Saturday, September 29, 2018

கரும்பத்து கரும்படை

கரும்பத்து கரும்படை

கரும்பத்து கரும்படை தொடை இடுக்கு அக்குள் பகுதிகள் பெண்களுக்கு இடுப்பில் பாவாடை கட்டும் தடம் கன்னம் கண்களுக்குக்கீழ் போன்ற பகுதிகளில் வரும் கருமையான படை நீங்கி நலம் பெற
சீமை அகத்திப் பூ   ...........  இருபது கிராம்
மருதாணி இலைகள் அரைத்த விழுது ....ஒரு தேக்கரண்டி
பூண்டு   ..  இரண்டு பற்கள்  .நறுக்கியது
மஞ்சள் தூள் ..... கால் தேக்கரண்டி
செக்கு நல்லெண்ணெய்   ...........  நூறு மில்லி
செக்கு நல்லெண்ணையை சூடேற்றி அதில் ஒவ்வொரு பொருளாகப் போட்டுக் கொதி வந்தபின் அடுத்த பொருளைப் போட்டு மிதமான சூட்டில் நன்கு தைலமாகக் காய்ச்சி இறக்கி வடி கட்டி ஆறவைத்து பாட்டிலில் சேமிக்கவும்

இந்த தைலத்தை பாதிப்பு உள்ள இடங்களில் இரவில் பூசி மறுநாள் காலை சீகைக்காய் கொண்டு கழுவி வர அனைத்து இடங்களிலும் உள்ள கருமபத்து கரும்படை குணமாகும்

புலாஞ்சி

பூலாஞ்சி

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் ஏற்பட்ட புண் ஆறவில்லை என ஆங்கில மருத்துவத்தின் ஆலோசனை படி விரலை எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை. நாட்டு மருத்துவத்தில் விரைவாக ஆறிவிடும். சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு காலில் ஏற்படும் குழிப்புண்களுக்கு மருத்துவரிடம் சென்றால்,சிலநாட்கள் அதற்க்கு மருத்துவம் செய்து பார்த்துது  விட்டு அந்த புண்கள் ஆறவில்லை என்றால், விரலில் புண் இருந்தால் விரலை துண்டித்து விடுவதும்,காலில் இருந்தால் காலை துண்டித்து விடுவதும்,தற்போதைய சூப்பர் ஸ்பெசாலிட்டி ஆஸ்பிட்டல்களின் தனித்திறமை. காலையும், விரலையும் அதோடு காசையும் இழந்தவனுக்குத்தான் தொியும் அதனுடைய வலி. இதற்கு ஒப்பில்லா மருத்துவம் ஒன்று உள்ளது, நண்பருக்கு காலில் ஏற்ப்பட்ட குழிப்புண்னுக்கு டாக்டா்கள், புண் ஏற்பட்ட இடத்தில் விரல் கருப்பாகிவிட்ட காரணத்தினால் விரலை வெட்டிவிட வேண்டுமென்று கூறிவிட்டனா். ஒன்று தோன்றியது மிளகு அளவு உள்ள குழிப்புண்ணையே ஆற்றமுடியாதவார்கள் விரலையோ காலையோ வெட்டியபின் அதனால் ஏற்படும் இரணத்தை இவா்கள் ஆற்றிவிடவா போகிறாா்கள். முடிவில் மரணத்தைதான் தழுவ வேண்டும். இதுதான் நிலை.

பூலா, வெள்ளை பூலா, இருபூலா என்கிற பெயர்களில் அறியப்படுகின்ற பூலாஞ்சி நெடுங்காலம் ஆறாத புண்களை ஆற்றுவதில் இதற்க்கு நிகர் எதுவுமில்லை. சர்க்கரை நோயினால் ஏற்படுகின்ற குழிப்புண்கள், மற்றும் மற்ற பல காரணங்களினால் ஏற்படும் குழிப்புண்களை ஆற்றுவதில் நவீன மருத்துவத்தில் பெரிய சவாலாக உள்ளது. ஆனால் பூலாஞ்சி எந்த விதமான குழிப்புண்ணாக இருந்தாலும் ஆறு வாரங்களில் ஆற்றிவிடும். இத்துடன் ஆயுர்வேத உள்மருந்துகளும் எடுத்துக்கொள்ள வேண்டும்..

ஆவாரம் இலை

ஆவாரம்  இலையை அம்மியில் அல்லது மிக்ஸியில் அரைத்து அதன் விழுதை ஒரு கரண்டியில் இட்டு அதனுடன் சிறிது நல்லெண்ணை விட்டு சிறுதனலில் ஆவாரம் விழுதை வதக்கி அதை சுத்தமான காட்டனில் வைத்து கட்டிவிடவேண்டும். இதுபோல் ஒருநாள்விட்டு ஓருநாள் கட்டிவர குழிப்புண்கள் மாயமாக மறைந்துவிடும். ஆரம்பகட்ட சர்க்கரை நோயாளிகளுக்கு நிச்சயம் பலனளிக்கும். ஆனால் சில நாள்கள் தொடர்ந்து செய்ய வேண்டியிருக்கும்.

உமத்தை இலை

அதில் சரியாகாத பட்சத்தில் ஊமத்தை இலையில் தயாரிக்கப்பட்ட மத்தன் தைலத்தைப் பூசலாம். இதுவும் பலனளிக்கவில்லை என்றால், மேகவிரணக் களிம்பு (Mercury, Calomel, Mercuric Chloride, Cinnabar) என்ற ஒரு களிம்பு உள்ளது. அதைப் பூசுவதன்மூலம் ஆறாத புண்களும் ஆறிவிடும்.

நன்றி: இந்திய அரசி ஆயுஸின் ஆய்வுகள்

.

Monday, September 24, 2018

நறுவிலி(மூக்குச்சளிப்பழம்)

நறுவிலி... மூக்குச்சளிப்பழம் என்றால் பலருக்குத் தெரியும். இனிப்புச் சுவையுடன் காணப்படும் இந்த நறுவிலிப் பழத்தைச் சாப்பிட்டால், நெஞ்சில் கட்டியிருக்கும் கோழையை அகல்வதுடன் இருமல் நீங்கும். ஆண்மைக்குறை உள்ளவர்கள் இந்தப் பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டால் பிரச்னை நீங்கும். அதுமட்டுமல்ல, வயிற்றுப்புழுக்களைக் கொல்லும்; சிறுநீர் வராமல் அவதிப்படுபவர்கள் இந்தப் பழத்தைச் சாப்பிட்டால் அடுத்த சில நிமிடங்களில் சிறுநீர் தானாக வெளிவரும். உடல் சூட்டைத் தணிப்பதுடன் பெண்களைப் பாடாய்ப் படுத்தும் வெள்ளைப்படுதல் பிரச்சினையை சரிசெய்யும். ரத்தம் சுத்திகரிக்கும்; குடலுக்குப் பலம் தரும்; குரல் கம்மல், வயிற்றுக் கடுப்பு நீக்கும். மூட்டு வலி, சிறுநீரகக் கோளாறுகள், மண்ணீரல் வீக்கம் போன்றவற்றைக் குணப்படுத்தும்.

Saturday, September 22, 2018

கோபுரம்தாங்கி

Andrographis. Echioides. 

கோபுரம்தாங்கி. 

Building strong base week என்பது சினிமாவில் வடிவேலின் நகைச்சுவை. ஆனால் உண்மையில் உங்கள் பேஸ் மற்றும் இதர எலும்புகளின் மஜ்ஜையை சரிசெய்து உங்கல்   "உடல்கோபுரத்தை" தாங்கி நிற்கக்கூடிய உங்கள் கால்களை!!   வலுப்படுத்தும் மூலிகைதான் இந்த கோபுரம்தாங்கி. இதன் மருந்துச் செய்முறையை வைத்தியர்கள் ஆலோசனைப்படி செய்யவும்.
___________________________________________
மற்ற மருத்துவகுணங்கள் :

இந்த மூலிகையின் இலைப்பொடியுடன், சம எடை வில்வ இலைப்பொடி,சம எடை பனங்கற்கண்டு சேர்த்து தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் நாற்பது நாளில் உடலில் மாற்றங்கள் நிகழ்வதை உணர முடியும்.
இலைச்சாறு 100 மிலி, நல்லெண்ணெய் 100மிலி கலந்து பதமுற காய்ச்சி வாரம் இருமுறை தலை குளித்துவநதால் முடி உதிர்வு நின்று வளர ஆரம்பிக்கும். கண் குளிர்ந்து பார்வைதிறன் அதிகரிக்கும்.
கோபுரந்தாங்கியின் இலையும் கொட்டைகரந்தையின் இலையும் சம எடை எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரை விட்டு 100மி லிட்டராக காய்ச்சி தினமும் காலை குடித்துவந்தால் உடல் காய கற்பமாகி விடும்.

சிறுநீர் போகும்போது எரிச்சல்,சிறுநீரகத்தில் கற்கள் போன்ற உபாதைகளுக்கு சித்த,ஆயுர்வேதத்தில் மருந்தாக பயன்படுகிறது. உலோகங்களை கரைக்கும் ஆற்றல் கொண்டதால் சித்த மருத்துவத்தில் பஸ்பங்கள் செய்ய பயன்படுத்தப்படுகிறது.
கோபுரந்தாங்கி, சிறுபீளை, நெருஞ்சில், வெள்ளரி விதை ஆகியவற்றை நிழலில் உலர்த்தி, ஒன்றிரண்டாக இடித்துவைத்து ஒரு கைப்பிடியளவு 1லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து, 500 மிலியாக சுண்ட வைத்து வடிகட்டி காலை மாலை உணவுக்கு முன் குடித்து வந்தால் சிறுநீர் நன்கு வெளியேறும். சிறுநீர் எரிச்சல் குறையும்.
கோபுரந்தாங்கி வேரை நிழலில் உலர்த்தி பொடி செய்து கற்கண்டு சேர்த்து காலை, மாலை நெய்யில் சாப்பிடவும்.
                 

கொசு விரட்டி மூலிகை லிக்யுட்

கொசு விரட்டி மூலிகை லிக்யுட்

வேப்பிலை, துளசி தலா 500 கிராம், நொச்சி 700 கிராம், மஞ்சள் 100 கிராம், சாம்பிராணி, குங்குலியம் தலா 150 கிராம், தும்பை, ஆடாதொடா, சிறியாநங்கை தலா 50 கிராம் ஆகியவற்றை காயவைத்து மிக்சியில் போட்டு பொடியாக அரைத்து கொள்ள வேண்டும். சோற்று கற்றாழை ஒரு கிலோ எடுத்து கசப்பு நீங்கும்வரை கழுவ வேண்டும். மூலிகை பொடிகளையும், சோற்று கற்றாழை ஜெல்லையும் 10 லிட்டர் தண்ணீரில் போட்டு, குறைந்தது 6 நாள் முதல் 10 நாள் வரை ஊற வைக்க வேண்டும். பின்னர் அவற்றை குக்கரில் போட்டு மூடி மிதமான தீயில் வைக்க வேண்டும் (வெப்பநிலை 30 முதல் 40 டிகிரி வரை).

குக்கரில் ஆவியை வெளியேற்ற விசில் போடும் இடத்தில், விசிலுக்கு பதிலாக 30 அடி நீள பைப்பை செருக வேண்டும். குக்கரில் இருந்து வெளியேறும் ஆவி, பைப் வழியாக வரும். அந்த பைப்பை தண்ணீர் நிரப்பப்பட்ட அகன்ற பாத்திரத்தில் மூழ்கியவாறு வைக்க வேண்டும்.

பைப் வழியாக வரும் ஆவி குளிர்ந்து தண்ணீரும், எண்ணெயும் கலந்தவாறு சொட்டு சொட்டாக வெளியேறும். பாத்திரத்தின் கீழ் பகுதியில் 4 லிட்டர் தண்ணீரும், மேல் பகுதியில் 3 லிட்டர் எண்ணெயும் மிதக்கும். மேலே மிதக்கும் எண்ணெய் தான் கொசு விரட்டி மூலிகை லிக்யுட். இதற்கு மூன்றரை மணி நேரம் ஆகும். அதற்குள் குக்கரில் உள்ள தண்ணீர் வற்றி விடும். பிறகு தீயை அணைத்து விட வேண்டும். தண்ணீரும், எண்ணெயும் கலந்த பாத்திரத்தில் உள்ள எண்ணெயை மேலோட்டமாக வடித்து எடுத்து கொள்ளலாம் அல்லது ஏர் பில்லர் மூலம் உறிஞ்சி எடுக்கலாம்.

எண்ணெய் வடித்தது போக பாத்திரத்தில் மிஞ்சிய 4 லிட்டர் தண்ணீரை மீண்டும் குக்கரில் ஊற்ற வேண்டும். ஏற்கனவே குக்கரில் மூலிகை பொருட்கள் மசாலா போல் தங்கியிருக்கும். இதில் தண்ணீர் கலந்தவுடன் மீண்டும் மிதமான தீயில் வேக வைத்து, ஆவி வெளியேறி, அதன் மூலம் மேலும் ஒரு லிட்டர் லிக்யுட் கிடைக்கும். இவ்வாறு ஒரு நாளில் ஒரு முறை 4 லிட்டர் கொசுவிரட்டி மூலிகை லிக்யுட் கிடைக்கும். சேகரித்த தைலத்தை பெட் கன்டெய்னர் பாட்டிலில் ஊற்றி பேக்கிங் செய்தால் கொசு விரட்டி மூலிகை லிக்யுட் விற்பனைக்கு தயாராகி விடும். தினசரி 4 லிட்டர் தயாரிக்க, 10 நாளுக்கு முன்பே மூலிகை பொருட்களை தண்ணீரில் ஊறப் போட வேண்டும்.கொசு விரட்டி மூலிகை லிக்யுட்

Friday, September 14, 2018

மந்தாரை மகிமை

** மந்தாரை மூலிகையின் மகிமை **

" திருவாச்சி மரம் அல்லது மந்தாரை மரம், இளமஞ்சள் நிறத்தில் அழகிய மலர்களை உடைய, இளம்பச்சை நிற இலைகளைக் கொண்டது திருவாச்சி"

இன்று மிக அரிதாகக் காணப்படும் ஒரு குறுமரமாகிவிட்டது.
சிருவாச்சி, இருவாச்சி, திரு ஆத்தி, மந்தாரை எனப் பல பெயர்களில் அழைக்கப்படுவது போலவே, திருவாச்சி மரமும் பல விதங்களில் மனிதரின் வியாதிகள் தீர, மருத்துவப் பலன்கள் தருபவை. ஆன்மீகத்திலும், சித்த வைத்தியத்திலும் பெரும் பயனாகும், திருவாச்சி, தமிழ் சங்கீத இசை உலகிலும், வாத்தியங்களுக்கு இன்றியமையாத ஒரு துணையாகவும் விளங்குகிறது.

திருவாச்சி மரம், வல்லாரை இலைகளைப் போன்ற காம்புகளைச் சுற்றி படர்ந்த பசுமையான இலைகளைக் கொண்ட, குறு மரமாகும், திருவாச்சியின் மலர்களில் உள்ள, அதிக அளவு மகரந்தத்தையும், தேனையும் சுவைக்க தேனீக்களும், வண்ணத்துப் பூச்சிகளும் போட்டியிடுவதைக் காண்பதே, கண்களுக்கு விருந்தாக அமையும். இலை, மலர் மற்றும் பட்டை இவற்றின் மூலம், நலம் தரும் மருத்துவ பலன்களைக் கொண்டது, திருவாச்சி.

" ஆன்மீகத்தில்_திருவாச்சி "

திருக்கோவில்களில் தல மரமாக விளங்கும் திருவாச்சி மரங்களின் இலைகள், வில்வ இலைகளைப் போல, சிவபெருமானுக்கு உகந்தவையாகக் கருதப்படுபவை. திருவாச்சி மலர்களும், சிவ பூஜைக்கு உகந்த மலர்களாகின்றன. திருக்கோவில்களில் அகல்களில் விளக்கேற்றும் போது, அகல்களின் கீழே, அந்தந்த நாட்களுக்கு விஷேசமாகக் கருதப்படும் இலைகளைக் கொண்டு, விளக்கேற்றுவர்.
அந்த வகையில், சிவபெருமானுக்கு உகந்த சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமைகளில், திருவாச்சி இலைகளின் மேலே, அகலில் தீபம் ஏற்றி வைத்து வழிபட, நலமாகும். காற்றுவெளியை நலமாக்கும் திருவாச்சி மரத்தை வீடுகளில் வளர்த்து வர, ஆன்மீக வளத்தோடு, ஆரோக்கியமான வாழ்க்கை நலத் தீர்வுகளும் கிடைக்கும்.

" சித்த_மருத்துவத்தில்_மந்தாரை "

உடலுக்கு நலம் தரும் திருவாச்சி மரம், வயிறு தொடர்பான அனைத்து பாதிப்புகளுக்கும் நிவாரணம் தரும், கை கால் வலிகளைப் போக்கும் தன்மை மிக்கது, உணவை உண்ணப் பயன்படும் வாழை இலைகளைப்போல திருவாச்சி இலைகள் பயன் தந்து, மனிதர்களின் உடல் மன வியாதிகளைப் போக்கும் இயல்புடையது, திருவாச்சி இலைகள். இரத்த பேதி, இரத்த வாந்தி, மலச்சிக்கல் போக்கும் ஆற்றல் உள்ளவை.

" திருவாச்சி_குடிநீர் "

திருவாச்சி பூக்களின் மொட்டுக்களை நன்கு அலசி, ஒரு லிட்டர் நீரில் இட்டு கொதிக்க வைத்து, அந்த நீர் கால் லிட்டர் அளவில் சுண்டி வந்ததும், எடுத்து வைத்துக் கொண்டு, காலை மாலை இருவேளை, இருபது அல்லது முப்பது மிலி அளவு பருகி வர, சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் புண்கள் ஆறும். பெண்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் அதீத இரத்தப் போக்கு குணமாகும். இரத்த மூல பாதிப்புகள் விலகும்.

மலச்சிக்கல் :

செவ்வண்ண நிறங்களில் காணப்படும் சில வகை திருவாச்சி மலர்களை, நிழலில் உலர்த்தி பொடியாக்கி, உள்ளங்கை அளவு அந்த பொடியை எடுத்து, அதில் பனங் கற்கண்டு, தேன் கலந்து சாப்பிட, நாள்பட்ட மலச்சிக்கல் பாதிப்புகள் அகன்று, வயிறு சுத்தமாகும்.

" செரிமானக்_கோளாறுகள் "

திருவாச்சி மரப்பட்டையை பொடியாக்கி, நீரில் நன்கு கொதிக்க வைத்து, மூன்றில் ஒரு பங்கு அளவாக நீர் சுண்டியதும், பருகி வர, உணவு செரிமானக் கோளாறால் ஏற்படும் வயிற்றுப் போக்கு பாதிப்புகள் குணமாகும். மேலும், தசையை வலுவாக்கி, இரத்தப் போக்கை நிறுத்தி, உடலை வியாதிகளின் பாதிப்பில் இருந்து தேற்றி, உடலை வலுவாக்கும், இயல்பு மிக்கது.

" சுவாச_பிரச்சனைகள் "

மனிதரின் சுவாசப் பிரச்னைகள், வாத பாதிப்புகளால் ஏற்படும் கைகால் வலிகள், இதய பாதிப்புகள் உள்ளிட்ட பல வகை உடல் நலக் கோளாறுகளுக்கு சிறந்த தீர்வாக, திருவாச்சி இலைகளின் வைத்தியம் விளங்குகிறது. திருவாச்சி இலைகளை துவையலாக செய்து உணவுடன் கலந்து சாப்பிடுவதன் மூலம், மேற்சொன்ன பாதிப்புகள் நீங்கி, உடல் நலம் சீராகப் பெறலாம்.

" உடல்_வியாதிகள்_போக்கும்_திருவாச்சி துவையல் "

தேவை: நன்கு அலசிய திருவாச்சி இலைகள் ஒரு கைப்பிடி அளவு, புளி சிறிதளவு, சிறிய வெங்காயம் நான்கு, பச்சை மிளகாய் நான்கு மற்றும் இந்துப்பு

செய்முறை:

நன்கு அலசிய திருவாச்சி இலைகளை வாணலியில் இட்டு வதக்கி வைத்துக் கொள்ளவும். பிறகு சிறிய வெங்காயம், பச்சை மிளகாயை வாணலியில் இட்டு வதக்கி எடுத்து வைத்துக் கொண்டு, வதக்கிய திருவாச்சி இலைகள், சிறிய வெங்காயம், பச்சை மிளகாய், புளி மற்றும் இந்துப்பை சேர்த்து, சிறிது நீர் விட்டு அம்மியில் வைத்து அரைத்து எடுக்க, கறிவேப்பிலை போன்ற நறுமணத்துடன் அற்புதச் சுவைமிக்க திருவாச்சி துவையல் கிடைக்கும்.

இதை உணவுடன் தொட்டு சாப்பிட ஏற்றதாக அமையும். அனைத்து வகை உணவுக்கும் சிறப்பான இணையாக இருக்கும் திருவாச்சி துவையல், தயிர் சாதத்துடன் கலந்து உண்ண கூடுதல் சிறப்புமிக்க இணையாக அமையும். சுவைமிக்க இந்த துவையலை, அம்மியில் அரைக்க வாய்ப்பு இல்லாதவர்கள், மிக்சியில் அரைக்கலாம், கூடுதல் சுவை தேவைப்படுபவர்கள் தேங்காய் சேர்த்துக் கொள்ளலாம். உடல் வியாதிகள் போக்கி, உடலுக்கு மிக்க வலு சேர்க்கும் திருவாச்சி துவையலை, அனைத்து வயதினரும் சாப்பிட்டு வர, உடல் நலமாகும்.

" அல்சர்_வராமல்_காக்கும்_திருவாச்சி இலை குடிநீர் "

சுத்தம் செய்யப்பட திருவாச்சி இலைகளை அரைத்து சாறெடுத்து, அந்தச் சாற்றுடன் நன்கு இடித்த சிறிதளவு இஞ்சியை சேர்த்து அத்துடன் சிறிது பனங்கற்கண்டை கலந்து, முன்னூறு மிலி தண்ணீரில் சுட வைத்து, சுண்டியபின் இறக்கி ஆற வைக்கவும்.
இந்தக் குடிநீரை தினமும் இருவேளை பருகி வர, காரமான உணவுகள், நேரந்தவறிய உணவுகளால் ஏற்பட்ட வயிற்றுப் புண்கள் யாவும், தீரும். மேலும், வயிற்றுப் புண் வராமலும் காக்கும், உணவு செரிமானத்தை தூண்டி, வயிற்றை சீராக்கும். மேலும், வயிற்றில் உள்ள பூச்சிகளையும் வெளியேற்றும் தன்மை மிக்கது, ஜுரம், கைகால் மூட்டு வலிகளைப் போக்கும்.

" குடல்_வியாதிகள் "

மந்தாரை இலைகள் என அழைக்கப்படும் திருவாச்சி இலைகளில் உணவை உண்டு வர, பசியின்மை பாதிப்பை போக்கும், பல வகை உடல் பாதிப்புகள் விலகும். ஈர்க்குச்சிகளால் இணைக்கப்பட்ட மந்தாரை இலைகளில் சாதத்தை இட்டு, அதில் தயிரை ஊற்றி பிசைந்து, திருவாச்சி துவையலுடன் சாப்பிட்டு வர, அனைத்து வகையான குடல் வியாதிகள் விரைவில் விலகும்.

" வீக்கங்கள்_குறைய "

திருவாச்சி இலைகளின் மேல் விளக்கெண்ணை தடவி, பின் அவற்றை சூடான தணலில் வாட்டி, அடிபட்ட காயம், அடிபட்ட வீக்கங்கள் இவற்றின் மேல் வைத்து கட்டி வர, இரண்டு மூன்று மணி நேரங்களில் அடிபட்ட இடங்களில் உள்ள வீக்கங்கள் குறைந்து, தசைகளில் உள்ள காயங்களில் ஏற்பட்ட வலி நீங்கும்.
சமீப காலங்களில் பிளாஸ்டிக் உபயோகத்திற்கு தடைகள் விதிப்பதன் காரணமாக, சில சுற்றுலா மையங்களில், உணவைக் கட்டிக் கொடுப்பதில், மந்தாரை இலைகள் அதிக அளவில் பயனாகின்றன.

" சரும_வியாதிகள் "

கச்னார் என வடமொழியில் அழைக்கப்படும் இந்த இலைகளின் மருந்துப் பொருட்கள் சரும வியாதிகளைப் போக்கவும், சுவாச பாதிப்புகளால் ஏற்படும் தொண்டை வலி போன்ற கோளாறுகளையும் சரிசெய்பவை.

" கருப்பையை_வளமாக்கும்திருவாச்சி_பூ குடிநீர் "

சிறிது திருவாச்சி மலர்களை முன்னூறு மிலி தண்ணீரில் சுடவைத்து, சுண்டியபின் பனங்கற்கண்டு சேர்த்து பருகி வர, சீரற்ற மாதவிலக்கு முறையாகும், கருப்பை வளமாகும், சளியை வெளியேற்றும், கைகால் மூட்டு வலிகளைப் போக்கும்.

" கண்கள்_குளிர்ச்சி_பெற "
ஒரு பாத்திரத்தில் விளக்கெண்ணை சிறிது ஊற்றி, அதில் திருவாச்சி மலர்களை இட்டு, நன்கு காய்ச்சி ஆறியபின், உறங்கப் போகும் வேளையில், கண்களைச் சுற்றி தடவி வர, கண்களை ஒட்டி இருந்த கருவளையம் நீங்கி விடும், கண்களின் சிவந்த நிறம் மாறி, கண்களின் வெம்மை நீங்கி, குளிர்ச்சி உண்டாகும்.

" தைராய்டு_பாதிப்பு "

பெரும்பான்மை பெண்களை பாதிக்கும் தைராய்டு வியாதிகளை போக்கும் ஆற்றல் மிக்கது, திருவாச்சி மலரின் மொட்டுக்கள், பெண்களின் உடல்நிலை மற்றும் மனநிலையில் பெரும்பாதிப்புகள் ஏற்படுத்தும், தைராய்டு கோளாறுகளை சரிசெய்யும்.

" உடல்_எடையைக்_குறைக்க_உதவும் திருவாச்சி வேர் குடிநீர் "

திருவாச்சி வேரை நீரில் கொதிக்க வைத்து, நன்கு சுண்டியதும் தினமும் பருகி வர, உடல் எடை வெகுவாக குறையும்.

" மிருதங்க_குச்சி "

தமிழில் பழம்பெருமை வாய்ந்த மங்கள வாத்திய இசைக்கருவிகளில் சிறப்பிடம் மிருதங்கம் என அழைக்கப்படும் தவிலுக்கு உண்டு. வலையப்பட்டி சுப்பிரமணியன், ஹரித்வாரமங்கலம் பழனிவேல் போன்ற ஜாம்பவான்கள்,
நாதஸ்வரத்தோடு இணைந்து, தவிலில் மெய்மறக்கச் செய்யும் இன்னிசையை வாசித்து, மக்களுக்கு நல்ல பாரம்பரிய இசையை அளித்து, சாதனைகள் பல படைத்தவர்கள். வலது இடது எனும் இரு புறங்களைக்கொண்ட தவில் வாத்தியத்தில், பொதுவாக வலது புறம் கைகளால் வாசிக்கும் வண்ணமும், இடது புறம் கைகளில் சிறிய குச்சிகளைக் கொண்டு வாசிக்குமாறும் அமைந்திருக்கும்.
இடது புறம் வாசிக்க, தவில் வித்வான்களின் கைகளில் இருக்கும் குச்சி, திருவாச்சி மரத்தில் இருந்து செய்யப்படுவது ஆகும். மிகுந்த கலை நுணுக்கத்துடன் உருவாகும் இந்த தவில் குச்சியை, திருவாச்சி மரத்தில் இருந்து செய்வதற்கு, திருவாச்சி மரத்தின் எளிதில் உடையாத, மிகவும் வலிமையான அமைப்பே, காரணமாகும்.

Tuesday, September 11, 2018

பாலா அரிஸ்ட்டம் செய்முறை

பாலா அரிஸ் ட்டம்  செய்முறை                               
 5  கிலோ  குறுந்தோட்டி, 5   கிலோ அமுக்கிராகிளங்கு,  ஆகியவற்றை  சிதைத்து  50  லிட்டர்  தண்ணீரில்  கொதிக்கவைத்து15  லிட்டராக  வர்றவைத்து,  அதில் 10 கிலோ  வெல்லம்  கரைத்து,அத்துடன்  கீரைப்பாலை100  கிராம்  ,  ஆமணாக்குவேர்,  சித்தரத்தை, ஏலக்காய்,  முதியார்கூந்தல்   லவங்கம்  விலாமிச்காம்  நெருஞ்சில்  ஆகியவை  வகைக்கு 50   கிராம்  வீதமும், காட்டத்திப்பூ800  கிராமும்  இடித்து  தூள்  செய்து  கலந்து  நாற்ப்பது  ஊறவைத்து  வடிகட்டிஉபயோகபடுத்தவும்

             முப்பது  மில்லி+நீர்  கலந்து  தினம்  மூன்றுவேளை  கொடுப்பது  வழக்கம் .,பசியின்மை,  பலவீனம் ,நரம்பு தளர்ச்சி ,கீல்வாய்வு,  ஆமவாதம், பலவிதவாதரோகங்களுக்கு  கொடுக்கப்படுகிறது

   இம்மருந்து  செய்ய  மாநில  அரசின்  அனுமதி  தேவை

உயர் மீட்கும் மருத்துவம்💪

#உயிர்மீட்கும்
#மருத்துவம்

17.A எளிய மூலிகை மருந்துகள்  தயாரிக்கும் முறை

நமது ஆதி மருத்துவ முறையின் மூலம் குறிப்பிட்ட சில மூலிகை மருந்துகளை தயாரித்து  பயன்படுத்தும் முறைகளை காண்போம்.!

இதில் கூறியுள்ள மூலிகை மருந்துகளை உங்கள் தேவைக்கு தயாரித்து பயன்படுத்தலாம்.!
வியாபார நோக்கத்தில் தயாரிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.! ஏனெனில் அதற்கு முறையான பல அனுமதிகளை வாங்க வேண்டும்.!
அதோடு மூலிகைகளை தேவையான போது குறைவான அளவில் தயாரித்தால் தரமாக இருக்கும்.! அதிகமான அளவில் தயாரித்து இருப்பு வைக்கும் போது பல விதமான வேதி மாற்றம் ஏற்படும். இதைப்போக்கவே பல பெரிய  நிறுவனங்களின் மூலிகை தயாரிப்புகளில் இரசாயணத்தை கலந்து மக்களை ஏமாற்றுகிறார்கள்.!
இதில் கூறப்படும் அனைத்து மூலிகை மருந்துகளும் எனது குரு வடிவீஸ்வரம், பண்டிதர் கிருஷ்ணமூர்த்தி அய்யாவின் சூத்திரங்களின் மூலம் நாம் தயாரிக்கும் மூலிகைப்பொருட்களே இது 100% இயற்கையானது. துளியும் இரசாயணமில்லாதது.!

இது ஒரு பாரம்பரிய மருந்து இதை தயாரிக்கும் அன்பர்கள் இதே முறையில் எந்த மாற்றமும் செய்யாமல்,துளியும் இரசாயணம் சேர்க்காமல்  அப்படியே தயாரித்து உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறேன்.!

1.#மூலிகை பல்பொடி

1.வேப்பம் பட்டை 100 கிராம்
2.ஆலம்பட்டை 100 கிராம்
3.ஆவாரம்பட்டை 100 கிராம்
4.கருவேலம் பட்டை
 100 கிராம்
5.புதினாஇலை 50 கிராம்
6.கடுக்காய்தோடு 50 கிராம்
7.இந்துப்பு   50 கிராம்
8.மிளகு 10 கிராம்
9.நாயுருவி 10 கிராம்
10.வெட்டிவேர் 10 கிராம்
11.தான்றிக்காய் 10 கிராம்
12.கிராம்பு 25 கிராம்
13 மாசிக்காய்  20 கிராம்
14.கண்டங்கத்திரி வேர் 5 கிராம்
15.சிற்றரத்தை வேர்  5 கிராம்
16.ஏலக்காய் 5 கிராம்
17.எலுமிச்சைதோடு 5 கிராம்
18.சுக்கு 5 கிராம்

இந்தப்பொருட்களில் உங்களால் சேகரிக்க முடிந்தப்பொருட்களை சேகரித்து காயவைத்துக் கொண்டு மற்றவற்றை மூலிகை கடையில் வாங்கி சுத்தம் செய்து பொடித்து வைத்துக்கொண்டு காலை இரவு பல் தேய்த்து வர  பல்லரிப்பு,வாய்நாற்றம். ஆரம்ப பல்சொத்தை,பல் பலவீனம் போன்றவை மாறுவதோடு நோய் எதிர்ப்பு ஆற்றலும் வலுப்படும்.!

2.மூலிகை #குளியல்பொடி

1.பூந்திக்கொட்டை 200 கிராம்
2.கஸ்தூரி மஞ்சள் 200 கிராம்
3.ரோஜாப்பூ 100 கிராம்
4.செம்பருத்திப்பூ 100 கிராம்
5.ஆவாரம்பூ 100 கிராம்
6.மல்லிகைப்பூ 100 கிராம்
7.சந்தனப்பட்டை 100 கிராம்
8.வேட்டிவேர் 100 கிராம்
9.விலாமிச்சுவேர் 100 கிராம்
10.துளசி இலை 100 கிராம்
11.புதினா இலை 100 கிராம்
12.கோரைக்கிழங்கு 100 கிராம்
13.சீகக்காய் 100 கிராம்
14 கார்போக அரிசி 50 கிராம்
15.அதிமதுரம் 50 கிராம்
16.கிச்சிலிக்கிழங்கு 50 கிராம்
17.தாமரைப்பூ 50 கிராம்
18.சிறுபயறு 400 கிராம்

இந்தப்பொருட்களை சுத்தம் செய்து இயந்திரத்தில் கொடுத்து  பொடித்து வைத்துக்கொண்டு குளிக்கும் போது தேய்த்து குளித்து வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும். வியர்வை சுரப்பிகளின் இயக்கம் சீராகி எலும்புகள் வலுப்படும். தோல் நோய் எதுவும் வராமல் பாதுகாக்கும் வந்திருந்தால் குணமாகும். இந்தப்பொடியை தேங்காய் தண்ணீர் விட்டு குழைத்து  முகத்தில் பூசிவிட்டு அரைமணி நேரம் கழித்து கழுவினால் முகம் புதுப்பொலிவுடன் தோன்றும்.!

3.இயற்கை #ஊட்டச்த்துமாவு

1.கேழ்வரகு 250 கிராம்
2.வரகு 250 கிராம்
3.கம்பு 250 கிராம்
4.குதிரவாலி 250 கிராம்
5.கறுப்புகொள்ளு 250 கிராம்
6.மக்காச்சோளம் 250 கிராம்
7.தோல் உளுந்து 250 கிராம்
8.கறுப்பு கொண்டைக்கடலை 250 கிராம்
9.வேர்க்கடலை 250 கிராம்
10.பச்சை பட்டாணி 250 கிராம்
11.சிறுபயறு 250 கிராம்
12.மாப்பிள்ளை சம்பா/சிவப்பு அரிசி 250 கிராம்
13.ராஜ்மா 100 கிராம்
14.சோயா 100 கிராம்
15. பாதாம் பருப்பு 25 கிராம்
16 பிஸ்தா பருப்பு 25 கிராம்
17.முந்திரிப்பருப்பு 25 கிராம்
18.ஏலக்காய் 25 கிராம்
19.சுக்கு 25 கிராம்
20.அமுக்ரா கிழங்கு 25 கிராம்
21.பனங்கற்கண்டு 500 கிராம்

இந்தப்பொருட்களை முடிந்தவரை இயற்கையானதாக சேகரித்து சுத்தப்படுத்தி லேசாக வறுத்து பொடித்து வைத்துக்கொண்டு பசும்பால் அல்லது சூடுநீரில் கலந்து கொதிக்க வைத்து  காலை,மாலை இருவேளை அல்லது காலை,மதியம் உணவிற்கு முன் ஒரு டம்ளர் விதம் குடித்து வந்தால்,உடல் சோர்வு,எலும்பு பலவீனம்,அடிக்கடி நோய்ப்படுதல்,மலச்சிக்கல்,உடல் நடுக்கம், கைகால் வலி,முதுகுவலி போன்ற குறைபாடுகள் நீங்கும். ஆறு மாத குழந்தைகள் முதல் அனைவருக்கும் கொடுக்கலாம்.!

4.#துளசிமாத்திரை

கருந்துளசி இலை 300 எண்ணம்
வால்மிளகு அல்லது குறுமிளகு 150 எண்ணம்
தேன் 2 தேக்கரண்டி சேர்த்து அம்மி அல்லது மிக்சியில் மைய்யாக அரைத்து சிறுசிறு உருண்டையாக பிடித்து ஒரு தட்டில் வைத்து நிழலில் ஒரு நாள் வெயிலில் ஒருநாள் என்ற விதத்தில் நான்கு நாள் காயவைத்து சிறிய கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைத்துக்கொண்டு சளி,இருமல்,தலைவலி,காய்ச்சல் வந்த சமயத்தில் வேளைக்கு இரண்டு விதம் நாளைக்கு இரண்டு வேளை மூன்று நாள் வரை உணவிற்கு பின் மாத்திரையை கடித்து உமிழ்நீரோடு சேர்த்து உண்டு வந்தால் மேற்கண்ட நோய்கள் நீங்குவதோடு நோயெதிர்ப்பு ஆற்றல் வலுப்படும். வாழ்நாளில் புற்று நோயே வராமல் பாதுகாக்கும்.!

5.அமுக்ரா மாத்திரை

1.அமுக்ரா 250 கிராம்
2 .சுக்கு 150 கிராம்
3.கொத்தமல்லி 25 கிராம்
4.சீரகம் 25 கிராம்
5.தாளிசப்பத்திரி  25 கிராம்
6.சோம்பு 25 கிராம்
7.லவங்கப்பட்டை 25 கிராம்
8.சிறுநாகப்பூ 25 கிராம்
9.மிளகு 15 கிராம்
10.திப்பிலி 15 கிராம்
11.ஏலம் 15 கிராம்
12.லவங்கம் 15 கிராம்

மேற்கண்டப் பொருட்களை தூசி,துரும்பு நீக்கி சுத்தம் செய்து மூலிகை அரவை மில்லில் கொடுத்து பொடித்து வைத்துக்கொண்டு சிறிது பொடியில் பசும்பால் விட்டுப்பிசைந்து சிறுசிறு மாத்திரையாகப் உருட்டி இட்லி தட்டில் ஒரு வாழை இலை அல்லது  வெள்ளைத்துணியை விரித்து அதன்மேல் மாத்திரைகளை பரப்பி வைத்து இட்லி குண்டானில் இரண்டு டம்ளர் பசும்பால் விட்டு அதன் மேல் உருட்டிய மாத்திரை இருக்கும் தட்டை எடுத்துவைத்து மூடி ஆவியில் வேக வைத்து  எடுத்து ஒரு நாள் நிழல் மறுநாள் வெயில் என்ற விதத்தில் நான்கு நாட்கள் காயவைத்து கண்ணாடி பாட்டிலில் போட்டு பத்திரமாய் வைத்துக்கொண்டு
வாய்வுத்தொல்லை,பக்கவாதம்,தூக்கமின்மை,நரம்புத்தளர்ச்சி,பசியின்மை,அஜீரணம்,ஆண்மைக்குறைவு,சோர்வு,இரத்த அழுத்தம்,கைகால் நடுக்கம்,காக்கை வலிப்பு,கர்பப்பை பலவீனம், தைராய்டு சீரின்மை போன்ற வியாதிகள் இருப்பவர்கள் தினமும் காலையில் இரண்டு மாத்திரையை வெறும் வயிற்றில் உண்டுவிட்டு கால் டம்ளர் சுடுநீர் அருந்திகொள்ள வேண்டும். பிறகு ஒரு மணி நேரம் உணவோ நீரோ அருந்தாமல் இருக்கவேண்டும். இப்படியே 48 நாட்கள் கடைப்பிடித்தால் மேற்கண்ட நோய்கள் கட்டுப்படும். நோய்த்தன்மை அதிகம் இருப்பவர்கள் இரவும் இதுபோல் இரண்டு மாத்திரையை உணவிற்கு பின் உண்டு வந்தால் மேற்கூறிய எத்தகைய வியாதியும் குணமாகும்.!

6.பஞ்சமூலி சூரணம்

1.ஆடாதோடை இலை 200 கிராம்
2.கடுக்காய் தோடு 200 கிராம்
3.நெல்லிவற்றல் 100 கிராம்
4.தான்றிக்காய் தோடு 50 கிராம்
5.சுக்கு 50 கிராம்

இந்தப்பொருட்களை சுத்தம் செய்து பொடித்து வைத்துக்கொண்டு தினமும் இரவு உணவிற்கு பின் தூங்குவதற்கு அரைமணி நேரம் முன்பு ஒருத்தேக்கரண் பொடியை அரை டம்ளர் சுடுநீரில் போட்டு கலக்கி குடிக்க வேண்டும். இது போல் 12 நாட்கள் முதல் 48 நாட்கள் வரை செய்து வந்தால் உடலில் தேங்கியுள்ள நாள்ப்பட்ட நச்சுக்கழிவுகள் அனைத்தும் வெளியேறிவிடும். இதனால் உடல் பருமன்,கைகால் வலி,மலச்சிக்கல்,மூட்டுவலி,நாள்ப்பட்டச் சளி,தோல் நோய்கள்,சளி,இழுப்பு,சக்கரை வியாதி,காதிரைச்சல்,உடல் ஊறல் போன்ற அனைத்து நோய்களும் குணமாகும்.
அதிகமான சளி இருப்பவர்கள் காலை,மதியம் இரு வேளையும் இந்த சூரணத்தை  தேனில் குழைத்து உணவிற்கு அரைமணி நேரம்  முன் உண்டு வந்தால் 24 நாளில் சளி முழுவதும் வெளியேறிவிடும்.!

7.மூலிகை தேனீர்

1.ஆவாரம்பூ 200 கிராம்
2.செம்பருத்திப்பூ 100 கிராம்
3.ஓரிதழ் தாமரைப்பூ 100 கிராம்
4.ரோஜாப்பூ 100
5.கொத்தமல்லி 50
6.சுக்கு 50
7.ஏலக்காய் 50 கிராம்
8.துளசிஇலை 50 கிராம்
9.வேட்டிவேர் 25 கிராம்

மேற்கண்ட பொருட்களை சுத்தம் செய்து வீட்டிலேயே பரபரவென பொடித்து வைத்துக்கொண்டு தேநீர் தயாரிப்பதைப் போலவே நீரிலோ,பாலிலோ கலந்து சூடாக்கி வடிகட்டி கற்கண்டு/தேன் கலந்து குடித்துவந்தால் நோயெதிர்ப்பு ஆற்றல் வலுப்படும் இரத்தசோகை குணமாகும்.!

8.புதினா தைலம்

1.புதினா உப்பு 20 கிராம்
2.ஓம உப்பு 20 கிராம்
3.பச்சைக்கற்பூரம் 40 கிராம்
தேங்காய் எண்ணெய் 20 மில்லி இந்தப்பொருட்களை ஒன்றாக ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு சிறிது நேரம் குலுக்கினால் திரவம் போன்று திரண்டு வரும். இந்தக்கலவையை லேசாக தொட்டு தலைவலி நேரத்தில் தடவிக்கொள்ளலாம். மூக்கடைப்பு, சளி,போன்றவற்றையும் சரிசெய்யும்.!

9.நிலவேம்பு குடிநீர்

1 நிலவேம்பு 100 கிராம்
2.விலாமிச்சம் வேர் 100 கிராம்
3.வெட்டிவேர் 100 கிராம்
4.சந்தனச்சீவல் 100 கிராம்
5 பற்பாடகம் 100 கிராம்
6.கோரைக்கிழங்கு 100 கிராம்
7.பேய்ப்புடல் 100 கிராம்
8.மிளகு 100 கிராம்
9.சுக்கு  100 கிராம்

இந்த ஒன்பது பொருட்களையும் வாங்கி சுத்தம் செய்து கசாய பதத்திற்கு  திருதிருவென இடித்து கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்திக்கொண்டு கைகால் வலி,மூட்டுவீக்கம்,மூட்டுவலி,உடல்வலி,விசக்காய்ச்சல்,தோல் நோய்கள் வந்த காலத்திலோ அல்லது காய்ச்சல்,உடல்வலி போன்றவை வருவது போல் தோன்றும் சூழலிலோ ஒருத்தேக்கரண்டி பொடியை எடித்து ஒன்றரை டம்ளர் நீரில் கொதிக்க வைத்து அது அரை டம்ளர் ஆனதும் இறக்கி வடிகட்டி  உணவிற்கு அரை மணி நேரம் முன்பு தொடர்ந்து மூன்று நாட்கள் குடித்து வந்தால் மேற்கண்ட நோய்கள் குணமாகும்.! தேவையெனில் இதுபோலவே இரவிலும் ஒரு வேளை தயாரித்து குடித்து கொள்ளலாம்.!
நோய் இருப்பவர்கள் தொடர்ந்து 12 நாட்கள் இந்த முறையை கடைப்பிடிக்கலாம். நோய் வராமல் தடுக்க நினைப்பவர்கள் மூன்று நாட்களுக்கு மேல் இதை அருந்த வேண்டாம்.! ஒவ்வாமை,குறைஇரத்த அழுத்தம்,குறை சக்கரை இருப்பவர்கள் இந்த மருந்தை தகுந்த முன்னெச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும்.!

எல்லா வகையான மருந்துகளை பயன்படுத்துவோரும் உப்பு,புளி,காரம்,அசைவ உணவு,இரசாயண உணவுகளை குறைத்துக்கொண்டால் உடனடியான பயன் கிடைக்கும்.!

இந்த பகுதியில் நாம் குறிப்பிட்டுள்ள மூலிகை மருந்துகளை நாம் குறிப்பிட்ட அதே அளவில் தேவையானவர்கள் பயன்படுத்தலாம்.!
இந்த மருந்துகள் அனைத்தும் 100% இயற்கையானது என்பதால் இதன் பயனை உடல் உணர சிலருக்கு கொஞ்சம் தாமதமாகலாம்.!
ஆனால்,பயன் நிச்சயம் கிடைக்கும்.!
நலம் பெருகட்டும் …
-ஆதிமருத்துவம் ஏகப்பிரியன்

இது போன்ற பல்வேறு மூலிகை மருந்து தயாரிப்புகள் இயற்கை வாழ்வியல் முறைகள் யோகா,தியான நுட்பங்கள்,வர்ம புள்ளிகள் இயக்கம் அடங்கிய முழுமையான இயற்கை மருத்துவ நூல் " *ஆதிமருத்துவம்*  "


Friday, September 7, 2018

மாட்டுக்கு கோமாரி வந்தால் என்ன செய்யனும்

மாட்டுக்கு கோமாரி வந்தால் என்ன செய்யனும்?

இரண்டு இளநீர் கொடுக்கனும்

மாட்டை தினமும் இரண்டுமுறைகிளிப்பாட்டனும்

நல்லெண்ணெய் நாட்டுக்கோழிமுட்டை தரனும்

பஞ்சகாவியா தரனும்

கோமாரி வாய்ப்புண்!

''தலா 10 கிராம் சீரகம், வெந்தயம், மிளகு ஆகியவற்றை எடுத்து, ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். பிறகு, மிக்ஸி அல்லது அம்மியில் அரைக்க வேண்டும். கூடவே பூண்டு-4 பல், மஞ்சள் தூள்-10 கிராம் (2 ஸ்பூன்), வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை- 30 கிராம் ஆகியவற்றைக் கலந்து, மீண்டும் அரைக்க வேண்டும். இந்தக் கலவையுடன் அரை மூடி தேங்காய்த் துருவலைச் சேர்த்துப் பிசைந்து, மூன்று விரல்களில் எடுத்து, மாட்டின் கடவாய்ப் பகுதியில் வைத்து, வாயின் மேல்பாகத்தைப் பூசுவதுபோல் கையை வெளியில் எடுக்க வேண்டும். மாட்டுக்கு மேல்வாயின் முன்பகுதியில் பற்கள் இருக்காது. அதனால் கடித்து விடும் என்று பயப்படத் தேவையில்லை. இது ஒருவேளைக்கான அளவு. இதுமாதிரி தினமும் 3 வேளை, அதிகபட்சம் 5 நாட்களுக்குக் கொடுத்து வந்தால், வாய்ப்புண் இருக்கும் இடமே தெரியாமல் ஓடிவிடும்.

கோமாரி கால் புண்!

250 மில்லி நல்லெண்ணெயில், பூண்டு-4 பல், மஞ்சள் தூள்-2 ஸ்பூன், வேம்பு, துளசி, குப்பைமேனி, மருதாணி இலைகள் தலா 1 கைப்பிடி போட்டு, 10 நிமிடங்கள் சூடு படுத்தி... கொஞ்சம் ஆற வைத்து, லேசான சூட்டில் நூல் துணி அல்லது பஞ்சில் நனைத்து, மாட்டின் கால் நகங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள புண், புழுக்களை சுத்தம் செய்ய வேண்டும். இந்த எண்ணெயை புண் மீது படும்படி மேற்புறமும், கீழ்புறமும் தாராளமாகவிட வேண்டும். பாதிக்கப்பட்ட கால் தவிர மற்ற கால்களுக்கும் இவ்வாறு செய்ய வேண்டும். இப்படிச் செய்தால், கால்புண் ஆறி விடும்.

கோமாரிக் காய்ச்சல்!

கோமாரி நோயுடன் காய்ச்சலும் இருந்தால்... வெற்றிலை-4, சீரகம், மிளகு, தனியா விதை ஆகியவற்றில் தலா 5 கிராம், சின்ன வெங்காயம்-3, முருங்கை இலை-1 கைப்பிடி, நிலவேம்பு இலை-10 அல்லது 5 கிராம் நிலவேம்புப் பொடி (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து, நாக்கில் தடவிவிட வேண்டும். இது ஒரு வேளைக்குரிய அளவு. இதுபோல ஒரு நாளைக்கு 5 முறை கொடுக்க வேண்டும். மேற்சொன்ன அளவுகள் ஒரு மாட்டுக்கானவை. இந்த அளவு மருந்தை, ஆறு ஆடுகளுக்குக் கொடுக்கலாம்'

நன்றி: முத்துக்குமார்

Wednesday, September 5, 2018

செய்ய வேண்டியது

♥படுகையில் இருந்து எழும் பொழுது (ஆண்கள் )வலது கால் பெருவிரலை பூமியில் அழுத்தி எழ வேண்டும்

♥பெண்கள் இடது கால் பெருவிரலை பூமியில் அழுத்தி எழ வேண்டும்

♥விருப்பம் இருந்தால் பூமா தேவியை வணங்கலாம்

♥காலையில் எழுந்தவுடன் நம்முடைய இரு கைகளையும் உரசி கண்களில்
ஒற்றி கொள்ளவேண்டும் .

♥கண்களை பற்றி நீங்கள் அறிய படவேண்டிய ரகசியம் .

♥கண்கள் மனதின் வாசல் ,நம்முடைய எண்ணம் கண்கள் வழியாக வெளிப்படும் ,கண்கள் நெருப்பை தரும் சக்தியுடையவை
இதை தான் எரிச்சல் என்பார்கள் .
கண் திருஷ்டி என்பதும் இதுவே ,திருஷ்டி என்றால் தமிழில் பார்வை என்று பொருள் .

♥நாம் உறங்கும் பொழுது மனம் ,எண்ணம் அமைதியடையும் இது தான் இயற்கை அப்படி இருக்கும் பொழுது நம்முடைய நெருப்பு சக்தி கண்கள் வழியாக வெளிய செல்லாது .

♥உறங்கி எழுந்தவுடன் கைகளை உரசும் பொழுது சுடு உண்டாகி கண்களை தொடும்பொழுது அவை கண்களின் நெருப்பை கிரகித்து நமக்குளே வைக்கும்
இந்த கண் நெருப்பு நமக்கு மிகவும் முக்கியம் .

♥இந்த நெருப்பு செரிமான சக்தியை நமக்கு தரும் .
உணவுகளை பார்த்து கொண்டே சாப்பிடும் பொழுது கண்கள் செரிமானத்தை ஏற்பாடு செய்யும்

♥அதனால் புத்தகம் படித்து கொண்டு ,மற்ற காட்சிகள் பார்த்து கொண்டு உண்பதால் முறையான செரிமானம் வயிற்றில் நடக்காது .

♥மேலும் கண் நெருப்பை பற்றி மகாபாரத்தில் ஒரு நிகழ்ச்சி ..

♥துரியோதனன் போருக்கு போகும் முன் தன தாயிடம் ஆசி பெற செல்கிறான்
எப்பொழுதும் கண்களை கட்டி இருக்கும் அவள் துரியோதனிடம் ,நீ காலையில் குளித்தவுடன் நிர்வாணமாக என்னை பார்க்க வா என்று சொல்கிறாள் .

♥அதன் படி அவன் வந்தவுடன் தாய் தன் கண் கட்டுகளை களைந்து அவனை பார்க்கிறாள் .

♥பிறகு போருக்கு செல்கிறான் துரியோதனன் ,பீமனிடம் சண்டை செய்யும் பொழுது பீமன் அடி துரியோதனின் மேல் விழும் பொழுது (டங்) ஒரு
பித்தளை குடத்தை அடித்தது போல் ஒரு சத்தம் வருகிறது .

♥குழப்பம் அடைந்த பீமன் கிருஷ்ணரிடம் எப்படி இவன் உடம்பில் இருந்து
இப்படி சத்தம் வருகிறது என்று கேள்வி கேட்கிறான் .

♥கிருஷ்ணர் சொல்கிறார் பல வருடம் கண்களை கட்டிஇருந்த அவனுடைய தாய் கண்களை களைந்து அவனை பார்த்தது இருக்கிறாள் .

♥அவளுடைய கண்களில் இருந்து வெளிப்பட்ட நெருப்பு கவசமாக அவனை காவல் காக்கிறது என்றார் .

♥இதை சித்தர்கள் மாற்றாக நமக்கு சொல்லியது
உணவை உண்ணும் முன் கண்களில் ஒற்றி உண்ணவேண்டும் அல்லது
பார்த்து உண்ணவேண்டும் .

♥கோவில்களில் தரப்படும் பிரசாதம் நாம் கண்களில் ஒற்றிக்கொள்ள சொல்லபட்டது இதற்க்கு தான் .
வீட்டில் சாதத்தை பார்த்து சாப்பிடவேண்டும் என்பதும் இதற்க்கு தான் .

♥அடுத்து
மல ஜலம் கழித்து முடித்தவுடன் உடனே குளித்து விடவேண்டும் .

♥நான் காலையில் சிறிது தூரம் நடை பயிற்சி செய்யும் பொழுது நிறைய நபர்களை சந்திக்கிறேன் .

♥அவர்கள் சொல்கிறார்கள் மருத்துவர் சொல்படி நடை பயிற்சி செய்கிறேன் ..

♥என்னை பொறுத்தவரையில்
அசைவ உணவுகளை உண்பதும் ,மேலும் சரியான உணவு முறை
பழக்கம் இல்லாத காரணமும் தான் ...

♥காலை எழுந்தவுடன் குளிப்பதினால் உடலில் உள்ள சூடு சமப்படுகிறது .வயிற்றில் உள்ள வெப்பம் செரிமானத்தை தயார் செய்து விடுகிறது பசி எடுக்க வைக்கிறது .

♥பசிக்காமல் உண்பது ,நேரம் தவறி உண்பது ,அடிக்கடி இறைச்சி உணவு உண்பது ,துரித உணவுகளை உண்பது இவைகள் நமக்கு நோய்களை உண்டாகிறது

♥சித்தர்கள் சொல்வது எழுந்தவுடன் கடமைகளை செய்தவுடன் குளியல் .

♥குளிக்கும் பொழுது நாமங்கள் சொல்லுங்கள் பலிக்கும் .

♥ஆற்றில் நின்று மந்திரம் சொல்லும்பொழுது (தொப்புள் கொடி முழ்கும் படி நின்று ) பலிதம் ஆகும் என்று ரிஷிகளும் ,சித்தர்களும் சொல்லுவார்கள் ,
இன்று ஆறுகளை தேடி நாம் செல்ல நேரம் இல்லை .

 ♥சித்தர்கள் எழுதிய வைத்திய நூல்களில் உணவு முறைகளையும்
மனிதன் உணவுகளை உண்ணும் முறைகளையும் வகுத்து பிரித்து அழகாக நெரிபடுத்தி இதன் படி நோய்களை மற்றும் மனதின் என்ன அலைகளை சரி செய்ய முடியும் என்று ஆராய்ந்து நமக்கு தந்து உள்ளார்கள் .

♥அதன் படி உணவு முறைகளான இவைகள் ..
நக்கி சாப்பிடுவது ,
சப்பி சாப்பிடுவது
கடித்து சாப்பிடுவது
உறிந்து சாப்பிடுவது
என்று 4 வகையாக பிரிக்கலாம் .

♥எந்த உணவை எப்படி சாபிடலாம் என்று முறை இருக்கிறது .

♥சித்தர்கள் சொல்வது
உணவுகளை எடுத்து கொள்ளும் முன் கை கால்கள் குளிர்ந்த நீரில் கழுவி முகத்தில் நாமம் இட்டு பிறகு கால்களை மடக்கி தரையில்
அமர வேண்டும் .பிறகு வலது கையில் நீர் ஊற்றி உறிந்து குடிக்க வேண்டும் இதை 3 முறை செய்ய வேண்டும் இப்படி செய்யும் பொழுது உங்களுக்கு பிடித்த இறைவன் பெயர் சொல்லுங்கள் .

♥கால்களை மடக்கி அமர்ந்தால் கல்லீரல்,மற்றும் செரிமான சுரப்பிகள் வேலை செய்யும்
சக்கரை நோய் வராது,

♥உள்ளங்கையில் நீர் உற்றி உறிந்தால் பல அற்புதம்கள் நம் உடம்பின் உள்ளே நடப்பதை உணரமுடியும்.

♥கைகளை பற்றி சில விவரம்கள் நாம் தெரிந்து கொள்ள வேண்டும் .

♥தாயின் வயிற்றில் உள்ள சிசு பிறந்தவுடன் முதன் முதலாக சப்பிசாபிடும் பால் வயிற்றில் பட்டவுடன் வயிறு தன்னுடைய செயலை தொடங்கிறது என்பதனை நாம் அறிவோம் .

♥பிறந்த குழந்தை கைகளை மூடிய படி இருக்கும் .இப்படி கைகளை வைத்து இருக்கும் பொழுது தான் ரேகைகள் உண்டாகிறது என்று கைரேகை சாஸ்திரம் சொல்கிறது .மேலும் வயிற்றின் உள் அமைப்பு தான் உள்ளங்கை
என்று சொல்கிறது .

♥இதை அகஸ்தியர் நாடியில் உரைக்கும் பொழுது
எந்த மருந்து எடுத்தாலும் உள்ளங்கையில் நீர் உற்றி சிவ சிவ என்று சொல்லி குடித்து விட்டு கிழக்கு முகம் நின்று மருந்து சாப்பிடவும்
என்று சொல்கிறார் .

♥மேலும் வயிறு நோய்களை தீர்க்கும் போகர் ,கோரக்கர் உள்ளங்கைகளில்
தான் தேன் உற்றி அதில் மருந்துகளை குழைத்து உன்ன சொல்லி உள்ளார்கள்
நம்முடைய உள் வயிற்றின் அமைப்பு தான் உள்ளங்கைகள் .கைகளை வைத்து
நோய்களை அறியலாம் .

♥நகம் ,விரலில் உள்ள மச்சம் ,அதில் உள்ள இடைவெளி போன்ற அடையளாம்கள் வைத்து நோய்களை அறியலாம் ..

♥மேலும் நம் உடம்பில் உள்ள காந்த அலைகளை வைத்து கைகளின் முலம்
அடுத்தவர் உடம்பில் உள்ள நோய்களை ,கர்ம வினைகளை அகற்றலாம் இதுவே தீக்ஷை ,
இதை மகான்கள் ,சித்தர்கள் ,தூதுவர்கள் செய்தார்கள் ....

♥கைகளில் நீர் உற்றி உறிஞ்சுவதால் ஏற்படும் பலன் ....

♥நம் உடலில் தொண்டை தான் சகல நோய்களின் தடுப்பு சுவர் என்று சொல்லலாம் .

♥இதை மீறி எந்த கிருமியும் செல்ல முடியாது .நம்முடைய
உடல் சூடுகளில் தொண்டையில் உள்ள சுடு மிக மிக முக்கியமானது என்று சித்த வைத்திய நூல் சொல்கிறது
இந்த சுடு( ஜடாரக்னி ) தான் நமக்கு சம விகிதமாக செயல்படும் .இதற்க்கு ஈரம் தேவை .

♥(குளிர்ச்சி தேவை )
இதை சித்தர்கள் தலை கீழாக தொங்கும் லிங்கம் உடைய இடம் என்று சொல்வார்கள்
ஆம் லிங்கம் தலைகீழாக இருக்கும் (உள்நாக்கு ) நீலகண்டன் என்பது இவைகளை குறிப்பது இது தான் செயல்களில் தவறினால் சுடு அதிகமாகும் (காய்ச்சல் ) நாம் உணவு உண்ணும் பொழுது இடை இடைய நீர் அருந்தகூடாது.

♥தாகத்தை ஏற்படுத்தும் லிங்கம் ஈரமாக வைக்க உள்ளங்கையில் நீர் வைத்து உறிந்து குடிக்கும் பொழுது தொண்டை நணையும் பிறகு உண்பதால் நீர் வறட்சி வராது.

♥சாப்பிட்டு முடியும் வரை தாகம் இருக்காது .

♥உணவு அருந்திய அரைமணி நேரம் பிறகு தான் நீர் அருந்த வேண்டும் அகவே கால்களை மடக்கி கைகளில் நீர் உற்றி எதாவுது இறைவன் நாமம்
சொல்லி உறிந்து குடித்து விட்டு உணவு சாப்பிட வேண்டும்.

வணக்கம்

சக்ரவர்த்தி கீரை

சக்ரவர்த்தி கீரை

 சிறுநீரக கற்கள், தொற்றுக்களை போக்க கூடியதும், எலும்புகளுக்கு பலத்தை கொடுக்க கூடியதும், வயிற்று புண்ணை குணமாக்க கூடியதும், ரத்த சோகையை சரிசெய்ய கூடியதும், மூட்டுவலியை குணப்படுத்தும் தன்மை கொண்டதும், எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்ட சக்கரவர்த்தி கீரையை பற்றி நாம்இன்றுபார்ப்போம்.

கீரைகளுக்கெல்லாம் அரசன் என்பதால் இது சக்கரவர்த்தி கீரை என பெயர் பெற்றது. வாத்தினுடைய காலின் அமைப்பை உடைய சக்கரவர்த்தி கீரையை, பருப்பு கீரை என்று சொல்வதுண்டு. பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட இந்த கீரையில் வைட்டமின் ஏ, சி ஆகிய சத்துக்கள் அதிகளவில் உள்ளன. கால்சியம் சத்து நிறைந்த இது, எலும்புகளுக்கு பலத்தை கொடுக்க கூடியது.சக்கரவர்த்தி கீரையை கொண்டு சிறுநீரக கற்களை போக்கும் மருந்து தயாரிக்கலாம். ஒரு கைப்பிடி சக்கரவர்த்தி கீரையை எடுத்து கொள்ளவும். அதனுடன் அரை ஸ்பூன் கருஞ்சீரகம், ஒரு ஸ்பூன் கொள்ளுப்பொடி, அரை ஸ்பூன் பனங்கற்கண்டு ஆகியவற்றை சேர்க்கவும். பின்னர், நீர்விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். இதை குடிப்பதன் மூலம் சிறுநீரக கற்கள், சிறுநீரக தொற்று பிரச்சனை சரியாகும்.

 சக்கரவர்த்தி கீரையின் பயன்கள் :
சக்கரவர்த்தி கீரையில் இரும்பு சத்து, பொட்டாசியம், கால்சியம், துத்தநாகம் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. நார்சத்து மிகுந்த இக்கீரை சரிவிகித உணவாகிறது. ரத்த சோகை சரியாவதுடன், மலச்சிக்கல் மறைகிறது. வயிற்றுப் புண்ணை சரி செய்யும் தன்மை சக்கரவர்த்தி கீரைக்கு உண்டு. புற்றுநோயை தடுக்கவல்ல இந்த கீரை, எலும்பை பலமடைய செய்கிறது. சிறுநீரை வெளியேற்றும் தன்மை கொண்டது. சக்கரவர்த்தி கீரையை பயன்படுத்தி ரத்த சோகை, மாதவிலக்கு கோளாறுக்கான மருந்து தயாரிக்கலாம்.
ஒரு கைப்பிடி சக்கரவர்த்தி கீரை இலையை எடுத்துக்கொள்ளவும். அதனுடன் சிறிதளவு சுக்குப்பொடி, ஒரு ஸ்பூன் வெல்லம் சேர்த்து நீர்விட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி குடிப்பதன் மூலம், ரத்தசோகை குணமாகும். மாதவிலக்கு கோளாறு சரியாகும்.

 சக்கரவர்த்தி கீரையின் இலையை அரைத்து பசையாக்கி மேல்பூச்சாக பூசலாம். இவ்வாறு செய்தால் வெயிலால் ஏற்படும் தோல் சுருக்கங்கள் மறையும். சிராய்ப்பு காயங்கள் ஆறும்.சக்கரவர்த்தி கீரையை பயன்படுத்தி மூட்டுவலிக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் உடன் சக்கரவர்த்தி கீரையை சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ளவும். இளஞ்சூட்டுடன் மூட்டுவலி உள்ள இடத்தில் சக்கரவர்த்தி கீரையை கட்டி வைத்தால் வலி குறையும். வலி இருக்கும் இடங்களில் ஒத்தடம் கொடுக்கலாம். அவ்வாறு செய்தால் வலி மறையும்.

Tuesday, September 4, 2018

தமிழ் நாடு மாநில மூலிகை தாவர வாரியம்






முள் சீத்தாப்பமழம்




Diabetes acu points

அக்குபங்சர் அதிசயம்
~~~~~~~~~~~~~~~~
சர்க்கரை நோயை தீர்க்கும் புள்ளிகள் இதோ ... Sp6 Sp7, one point five tsun from Sp 9,and Right side sp 3

மூட்டு வலி

நம் அனைவருக்கும் கால்கள் மூட்டுவலி வருகிறது.நாம் அனைவரும் படுக்கும்போதும்,கால்கள் நீட்டி உட்காரும் போதும் ஒரு கால் மேல் கால் போடுகிறோம். கீழே உள்ள கால் தான் அதிகமாக பாதிக்கிறது. டாக்டரிடம் கேட்போம் இரண்டு கால்களுக்கும் ஒரே வயது தானே.ஒரு கால் மட்டும் மூட்டுவலி.இதுதான் காரணம்.
நிவாரணம்.100மி.லி. செக்கில் ஆட்டிய நல்லெண்ணை
 10 எருக்கம்பூ
10லவங்கம் தட்டி கொள்ளவும்.
10பல் பூண்டு தட்டி வைத்து கொள்ளவும்.
அடுப்பில் வைத்து சிறு தீயில் போட்டு  காய்ச்சி இறக்கி வடிகட்டவும்.10கிராம் கற்பூரம் போட்டு ஆற விட்டு பாட்டிலில் வைத்துக் கொண்டு தினமும் காலை,இரவு தடவி வர விரைவில் வலி பறந்து விடுகிறது.அனுபவத்தில் கை கண்ட அருமருந்து.பலன் அடையலாம்.
வாழ்க வளமுடன்...

Saturday, September 1, 2018

குப்பைமேனி உப்பு

குப்பைமேனி உப்பு                                           
 *********************
*********************
 தேவையான பொருட்கள்.
*****************************

1.குப்பைமேனி சாறு-1லிட்டர்
2.சோற்றுப்பு                - 500 கிராம்.

செய்முறை                                                                            *************.
 உப்பை கல்வத்தில் இட்டு குப்பைமேனி சாறுவிட்டு நன்கு அரைத்து ஒரு மண்சட்டியில் இட்டு காய்ச்ச வேண்டும்.நீர் வற்றி நன்கு இறுகியதும் எடுத்து கல்வத்தில் இட்டு அரைத்து சூரணமாக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.

உபயோகிக்கும் முறை                             
*************************.
200 முதல் 400 மில்லி கிராம் வரை.200 மில்லி லிட்டர் புளித்த மோரில் கலந்து அருந்த வேண்டும்

 தீரும் நோய்கள்                                                                                           ******************.
இரைப்பை பற்றிய ரோகங்கள் குணமாகும்.தோல் நோய்கள் கட்டுபடும்.குன்மம் மாதவிளக்கு வயிற்றுவலி ஆகியவை குணமாகும் கிட்னி கல் கரைந்து வெளியேரும்
*****************************************************.
.
.

மூலிகை குடிநீர் செய்வது எப்படி?

மூலிகை குடிநீர் செய்வது எப்படி?

பலவிதமான நோய்களுக்கு மூலிகை குடிநீர் பயன்படும். நான்கு விதமான மூலிகை குடிநீர் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

 நிலவேம்புக் குடிநீர்

எல்லா வகையான சுரங்களுக்கும் நிலவேம்புக் குடிநீர் பயன்படும்.

நிலவேம்பு, வெட்டி வேர், விலாமிச்சன் வேர், சந்தனத் தூள், பேய்புடல், கோரைக் கிழங்கு, சுக்கு, மிளகு, பற்பாடகம் ஆகியவற்றைச் சம அளவு எடுத்து இடித்து தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வற்ற வைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

தினமும் இரு வேளை 30மிலி முதல் 60 மிலி வரை குடிக்கலாம்.

 ஆடாதோடை குடிநீர்

காச நோய், இருமல் மற்றும் இரைப்பு போன்ற‌ நோய்கள் குணமாக‌ ஆடாதோடை குடிநீர் பயன்படும்.

ஆடாதோடை இலைகள் இரண்டு அல்லது மூன்று எடுத்துச் சிறு சிறு துண்டுகளாக்கி அரிந்து தேன் விட்டு வதக்கி, அதிமதுரம், தாளிசபத்திரி, அரிசித் திப்பிலி இவை வகைக்குச் சம அளவு (10 முதல் 15 கிராம்) எடுத்து இடித்து தண்ணீர் வேண்டிய அளவு சேர்த்துக் கொதிக்க வைத்து மூன்றில் ஒரு பாகமாகவோ, நான்கில் ஒரு பாகமாகவோ வற்ற வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

தினமும் இரு வேளை 30மிலி முதல் 50 மிலி வரை குடிக்கலாம். குடிநீர் தயாரித்து 3 மணி நேரத்திற்குள் உட்கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறையும் புதிதாகத் தயாரித்துக் கொள்ள வேண்டும்.

 சுரக் குடிநீர்

இருமல் மற்றும் சளியுடன் கூடிய சுரம் குணமாக‌ சுரக் குடிநீர் பயன்படும்.

சுக்கு, திப்பிலி, கிராம்பு, சிறுகாஞ்சொறிவேர், அக்கரகாரம், முள்ளி வேர், கடுக்காய் தோல், ஆடாதோடை, கற்பூரவல்லி, கோஷ்டம், சிறுதேக்கு, நில வேம்பு, வட்டத்திருப்பி, முத்தக்காசு ஆகியவற்றை வகைக்குச் சம அளவு எடுத்து இடித்து அத்துடன் தண்ணீர் தேவையான அளவு சேர்த்துக் கொதிக்க வைத்து மூன்றில் ஒன்றாக வற்ற வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

தினமும் இரு வேளை 30மிலி முதல் 60 மிலி வரை குடிக்கலாம்.

  நீர் முள்ளிக் குடிநீர்

சோபம் (உடல் வீக்கம்) மற்றும் நீர்க்கட்டு குணமாக‌ நீர் முள்ளிக் குடிநீர் பயன்படும்.

நெருஞ்சில், நெல்லி வற்றல், நீர்முள்ளி, பறங்கிச் சக்கை, மணித் தக்காளி வற்றல், சரக் கொன்றைப் புளி, சோம்பு, வெள்ளரி விதை, சுரைக்கொடி, கடுக்காய், தான்றிக் காய்
மேற் கூறியவைகளை வகைக்குச் சம அளவு எடுத்து விதிப்படிக் குடிநீர் செய்து கொள்ளவும்.

தினமும் இரு வேளை 60 மிலி வரை குடிக்கலாம்.