.
உடலில் ஏறிய விஷங்களை விரட்ட - தேள்கொடுக்கி.
நீர்வாழ் உயிரனங்களை விரட்ட - கொட்டைகரந்தை.
கால்நடைகளை விரட்ட - வெள்ளை கண்டங்கத்தரி.
பூத பைசாசங்களை விரட்ட - மருதோன்றி, புல்லுருவி
பிறர் நமக்கு செய்யும் தீமகளை விரட்ட - பிரமதண்டு.


3. பேதனம் : ஒன்றை மற்றொன்றாக மாற்றுதல், அதாவது ஒரு விஷயத்தை நினைத்து நம்மிடம் வருபவரை அந்த நினைப்பை வேறுபட்டு போகும்படி செய்தல். இதற்கு பயன்படும் மூலிகைகள் 1. வட்டதுத்தி, 2. செம்பசளை, 3. மாவிலங்கு, 4. பாதிரி, 5. கோழியாவரை, 6. சீந்தில்கொடி, 7. புடலங்கொடி, 8. ஆகாயதாமரை ஆகும்.
நெருப்பின் உக்கிரத்தை பேதிக்க - வட்டதுத்தி,
மனிதனின் எண்ணத்தை பேதிக்க - செம்பசளை,
பூத, பிசாசுகளை பேதிக்க - மாவிலங்கு, பாதிரி,
துர்தேவதைகளை பேதிக்க - கோழியாவரை,
எதிரிகளை பேதிக்க - சீந்தில்கொடி,
பெண்களை பேதிக்க - புடலங்கொடி,
வியாதிகளை பேதிக்க - ஆகாயதாமரை.

4. மாரணம் : கொல்வது அல்லது மாற்றுவது. உலோகங்களை அதன் தன்மையில் இருந்து மாற்றுவது. எதிரிகளுக்கு நோயை உண்டாக்கி கொல்வது. இதற்கு பயன்படும் மூலிகைகள் 1. நச்சுப்புல், 2. நிர்விஷம், 3.சித்திரமூலம், 4. அம்மன் பச்சரிசி, 5. கார்த்திகை கிழங்கு, 6. மருதோன்றி, 7. கருஞ்சூரி, 8. நாவி ஆகும்.
மனிதர்களை மாரணம் செய்ய - நச்சுப்புல், நிர்விஷம்,
வியாதிகளை மாரணம் செய்ய - சித்திரமூலம், கருஞ்சூரை,
கண்ணாடிகளை மாற்ற - அம்மன் பச்சரிசி,
மிருகங்களை மாரணம் செய்ய - மருதோன்றி, கார்திகை கிழங்கு.


5. மோகனம் : பிறரை நம்மிடம் மயங்கி இருக்க செய்வது. இதற்கு பயன்படும் மூலிகைகள் 1. பொன்னூமத்தை, 2. கஞ்சா வேர், 3. வெண்ணூமத்தை, 4. கோரைக்கிழங்கு, 5. மருளூமத்தை, 6. ஆலமர விழுது, 7. நன்னாரி, 8. கிராம்பு ஆகும்.
பெண்களை மோகிக்க - பொன்னூமத்தை,
பொதுமக்களை மோகிக்க - கஞ்சா வேர்,
உலகத்தை மோகிக்க - வெண்ணூமத்தை,
விலங்குகளை மோகிக்க - கோரைக்கிழங்கு,
தேவதைகளை மோகிக்க - மருளூமத்தை,
அரசர்களை மோகிக்க - ஆலம்விழுது,
மனிதர்களை மோகிக்க - கிராம்பு,
எல்லாவற்றையும் மோகிக்க - நன்னாரி.


6. வசியம் : எல்லாவற்றையும் நம்மிடம் விருப்பமாகவும் இஷ்டமாயும் இருக்க வைத்தல். இதற்கு பயன்படு்ம் மூலிகைகள் 1. சீதேவிச் செங்கழுநீர், 2. நிலவூமத்தை, 3. வெள்ளை விஷ்ணுகிரந்தி, 4. கருஞ்செம்பை, 5. வெள்ளை குன்றி மணி, 6. பொன்ணாங்கன்னி, 7. செந்நாயுருவி, 8. வெள்ளெருக்கு ஆகும்.

இராஜ வசியத்திற்கு - சீதேவி செங்கழுநீர்,
பெண் வசியத்திற்கு - நிலவூமத்தை,
லோக வசியத்திற்கு - வெள்ளெருக்கு,
ஜன வசியத்திற்கு - கருஞ்செம்பை, விஷ்ணுகிராந்தி,
விலங்கு வசியத்திற்கு - வெள்ளை குன்றி மணி,
தேவ வசியத்திற்கு - பொனணாங்கன்னி,
சாபம், வழக்குகள் வசியத்திற்கு - செந்நாயுருவி.


7. வித்துவேஷனம் : பகையை உண்டாக்குதல். இதற்கு பயன்படும் மூலிகைகள். 1. கருங்காக்கனம், 2. வெள்ளை காக்கனம், 3. திருகு கள்ளி, 4. ஆடுதின்னாபாளை, 5. பூனைக்காலி, 6. கீழாநெல்லி, 7. ஏறண்டம், 8. சிற்றாமணக்கு ஆகும்.
அரசர்களுக்குள் பகை உண்டாக்க - கருங்காக்கணம்,
தேவர்களுக்கு - வெள்ளைக்காக்கணம், திருகுகள்ளி,
பூத, பைசாசங்களுக்கு - ஆடுதின்னாபாளை,
பெண்களுக்கு நோய் உண்டாக்க - பூனைக்காலி,
எதிரிகளால் உண்டாகும் ஆபத்தை தடுக்க - கீழாநெல்லி,
உணவை உண்ணாமல் செய்ய - சிற்றாமணக்கு.


8. தம்பனம் : தடுத்து நிறுத்துத்தல், விலங்குகளின் வாயை கட்டுதல். இத

மூங்கில் குருத்து பயன்

உலகில் அதிக நாள் உயிர் வாழும் ஜப்பானிய மக்களின் உணவுகளில் மூங்கில் குருத்து உயர்ந்ததாக  இருக்கிறது என்பதற்காக,மூங்கில் குருத்து பற்றிய உள்வாங்கி உணரபட்ட தரவுகளின் அடிப்படையாக கொண்டு  அன்னூர்,மாட்டுஹள்ளி,கேர்மாளம்,நொக்கனூர்,சாம்ராஜ்நகர்,மைசூர் பகுதியில் இதை பயன்படுத்தும் மக்கள் கூறிய கூற்றுகளில் இருந்தும் என்னால் புரிந்து கொள்ளபட்ட விதத்தில் இதை பதிவிடுகிறேன்.

தீராத வயிற்றுவலி கர்ப்பப்பை கட்டி இடுப்பு வலி மார்புவலி ஆகியவற்றிற்கு மூங்கில் குருத்து பிரதான உணவாகவும் மருந்தாகும் பயன்படுத்துகின்றனர் இங்குள்ள மக்கள் அதுவும் திருமணம் ஆகபோகும் ஆண்களுக்கு இது தான் விசேசமான உணவு உறவுக்காரர்கள் மத்தியில் .....

மூங்கில் குருத்தில் புரதம் மிகையாக இருக்கும் பாஸ்பரஸ் சுண்ணாம்பு சத்து நார்ச்சத்து இரும்பு சத்தும் நிறைய உண்டு என்பதை நவீன அறிவியலும் உறுதி படுத்துகின்றன மேலும்  அதுவும் நீரில் கரையும் விட்டமின் பி3 எனப்படும் நியாசின் இதில் தான்  மிகவும் அதிகம்

நியாசின் குறைபாட்டால் ஏற்படும் நோய்கள்

தோல் வரட்சி
உயிர் சத்து குறைபாடு(ஸ்கர்வி)
தயாமின் குறைபாடு(பெரிபெரி)
எலும்புருக்கி நோய்
மாலைக்கண் நோய் போன்றவவையாகும்  மூங்கில் குருத்தே மிகவும் சிறந்த உணவு மருந்தும்.

கர்ப்பிணி பெண்களுக்கு இதன் குருத்தை தரகூடாது அப்படி கொடுக்கும் பட்சத்தில் நிச்சயமாக கருகலைப்பு நிகழுமாம் .அதற்கு காரணம் இவற்றில் உள்ள நஞ்சு தன்மையுடைய  பென்சாயிக் அமிலமும்,Phytocyane Glycoside தான். பென்சாயிக் அமிலம் நமது DNAஐ சிதைக்கும் பண்பு கொண்டது இந்த அமிலம் தான் புற்றுநோயை உருவாக்கும் முக்கிய காரணியான கார்சினொஜென்ஸை உருவாக்குகிறது. ஐந்து மாதம் கடந்த கர்பிணி பெண்களுக்கு இதை தரலாம் சிறந்த சத்தான உணவு .

மூங்கில் குருத்தை பயன்படுத்தும் போது சுத்தி செய்தே பயன்படுத்த வேண்டும் அதனால் பத்து மணி நேரம் வரை நீரில் ஊரவைத்து  இதை நான்கு முறைக்கு மேல் பிழிந்து சமைக்கும் போது வெள்ளாட்டு பாலில் சமைக்க வேண்டும்.சித்த மருத்துவத்தில் கந்தகத்தை சுத்தம் செய்ய வெள்ளாட்டு பாலை தான் பயன்படுத்துகின்றனர் என்பதை இங்கும் பொருத்தி பார்த்து கொள்ளலாம் வெள்ளாட்டு பாலில் உள்ள அயனிகள் தீங்கான அம்சங்களை நீக்கி விடுகிறது ஆட்டு பால் கிடைக்கவில்லை என்றால் பசுமாட்டு பாலை பயன்படுத்தலாம் .

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு மிகச்சிறந்த உணவு இந்த மூங்கில் குருத்து இவற்றில் மிகையாக உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீராக்குகிறது இவற்றில் இருந்து பெறப்படும் மூங்கில் உப்பு உடலுக்கு வலிமை தரும் விந்துவை அடர்த்தியாக்கும் குறிப்பாக இதில் தான் சிலிகா டை ஆக்சைடு 96.9% உள்ளன சிலிகா தான் மிக மிக உயர்ந்த மருந்து சித்த மருத்துவத்தில் மூளை தண்டுவடத்தில் உள்ள கழிவுகளை நீக்கி மருந்தாக செயல்படும் உள்ளுறுப்புகளில் உள்ள கழிவுகளை நீக்கி ஊட்டமாக்குவதில் சிலிகா தான் முதன்மையானது .

உடல் குறைப்பில் இது பெரும் பங்கு வகிக்கும் இதை சாப்பிட்டதும் ஓரிரு நாளில் இரண்டு கிலோ வரை உடலின் எடை குறைந்தது எனக்கு இதையும் கவனத்தில் கொள்வோம் .

நீண்டகால தாவரமான மூங்கில் சூரிய ஒளியை பிரதானமாக கொண்டு வளருகிறது பூமியின் உள்ள அனைத்து விதமான உலோக அலோக உப்புகளை அயனியாக்கி கிரகித்து வைத்துள்ளது அதனாலேயே சுமார் 150 வருடம் வரை உயிர் வாழும் யானைகளின் பிரதான விருப்ப உணவு மூங்கில்.

மூங்கில் குருத்தை உணவாக பயன்படுத்தும் முறை;

மூங்கில் குருத்தை நன்றாக கழுவி பொடி பொடியாக துருவி கொண்டு அதனை நீரில் ஊறவைத்து இரண்டு மணி நேரம் கழித்து பிழிந்து தண்ணீர் மாற்றி மூன்று முறை செய்து இதனை சுத்திகரித்தே பயன்படுத்த வேண்டும் . இவற்றிற்கு தண்ணீருக்கு பதிலாக வெள்ளாட்டு பால் சிறந்தது அல்லது பசுமாட்டு பாலை பயன்படுத்தி சமைக்க வேண்டும் அவரை பருப்பை அவசியம் பயன்படுத்தி சமைக்க வேண்டுமாம் மசாலா சேர்க்கப்பட்ட இதன் சுவை மிகவும் அபாரமாக இருக்கும் .

இருளர் இன மக்கள் வசிக்கும் பகுதிக்கு போகும் போது இதை சமைத்து தர சொல்லி சாப்பிட்டு பாருங்கள் உலக தரம் வாய்ந்த உணவும் சுவையும் இதுவாக தான் இருக்க கூடும் .


Saturday, October 13, 2018

மூலிகைக் குளியல் பொடி

மூலிகைக் குளியல் பொடி:

பச்சைப் பயறு - கால் கிலோ
அதிமதுரம்
கஸ்தூரி மஞ்சள்
பூலாங்கிழங்கு
ரோஜா இதழ்
ஆவாரம் பூ
கோரைக்கிழங்கு
கார்போக அரிசி
அரஞ்சு தோல்
வெட்டி வேர்
நன்னாரி வேர்
கடுக்காய் தோல்
இந்து உப்பு
வேப்பம் விதை
படிகாரத்தூள் இவை எல்லாம் தலா 25 கி
முல்தானி மட்டி- 50 கி
கத்தாழை பொடி - 100 கி
வசம்பு - 10 கி

இவை எல்லாவற்றையும் நன்றாக காய வைத்து அரைத்துக் கொள்ளவும்.

Thursday, October 11, 2018

குங்குமம் செய்முரை

குங்குமம் :

*குண்டு மஞ்சள் _ 100 கி(பொடி) (அ) பசு மஞ்சள் _வேக வைத்து துண்டுகள் போடவும்.

வெங்காரம் - 10 கி(பொடி)
படிகாரம் - 10 கி(பொடி)
எலுமிச்சை - 5 (அ) 6
நல்லெண்ணை (அ) நெய் - சிறிதளவு
பச்சை கற்பூரம் - தேவைப்பட்டால் சிறிதளவு

* ஒரு சுத்தமான மண் சட்டியில் எலுமிச்சையை சாறு பிழிந்து அதில் வெங்காரம், படிகாரத்தையும் நன்றாக கலந்து மஞ்சளையும் சேர்க்கவும்.

* இரண்டு பகல், இரண்டு இரவு என ஊற விடவும் அவ்வப்போது மரகரண்டி கொண்டு கலந்து விடவும்.

* பிறகு வெயிலில் தொடர்ந்து ஒரு 18 நாட்கள் நன்றாக காய வைத்து பொடிக்கவும்.

* குங்குமமத்தில் சிறிது நெய்யும், பச்சை கற்பூரத்தையும் சேர்த்து கைகலால் கலக்கவும்.இப்போது குங்குமம் தயார்.

* சிறிதளவு குங்குமத்தை எடுத்து உள்ளங்கையில் வைத்து அழுத்தி தேய்த்தால் மஞ்சள் நிறம் நம் கைகளில் படியும், இதுவே தூய்மையான குங்குமம்.