தும்பை:-
தும்பை இலை சாற்றினால் பாதரசத்தை சுத்திசெய்யலாம். ரசமணிகளை தும்பை இலையை அரைத்து அதனுள் வைத்து புடம் போட்டால் யட்சனிகளை வசியப்படுத்தும் வல்லமை பெறும். தும்பை வேருக்கு முறைப்படி காப்பு கட்டி எடுத்த வேர் மஹா வசியமாகும்.
தும்பை இலைச் சாறு 10 முதல் 15 மிலி வரை தினமும் காலையில் மட்டும் 15 நாட்கள் குடித்து வர அலர்ஜி தீரும்.
தும்பைச் செடியை, இலை, பூ நன்கு கொதிக்க வைத்த தண்ணீரில் இட்டு வேது பிடிக்க ஒற்றைத் தலைவலி குணமாகும்.
தும்பைப்பூவைத் துணியில் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து, 10 மி.லி அளவு, அதே அளவு தேனுடன் கலந்து காலையில் குடித்துவர, நாக்கு வறட்சி,தாகம், அசதி போன்றவை தீரும்.
தும்பை இலைகளை அரைத்து 5 நாட்கள் வரை தொடர்ந்து, உடலில் பற்றிட கொப்புளம், நமைச்சல், சிரங்குகள் குணமாகும்.
அதிகாலையில் தும்பைப் பூவைப் பசும்பால் விட்டு அரைத்து 100மி.லி அளவு குடித்து வர விக்கல் சரியாகும்.
தும்பைப் பூவையும், ஊமத்தம் பூவையும் அரைத்து நெய்யில் கலந்து காய்ச்சி வடிகட்டி காதிற்குச் சொட்டு மருந்தாக விட்டு வர காதுப் புண், காதில் சீழ் வடிதல், காது இரைச்சல் குணமாகும்.
தும்பை இலை, உத்தாமணி இலை சம அளவு எடுத்து அரைத்து நெல்லிக்காய் அளவு பசும்பாலில் குடித்து வர மாத விலக்கினால் ஏற்படும் பிரச்சனை நீங்கும்.
தும்பைப் பூவை வெள்ளாட்டுப் பாலில் கலந்து காயச்சி வடிகட்டிப் பாலைமட்டும் காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து நாற்பது நாள் குடித்து வரக் கர்ப்பப்பை சம்பந்தமான நோய்கள் குணமாகும்.
தும்பைப் பூவையும், ஒருமிளகையும் அரைத்து நெற்றியில் பற்றிட தலைவலி, தலைபாரம், நீர்க்கோர்வை நீங்கும்.
தும்பை இலையையும், மிளகையும் அரைத்து, மேலே பூச விஷம் இறங்கும்.
தும்பை இலையையும் தேள் கொடுக்கு இலையையும் அரைத்துத் சாப்பிட தேள் கடி விசம் நீங்கும்.
தும்பைப் பூவையும், ஆடுதீண்டாப் பாலை விதையையும் அரைத்து நெல்லிகாய் காலை, மாலை சாப்பிட்டு , பசும் பால் குடித்து வர ஆண்மை அதிகரிக்கும்.
தும்பைச் சாறு, முசுமுசுக்கைச் சாறு, வல்லாரைச் சாறு இவைகளில் சீரகத்தைத் தனித்தனியே ஊறவைத்து உலர்த்திச் சூரணம் செய்து 10 கிராம் கொடுத்து வர இதயப் பலவீனம் நீங்கும். மஞ்சள் காமாலை குணமாகும். பித்த மயக்கம், வாந்தி சரியாகும். நினைவாற்றல் அதிகரிக்கும்.
தும்பைச்சாற்றைக் கண், காது, மூக்கில் நசியமாய்ப் பயன்படுத்தி சாப்பிட்டு கடிவாயிலும் பூசப் பாம்புக் கடி விஷம் இறங்கும்.
கவிழ்தும்பைச் சாற்றைப் பசும் பாலில் கலந்து குடித்து வர இரத்தக் கழிச்சல், சீதக் கழிச்சல், மூலக் கடுப்பு குணமாகும்.
தும்பை இலையை அரைத்து சாப்பிட்டு , உடலில் பூச செய்யான் கடி குணமாகும். அதனால் ஏற்பட்ட தடிப்பும், அரிப்பும் மறையும்.
தும்பை இலை, அவுரி இலை, மிளகு ஆகிய இவற்றைச்சேர்த்து அரைத்து சாப்பிட்டு உடல் முழுவதும் பூசிவர எந்தக் கடிவிஷமும் குணமாகும்.
தும்பைச்சாறு 500 மி.லி. தேங்காய்எண்ணெய் 500 மி.லி.இரண்டையும் கலந்து காய்ச்சி பூசி வர வெட்டுக் காயம், ஆறாத புண்கள் ஆறும்.
தும்பை வேர், தைவேளை இலை, வெங்காயம் மூன்றையும் அரைத்து வைத்துக் கட்டப் பவுத்திரம் குணமாகும். தும்பைச் சாற்றுடன் சிறிது சோற்றுப்பு கலந்து கரைத்து மேலுக்குப் பூசி உலரவிட்டுக் குளித்துவரச் சிரங்கு, சொறி, நமச்சல் குணமாகும். தும்பைச் செடியை அரைத்துத் தேமல் உள்ள இடத்தில் தொடர்ந்து பூசிவரத் தேமல் குணமாகும். தும்பைச் சாறும், வெங்காயச்சாறும் கலந்து ஐந்து நாள் காலை, மாலை குடித்து வர ஆசனப் புண் குணமாகும்.
தும்பைச் சாறும், விளக்கெண்ணெய்யும் கலந்து குடித்து வர வயிற்றில் உள்ள கிருமிகள் வெளியேறும்.
தும்பைப்பூவை நீரில் கொதிக்க வைத்து, அதன் சாறை100 மி.லி அளவு காலை, மாலை குடித்து வர சளி, இருமல் சரியாகும்.
தும்பை இலை சாற்றினால் பாதரசத்தை சுத்திசெய்யலாம். ரசமணிகளை தும்பை இலையை அரைத்து அதனுள் வைத்து புடம் போட்டால் யட்சனிகளை வசியப்படுத்தும் வல்லமை பெறும். தும்பை வேருக்கு முறைப்படி காப்பு கட்டி எடுத்த வேர் மஹா வசியமாகும்.
தும்பை இலைச் சாறு 10 முதல் 15 மிலி வரை தினமும் காலையில் மட்டும் 15 நாட்கள் குடித்து வர அலர்ஜி தீரும்.
தும்பைச் செடியை, இலை, பூ நன்கு கொதிக்க வைத்த தண்ணீரில் இட்டு வேது பிடிக்க ஒற்றைத் தலைவலி குணமாகும்.
தும்பைப்பூவைத் துணியில் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து, 10 மி.லி அளவு, அதே அளவு தேனுடன் கலந்து காலையில் குடித்துவர, நாக்கு வறட்சி,தாகம், அசதி போன்றவை தீரும்.
தும்பை இலைகளை அரைத்து 5 நாட்கள் வரை தொடர்ந்து, உடலில் பற்றிட கொப்புளம், நமைச்சல், சிரங்குகள் குணமாகும்.
அதிகாலையில் தும்பைப் பூவைப் பசும்பால் விட்டு அரைத்து 100மி.லி அளவு குடித்து வர விக்கல் சரியாகும்.
தும்பைப் பூவையும், ஊமத்தம் பூவையும் அரைத்து நெய்யில் கலந்து காய்ச்சி வடிகட்டி காதிற்குச் சொட்டு மருந்தாக விட்டு வர காதுப் புண், காதில் சீழ் வடிதல், காது இரைச்சல் குணமாகும்.
தும்பை இலை, உத்தாமணி இலை சம அளவு எடுத்து அரைத்து நெல்லிக்காய் அளவு பசும்பாலில் குடித்து வர மாத விலக்கினால் ஏற்படும் பிரச்சனை நீங்கும்.
தும்பைப் பூவை வெள்ளாட்டுப் பாலில் கலந்து காயச்சி வடிகட்டிப் பாலைமட்டும் காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து நாற்பது நாள் குடித்து வரக் கர்ப்பப்பை சம்பந்தமான நோய்கள் குணமாகும்.
தும்பைப் பூவையும், ஒருமிளகையும் அரைத்து நெற்றியில் பற்றிட தலைவலி, தலைபாரம், நீர்க்கோர்வை நீங்கும்.
தும்பை இலையையும், மிளகையும் அரைத்து, மேலே பூச விஷம் இறங்கும்.
தும்பை இலையையும் தேள் கொடுக்கு இலையையும் அரைத்துத் சாப்பிட தேள் கடி விசம் நீங்கும்.
தும்பைப் பூவையும், ஆடுதீண்டாப் பாலை விதையையும் அரைத்து நெல்லிகாய் காலை, மாலை சாப்பிட்டு , பசும் பால் குடித்து வர ஆண்மை அதிகரிக்கும்.
தும்பைச் சாறு, முசுமுசுக்கைச் சாறு, வல்லாரைச் சாறு இவைகளில் சீரகத்தைத் தனித்தனியே ஊறவைத்து உலர்த்திச் சூரணம் செய்து 10 கிராம் கொடுத்து வர இதயப் பலவீனம் நீங்கும். மஞ்சள் காமாலை குணமாகும். பித்த மயக்கம், வாந்தி சரியாகும். நினைவாற்றல் அதிகரிக்கும்.
தும்பைச்சாற்றைக் கண், காது, மூக்கில் நசியமாய்ப் பயன்படுத்தி சாப்பிட்டு கடிவாயிலும் பூசப் பாம்புக் கடி விஷம் இறங்கும்.
கவிழ்தும்பைச் சாற்றைப் பசும் பாலில் கலந்து குடித்து வர இரத்தக் கழிச்சல், சீதக் கழிச்சல், மூலக் கடுப்பு குணமாகும்.
தும்பை இலையை அரைத்து சாப்பிட்டு , உடலில் பூச செய்யான் கடி குணமாகும். அதனால் ஏற்பட்ட தடிப்பும், அரிப்பும் மறையும்.
தும்பை இலை, அவுரி இலை, மிளகு ஆகிய இவற்றைச்சேர்த்து அரைத்து சாப்பிட்டு உடல் முழுவதும் பூசிவர எந்தக் கடிவிஷமும் குணமாகும்.
தும்பைச்சாறு 500 மி.லி. தேங்காய்எண்ணெய் 500 மி.லி.இரண்டையும் கலந்து காய்ச்சி பூசி வர வெட்டுக் காயம், ஆறாத புண்கள் ஆறும்.
தும்பை வேர், தைவேளை இலை, வெங்காயம் மூன்றையும் அரைத்து வைத்துக் கட்டப் பவுத்திரம் குணமாகும். தும்பைச் சாற்றுடன் சிறிது சோற்றுப்பு கலந்து கரைத்து மேலுக்குப் பூசி உலரவிட்டுக் குளித்துவரச் சிரங்கு, சொறி, நமச்சல் குணமாகும். தும்பைச் செடியை அரைத்துத் தேமல் உள்ள இடத்தில் தொடர்ந்து பூசிவரத் தேமல் குணமாகும். தும்பைச் சாறும், வெங்காயச்சாறும் கலந்து ஐந்து நாள் காலை, மாலை குடித்து வர ஆசனப் புண் குணமாகும்.
தும்பைச் சாறும், விளக்கெண்ணெய்யும் கலந்து குடித்து வர வயிற்றில் உள்ள கிருமிகள் வெளியேறும்.
தும்பைப்பூவை நீரில் கொதிக்க வைத்து, அதன் சாறை100 மி.லி அளவு காலை, மாலை குடித்து வர சளி, இருமல் சரியாகும்.