Friday, April 19, 2019

சித்த மருந்துகளின் பரிசோதனைகள்💫

சித்த மருந்துகளின் பரிசோதனைகள்:-

நாட்டு மருந்து கடையில் சென்று சில பற்ப மருந்துகள் வாங்குவோம் அவை சரியாக முடியாமல் இருந்து அதை நாம் பயன்படுத்தினால் சில தொந்தரவு ஆளாக வேண்டும். இங்கு நாம் சில பரிசோதனை பற்றி பார்போம்.

1.பற்ப செந்தூரங்களின் பொதுவனான சோதனை:
விரலின் ரேகை பற்ப செந்தூரங்களில் பதிய வேண்டும்.

2.சுண்ணங்களின் பொதுவனான சோதனை:
 சுண்ண வகைகளை மஞ்சள் விட்டு நீர் விட்டு கலக்கும்போது,சிவப்பு வர வேண்டும்

3.வங்க பற்ப சோதனை:
வங்க பற்பம் – 1 பங்கு படிகாரம் – 1/8 பங்கு, நவாச்சாரம் - 1/8 பங்கு இவ்வகைகளை கல்வத்தில் அரைத்து,மூசையில் வைத்து ஊத,மருந்து சரியான முறையில் முடியாத போது,உலோகம் இருந்தால் உருகி வெளிவரும்.

4. நாக பற்ப சோதனை:
நாக பற்பம் 2 பங்கு படிகாரம் – 1/8 பங்கு, நவாச்சாரம் - 1/8 பங்கு இவ்வகைகளை கல்வத்தில் அரைத்து,மூசையில் வைத்து ஊத,மருந்து சரியான முறையில் முடியாத போது,உலோகம் இருந்தால் உருகி வெளிவரும்.

5.வெள்ளி பற்ப சோதனை:
வெள்ளி பற்பம் 1 பங்கு, வெங்காரம் – 1/4 பங்கு, கருவங்கம் - 1/4பங்கு,செம்புத்தூள் - 1/4பங்கு, இவ்வகைகளை கல்வத்தில் அரைத்து,மூசையில் வைத்து ஊத வெட்டையாகும்.இவ்வெட்டையை, கரி நெருப்பிலிட்டு முன் போலவும் ஊத,மருந்து சரியான முறையில் முடியாத போது,உலோகம் இருந்தால் உருகி வெளிவரும்.

6.தங்க பற்ப சோதனை:
·         தங்க பற்பம் 1 பங்கு, வெங்காரம் – 1/4 பங்கு, கருவங்கம் - 1/4பங்கு,செம்புத்தூள் - 1/4பங்கு, இவ்வகைகளை கல்வத்தில் அரைத்து,மூசையில் வைத்து ஊத வெட்டையாகும்.இவ்வெட்டையை, கரி நெருப்பிலிட்டு முன் போலவும் ஊத,மருந்து சரியான முறையில் முடியாத போது,உலோகம் இருந்தால் உருகி வெளிவரும்.
·         உலோகத்திற்குள்ள எந்த மினுமினுப்பும் இருக்க்கூடாது

7. தாம்பிர பற்ப சோதனை;
·         தாம்பிர பற்ப - 1 பங்கு, வெங்காரம் – 1/4 பங்கு, கருவங்கம் - 1/4பங்கு,இவ்வகைகளை கல்வத்தில் அரைத்து,மூசையில் வைத்து ஊத,மருந்து சரியான முறையில் முடியாத போது,உலோகம் இருந்தால் உருகி வெளிவரும்.
·         தாம்பிர பற்ப முடிந்த்தாயின்,கனிந்த வாழை பழத்தில் சிறிது பற்பத்தை வைத்து,1 இரவு கழித்து எடுக்க வாழைபழம் கல் போல் இறுகியே காணும்.

8.அயச்செந்தூர சோதனை:
 அயச்செந்தூரம் முடிந்த்தாயின், நீரிலிட்டால் மிதக்கும்.அது காந்த்திற்கு ஒட்டக் கூடாது.

9.அப்பிரக சோதனை
·         அதில் தளுக்கு இருக்க கூடாது.
·         விரிசல் விழுந்த மட்கலயத்தில் நீர் விட்டு அதினுள்,அப்பிரக பற்ப இட நீர் கசிவு இருக்க்கூடாது.

10.மிருதார் சிங்கி பற்ப சோதனை:
இரும்பு கரண்டியிலிட்டு சிறிது,வெங்காரம், நல்லெண்ணெய் விட்டு எரிக்கவும்.ஈயம் வர கூடாது


Thursday, April 18, 2019

எளிய தைல முறைகளை🏃🏃🏃🏃

எளிய தைல முறைகளை இங்கு பதிவிடுகிறேன்:-

மூலிகைச் சரக்குகளைக் கற்கமாக்கியோ அல்லது சாறுகளை எண்ணெயுடன் கலந்து காய்ச்சியோ எடுத்து கொள்ளவது தைலம் எனப்படும். இவ்வாறு தயார் செய்யப்படும் தைலத்தை ஆறு மாதங்களுக்கு வரை பயன்படுத்தலாம்.

1.அருகன் தைலம்

அருகம்புல்லை இடித்துச் சாறு பிழிந்து அத்துடன் சிறிது அதிமதுரம் சேர்த்து சாற்றுக்குச் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்துக் காய்ச்சிக் தைலப் பக்குவத்தில் எடுத்துக் கொள்ளவும்.

மேற்கொண்டவாறு தயார் செய்யப்படும் அருகன் தைலத்தை வெளிப்பூச்சாக தடவி வர அனைத்துத் தோல் நோய்கள், தலைமுடி உதிர்தல், புழுவெட்டு ஆகியன தீரும்.


2. பிண்ட தைலம்

நல்ல எண்ணெய் – 100 மில்லி லிட்டர்
தேன்மெழுகு – 10 கிராம்
குங்கிலியம் – 5 கிராம்
வேம்பாடம்பட்டை – 5 கிராம்

மேலே கூறியவற்றை முறைப்படிச் சேர்த்துத் தைலம் காய்ச்சி வைத்துக் கொள்ளவும். இதனை தேய்த்து வர அனைத்து வாத நோய்களும், மூட்டு வலிகளும் தீரும்.


3.மத்தன் தைலம்

ஊமத்தைச் சாறு – 100 மில்லி லிட்டர்
தேங்காய் எண்ணெய் – 100 மில்லி லிட்டர்

இரண்டையும் அடுப்பேற்றிக் காய்ச்சி தைலப் பதத்தில் வடித்து வைத்துக் கொள்ளவும்.
இந்த தைலத்தை ஆறாத புண், பிளவை போன்றவற்றிற்கு புண்ணில் எண்ணெய் வைத்துக் கட்டவும்.


4.கற்பூராதித் தைலம்

தேங்காய் எண்ணெயை அடுப்பேற்றிச் சூடேற்றியவுடன் சிறிது சூடம் சேர்த்து இறக்கி வைத்துக் கொள்ளவும். இதனை மார்பில் பூச நெஞ்சில் கட்டிய கோழை தீரும்.


5.கூந்தல் தைலம்

கரிசாலை, அவுரி, செம்பருத்தி, கறிவேப்பிலை, பொன்னாங்கண்ணி, பொடுதலை, மருதோன்றி ஆகியவைகளை இடித்துப் பிழிந்த சாறு வகைக்கு 100 மில்லி லிட்டர் எடுத்து அதை 700 மில்லி லிட்டர் தேங்காய் எண்ணெயுடன் கலந்து அடுப்பேற்றித் தைலப் பக்குவத்தில் காய்ச்சி இறக்கி வைக்கவும்.

இந்தக் கூந்தல் தைலத்தை தொடர்ந்து பூசி வர முடி உதிர்தல், செம்பட்டை, தலைப்பொடுகு ஆகியன தீரும். முடி நன்கு வளரும்.