Wednesday, January 17, 2024

முடக்குவாதம்

 முடக்குவாதம்...




அங்கங்களை முடக்கிவிடுவதால் இந்த நோயை முடக்குவாதம் என்று சொல்வார்கள். இதைப் பற்றி 3000 ஆண்டுகளுக்கு முன்பே சரகர், சுஸ்ருதர், வாக்படர் ஆகியோர் எழுதியுள்ளனர். இதை மகாவாத வியாதி என்றும், குடம் என்றும், வாத பலாசம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். நவீன மருத்துவத்தில் இது Rheumatoid arthritis.


இது ஒரு autoimmune disease. அதாவது வீட்டில் வளர்க்கும் நாய் திருடனைக் கடிக்காமல், தன்னை வளர்ப்பவரையே கடிப்பது போன்றது. உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தி ஆரோக்கியமாக உள்ள ஒரு திசுவை எதிர்க்கும் மோசமான நிலை இது. இந்த நோய் எந்த வயதிலும் வரலாம். ஆனால், நடுத்தர வயதில் அதிகம் வரும். ஆண்களைவிடப் பெண்களை இந்த நோய் அதிகமாகத் தாக்கும்.


பொதுவாகக் கை, கால் மூட்டுகளில் பாதிப்பை வெளிப்படுத்தும். கை மூட்டுகள் அழற்சி ஏற்பட்டு வளைந்துபோகும். மணிப் பந்து மூட்டுகள், விரல்கள், கணுக்கால், முழங்கால் போன்றவை பாதிக்கப்பட்டு நீர் சேர்ந்து காணப்படும். மெதுவாகத் தொடங்கி மூட்டுகளை அழிக்கும் தன்மையைப் பெறும்.


மூட்டுகளில் வலி ஏற்படும், மூட்டுகளை நீட்ட, மடக்க இயலாத தன்மை காணப்படும். காலையில் எழுந்தவுடன் இரண்டு மணி நேரத்துக்கு எந்த வேலையும் செய்ய முடியாது. இதை morning stiffness என்று சொல்வார்கள்.


மூட்டுகள் சூடாக இருக்கும், தொட்டால் வலிக்கும். உள்ளேயும் வலி காணப்படும். இதனால் மூட்டை அசைக்கவோ, நீட்டவோ இயலாது. மூட்டுகள் வளைந்து காணப்படும். மேலும் நுரையீரல் பாதிக்கப்படலாம். இதை pleurisy, interstitial lung disease என்று சொல்வோம்.


கண்கள், வாய் வறண்டு போகலாம். இதை rheumatoid nodules என்று சொல்வோம். உடலில் சிறு கழலைகள் தோன்றும். இதைக் கிரந்தி என்று சொல்வோம். இதை Hb, ESR, Anti CCP antibody என்று அழைப்பார்கள். வலி அவதிப்படுத்துவ தால், இவர்களால் நன்கு தூங்க முடியாது.


முடக்கு வாதம் அஜீரணத்தால் ஏற்படுகிறது, கீல்வாதம் போன்ற மூட்டுகளில் உராய்வு காரணமாக அல்ல.

முடக்கு வாதம் இனி வயதானவர்களுக்கு மட்டும் அல்ல, கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் உட்பட இளைஞர்களிடையே இந்த நிலைமை அதிகரித்து வருகிறது.15-20 சதவீத இளம் நோயாளிகள் (35-40 வயது) மூட்டு வலியாலும் பாதிக்கப்படு

கின்றனர்.


Rheumatoid arthritis (RA) என்று அழைக்கப்படும் முடக்கு வாதம் ஒரு ஆட்டோ இம்யூன் கோளாறு. அதாவது உடலின் இயற்கையான பாதுகாப்பு அமைப்பு, உங்கள் சொந்த செல்கள் மற்றும் வெளி செல்களுக்கு இடையே உள்ள வித்தியாசத்தை அடையாளம் காண முடியாதபோது ஆட்டோ இம்யூன் நோய் ஏற்படுகிறது, இதனால் உடல் சாதாரண செல்களை தவறாக தாக்குகிறது.


முடக்கு வாதம் மூட்டுகள், தோல், கண்கள், நுரையீரல், இதயம் மற்றும் இரத்த நாளங்களை பாதிக்கிறது. இது ஒரு நபரின் நோயெதிர்ப்பு அமைப்பு உடல் திசுக்களைத் தாக்கத் தொடங்கும் ஒரு நிலை.


சூடான, வீங்கிய மூட்டுகள்,

பாதிக்கப்பட்ட மூட்டுகளின் சமச்சீர் முறை


* சோர்வு, அவ்வப்போது காய்ச்சல், ஆற்றல் இழப்பு


*மணிக்கட்டு மற்றும் விரல் மூட்டுகளை அடிக்கடி பாதிக்கும் மூட்டு வீக்கம்


*மூட்டு வீக்கம் சில நேரங்களில் கழுத்து, தோள் பட்டை, முழங்கைகள், இடுப்பு, முழங்கால்கள், கணுக்கால் மற்றும் பாதங்களில் உள்ள மூட்டுகளை பாதிக்கும்.


முடக்குவாதத்தில் மூட்டுகள் பெரிய அளவிற்கு சேதமடைகின்றன, இது இறுதியில் அதன் அழிவு மற்றும் சிதைவுக்கு வழிவகுக்கிறது.


நமது உண்ணும் உணவுகளில் மஞ்சளுக்கு மிகப்பெரிய பங்குண்டு. இதில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. ஒரு விழுப்புண்ணில் இருந்து புற்றுநோய் பாதிப்பு வரை குணப்படுத்தும் வல்லமை கொண்டது மஞ்சள். நம்முடைய தமிழ்ச் சமூகத்தில் மஞ்சளின் பயன்பாடு அளவிட முடியாததாக உள்ளது. அனைத்து வகையான உணவுகளில் சேர்ப்பதற்கான திறன் கொண்ட மஞ்சள், முடக்குவாத பிரச்னைக்கு நல்ல தீர்வை அளிக்கக்கூடியதாக உள்ளது. அலோபதி மருந்து முறையில் முடக்குவாதத்துக்கு கொடுக்கப்படும் மருந்துகளிலும் மஞ்சளின் சேர்க்கை இடம்பெற்றிருக்கும். தினசரி உணவில் மஞ்சளை தவிர்க்காமல் சேர்த்துக்கொள்வது நல்ல பலனை தரும். 


ஆங்கில மருத்துவத்தில் முடக்குவாதத்துக்கு மஞ்சளுடன் சேர்த்து கொடுக்கப்படும் மற்றொரு மருந்து போஸ்வில்லியா. இதுதான் தமிழில் சாம்பிராணி என்று பயன்படுத்துகிறோம். முடக்குவாத பிரச்னைக்கு சாம்பிராணி ஒரு அருமருந்தாகும். பரங்கி மரத்தின் பிசினில் இருந்து செய்யப்படும் சாம்பிராணிக்கு நிறைய நற்குணங்கள் உள்ளன. இது எலும்பு பிரச்னை, மூட்டு வலி மற்றும் முடக்கு வாதத்துக்கு நிரந்தர தீர்வு அளிக்கக்கூடியதாகும். இதுபோன்ற கம்யூட்டர் சாம்பிராணியில் பலன் கிடைக்காது. சாம்பிராணி மூலம் கிடைக்கும் புகையை மூச்சுவழியாக சுவாசிப்பதால், நமக்கு சைனஸ் பிரச்னை, நுரையீறல் சார்ந்த பிரச்னைகள் உடனடியாக நீங்கும். மேலும், சாம்பிராணி புகையை சுவாசிப்பதால் உடலில் எங்கும் நீர் கோர்க்காது.

நன்றி

C.Nanda kumar

N18 Siddha Varma sigichialayam