Friday, June 29, 2018

முக்கூட்டு சூரணம்

முக்கூட்டு சூரணம் !!!

திருஅருட்பிரகாச வள்ளலார் அவர்கள் அருளிய காயகல்பம்மூலிகை

        காயகல்பம் என்பது நோயற்ற வாழ்வு வாழ சித்தர்கள்நமக்குஅளித்த உயர் தத்துவம் ஆகும்

சாதாரணமாக காயகல்பம் தயார்செய்யமிகுந்தசெலவாகும்.

ஆனால் வள்ளலார் மிகக்குறைந்த செலவில் மனித குலம் வாழகாயகல்பம்
அருளியுள்ளார்கள் !!!

வெள்ளை கரிசலாங்கண்ணி 200 கிராம்,
தூதுவளை 50 கிராம்,
முசுமுசுக்கை 50 கிராம்,
சீரகம் 50 கிராம்
 ஆகியவற்றை பொடியாகவாங்கி (சீரகம் மட்டும் தனியாக வாங்கி லேசாக வறுத்து பொடித்துக் கொள்ளவும்).

இந்தபொடிகளையெல்லாம் ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.

இதில் மூலிகை குரு மருந்தை சேர்க்க மிக்க வீரியமுள்ள மருந்தாக இருக்கும் !!!

மூலிகை குரு எமது குரு உபதேசித்த மூலிகையாகும்

தினமும் காலையில்பல்துலக்கியவுன் ஒரு தம்ளர் பாலில்மேற்கண்ட பொடியை ஒரு டேபிள் ஸ்பூன் கலந்து ஐந்து நிமிடங்கள்
கொதிக்கவைத்துநாட்டுசர்க்கரை கலந்து லேசான சூட்டில்
சிறிதுசிறிதாகசுவைத்துசாப்பிடவேண்டும்.

இதனை சாப்பிட ஆரம்பித்த மறுநாளிலிருந்து மலம் கருப்பு நிறத்தில் வரும்.

சிறுகுடல், பெருங்குடலில் இருக்கும் பழைய மலங்கள் வெளித்தள்ளப்படும்.சிறுகுடல்உறிஞ்சிகள்(VILLUS)தூய்மைப் படுத்தப்பட்டு சாப்பிடும் அனைத்தும் முழுமையாக இரத்தத்தில் சேர்க்கப்படும்.

99 சதவீதம் பெரும் நோய்கள் உடலை தாக்காமல் இருக்கும். கேன்சர், சிறுநீரக நோய்கள், இதய நோய்கள் வராது !!!

கல்லீரலை பலப்படுத்தும் அனைத்து நோய்களும் குணமாகும்.

பத்தியம்
எதுவுமில்லை.

தினமும்சாப்பிட சர்வரோகநிவாரணியாக செயல்படுகிறதுஇந்த மருந்துசர்வரோகநிவாரணியாகும்.

இதனைத் தொடர்ந்து வருடக் கணக்கில் சாப்பிட்டு வர மனிதவுடலைவாட்டும்

அனைத்துநோய்களும் குணமாகும்.
 இந்த மருந்து என்னிடம்வரும் அனைத்துநோயாளிகளுக்கும் கட்டாயமாக சாப்பிடச் சொல்வேன்.

சர்வ நிச்சயமாக பலன் பெறுவீர்கள்.

இதனைப் படிக்கும்அனைத்துநண்பர்களும் இந்த மருந்தினை அவசியம் சாப்பிட வேண்டும்.

நோயற்றவாழ்வுவாழ்வு வாழவேண்டும்


Tuesday, June 26, 2018

தாம்பத்திய வாழ்வில் ஏற்படும் சில பிரச்சினைகள்
தீர்த்துக் கொள்ள வழி தெரியாமலும்
யாரிடம் கேட்டு சரி செய்து கொள்ளுவது என்று தெரியாமலும் வெளியே சொன்னால் என்ன நினைப்பார்கள்
அதனால் ஏற்படும் பின் விளைவுகள் போன்றவற்றை நினைத்து
 பலர் மனதுக்குள்ளேயே வருந்தி இல்லற சுகத்தை இழந்து வாடுகின்றனர்
இதனால் பெரிதும் பாதிக்கப் படுபவர்கள் பெண்களே
அத்தகைய பெண்களுக்கு தீர்வு தர வேண்டிய கட்டாய கடமை நல்ல மருத்துவர்களுக்கு உண்டு
எனவே இந்தக் குழுவில் உள்ளவர்கள் இந்த மருத்துவக் குறிப்புகளைத் தவறாகப் பார்க்காமல்

இது ஆண்களுக்கான மருத்துவம் என்றாலும் பாதிக்கப் படுவது பெரும்பாலும் பெண்களாக இருப்பதாலும்
அதற்கான மருந்து எதுவென்று தெரியாமல் இருப்பதாலும் போலி மருத்துவர்களிடம் மாட்டிக் கொண்டு பணத்தையும் உடல் நலத்தையும் இழந்து விடாமல் இருக்கவும்

தாங்களே வீட்டில் எளிதாக செய்து பயன்படுத்தி நலம் அடைவதற்காகவும்

உங்களுக்குத் தேவைப் படாவிட்டாலும்
வெளியே கேட்கத் தயங்கி நிற்கும் தங்கள் நண்பர்களுக்கும் தெரியப் படுத்தி மகிழ்ச்சியான வாழ்வு வாழ வழி காட்ட வேண்டுகிறேன் 

ஆண்களின் தாது பலம் அதிகரிக்க
உயிரணுக் குறைவு நீங்கி நலம் பெற

குடி
போதை
புகை
கோகோ கோலா போன்ற குளிர்பானங்கள்
குர்குரே லேஸ் போன்ற சிப்சுகள்
அறவே நீக்க வேண்டும்

 இரவு கண் விழிப்பதை  தவிர்க்க வேண்டும்
உணவுப் பழக்கம் மாற்ற வேண்டும் – இரசாயன உணவுகள் நீக்க வேண்டும்
உயிர்சத்துள்ள உணவுகள் விதையுள்ள பழங்கள் கீரைகள் காய்கறிகள் உணவில் சேர்க்க வேண்டும்

இந்தப் பிரச்சினையை சரிசெய்து மகிழ்ச்சியான இல்லற வாழ்வு வாழ அற்புதமான எளிய மருத்துவம்
மருந்து
வெங்காய விதை ................  பத்து கிராம்
அரச மரத்து பழ விதை ................ பத்து கிராம்
ஆல மரத்து பழ விதை ................ பத்து கிராம்
முள்ளங்கி விதை ................... பத்து கிராம்
சப்ஜா விதை ........................ பத்து கிராம்
சாரப் பருப்பு ....................  ஐந்து கிராம்
வால் மிளகு ....................  ஐந்து கிராம்
திப்பிலி .......................  மூன்று கிராம்

சேர்த்து அரைத்து தூளாக்கி
தினமும் ஒரு வேளை  ஐந்து கிராம் பொடியை தேனில் குழைத்து அல்லது நாட்டுப் பசு  நெய்யில் குழைத்து  சாப்பிட்டு வர
தாது பலம் விந்து அணுக்களின் எண்ணிக்கை குறைவு நீங்கும்
உடல் பூரிக்கும் தாது பலம் அதிகரிக்கும்  நரம்புகள் பலம் பெரும் உடல் முறுக்கேறும்

குறிப்பு
எல்லாப் பொருட்களும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்

விந்து விரைவில் வெளியேறுதல் சரியாக
Premature ejaculation PME

தாம்பத்தியத்தில் ஈடுபடும்போது
அதி விரைவாக விந்து வெளியேறுதல்
ஓரிரு நிமிடங்களில் அல்லது சில வினாடிகளில் விந்து வெளியேறுதல்
தாம்பத்தியக் குறைபாடு மனப் படபடப்பு குழந்தை இன்மை மனக் கருத்து வேறுபாடு போன்ற நிலைகள் ஏற்படும்
இதனால் ஆண்களும் பெரும்பாலும் பெண்களும் திருப்தி  இன்மையால் மன சோர்வு அடைந்து இல்வாழ்வில் இல்லற சுகம் இழந்து வருந்துகின்றனர்
வீட்டிலேயே நல்ல மருந்து செய்து இந்தப் பிரச்சினையை சரி செய்து மகிழ்ச்சியான வாழ்வு வாழ வழி கிடைக்காதா என்று ஏங்கி நிற்கும்
பெண்களுக்கான அற்புதமான வழி காட்டுதலே இந்த மருந்து

அதிகப் படியான உடல் சூடு
மெலிந்த உடல்
பணிசெய்யும்   சூழ்நிலை போன்றவை காரணமாக அமைகின்றன

பசலைக் கீரை பொன்னாங் கண்ணிக்கீரை பிஞ்சு முருகை போன்றவை உணவில் அடிக்கடி சேர்க்கவும்
முருங்கை விதை சூரணம் தேனில் குழைத்து  சாப்பிடலாம்
  மருந்து  செய்யும் முறை
கஜூர் காய் ..........................   இருபது கிராம்
நீர்முள்ளி விதைப் பொடி .......  பத்து கிராம்
நெருஞ்சில் முள் பொடி ............... பத்து கிராம்
வெள்ளரி விதை .................... பத்து கிராம்
பூசணி விதை ..................... பத்து கிராம்
முந்திரிப் பருப்பு ................... பத்து கிராம்

சேர்த்து அரைத்து தூளாக்கிக் கிடைக்கும் சூரணத்தில்
 ஒரு வேளைக்கு ஐந்து கிராம் சூரணம்
சூடான நாட்டுப் பசும்பாலில் கலந்து
அல்லது நாட்டுப் பசு நெய்யில் குழைத்து
தினமும் காலை மாலை என இரண்டு வேளைகள் சாப்பிட்டு வர படிப்படியாக நோய் விலகும் உடல் புத்துணர்ச்சி அடையும் தாம்பத்திய வாழ்க்கையில்  மகிழ்ச்சி கிடைக்கும்

Sunday, June 24, 2018

சில பாஷாண; உபரச சரக்குகளின் ஆங்கில பெயர்கள்❄❄❄

*சில பாஷாண, உபரச சரக்குகளின் ஆங்கில பெயர்கள்:*

1) வீரம் - perchloride of mercury

2) பூரம் - bichloride of mercury

3) கற்பூரம் - cinnamomum camphora

4) மனோசிலை - red orphiment

5) அஞ்சனக்கல் - antimony sulphite

6) அப்பிரகம் - mica

7) அரிதாரம் - yellow orphiment

8) இந்துப்பு - sodium chloride impura

9) ரசம் - mercury

10) லிங்கம் - sulphur of mercury

11) கந்தகம் - sulphur

12) கல்நார் - asbestos

13) கல்மதம் - rock alum

14) கற்சுண்ணம் - lime stone

15) காந்தம் - lead stone

16) வெண்காரம் - borax

17) காரீயம் - black lead

18) சவ்வீரம் - bisulphate of mercury

19) சாத்திர பேதி - soft red ocre

20) சாரம் - potash

21) சீனாக்காரம் - alum

22) குந்திரிக்கம் - boswellia serrata

23) துருசு - sulphate of copper

24) தொட்டி பாஷாணம் - type of arsenic

25) பொறிகாரம் - borax

26) பொன்னிமிளை - gold colour bismuth

27) மடல் துத்தம் - sulphate of zinc

28) வங்கம் - lead

29) வெடியுப்பு - potassium nitrate

30) வெள்ளை பாஷாணம் - white arsenic

31) கௌரி பாஷாணம் - yellow arsenic

32) சிலாமதம் - bitumen

33) தாளகம் - orphiment

34) லிங்கம் - mercury sulphide, vermiluri

35) கற்பாஷாணம் - metreorite

36) தீமுருகல் - phosphorus

37) குக்குலு - indian bellium

38) கருப்பு குங்கிலியம் - black dammer, canarius strictum

39) வெள்ளை குங்கிலியம் - conkany reseri, boswellia serrata

40) பூனைக்கண் குங்கிலியம் - cat's eye resin of yellowise brown colour, pistacia lentiscus

41) மைசாட்சி - foreign guggal, balsamoderidron mukal

Sunday, June 10, 2018

அயச்செந்தூரம்

அயச்செந்தூரம் தயார் செய்யும் முறை அதன் பயன்கள்
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
100 கிராம் சுத்தி செய்த அயப் பொடியுடன் 300 கிராம் சுத்தி செய்த கந்தகம் சேர்த்து கற்சுண்ணாம்புத் தெளிவு நீர்விட்டு அரைத்து கடும் வெயிலில் உலர்த்தி இரும்புச் சட்டியிலிட்டு வறுத்தெடுக்கச் செ தூரம்மாகும் இதை ஒரு நாள் நன்கு அரைத்துப் புட்டியிலிட்டு பத்திர படுத்தவும் இதில் 200 மி.லி முதல் 300 மி.லி கிராம் வரை கரிசாலைேகியத்தில் சாப்பிட பாண்டு, காமாலை, சோகை தீரும் . தேனில் கொள்ள வயிற்று போக்கு தீரும் குருதி பெருகி உடல் வலுவும் அழகும் உன் டாகும்

குமரி கிருதம்

#குமரிசாக்லெட் #கிருதம். மருந்து செய்முறை.

தேவையான பொருட்கள்:
1.சித்தாமணக்கெண்ணெய் -1லிட்டர்
2.சோத்து கத்தாழை சோறு  -1/2 கிலோ
3.தரமான பனங்கல்கண்டு  -1/2கிலோ
4.வெள்ளை வெங்காயம்    -250 கிராம்
5.சீரகம்                                    -25 கிராம்

செய்முறை:
         
            சோற்று கற்றாழை மேல் தோல் சீவி சோறு எடுத்து ஏழுமுறை கழுவி சாக்லெட் அளவு துண்டுகளாக நறுக்கி வைக்கவும். பனங்கல்கண்டை  அரைத்து சலித்து பொடித்து வைக்கவும்.சீரகத்தை வறுத்துப் பொடித்து வைக்கவும்.வெள்ளை வெங்காயத்தை இடித்து சாறு எடுத்து வைக்கவும்.
            சித்தாமணக்கு எண்ணெய்யை அடுப்பில் வைத்து  பொடித்து வைத்துள்ள பனங்கல்கண்டு, சீரகம் மற்றும் கற்றாழை சோறு மற்றும் வெள்ளைவெங்காய சாறு இவைகளை எண்ணெய்யுடன் கலந்து எரித்து வரவும்.நீர் சுண்டி மெழுகு பதம் வந்ததும் இறக்கி பத்திரப்படுத்தி வைக்கவும்.
தீரும் நோய்கள்:

1.நவமூலமும் தீரும்.

2.அல்சர், ரணம்,வயிறு எரிச்சல், நெஞ்சு எரிச்சல், வயிற்று வலி, குடல் புண்கள் தீரும்.

3.பசியின்மை, புளியேப்பம்,பொருமல், மந்தம் இவை தீரும்.

அளவு:   காலை மாலை பதினைந்து மி.லி அளவு சாப்பிட வேண்டும்.உடல் பலத்திற்கு தக்கபடி அளவை  கூட்டிக் குறைத்து சாப்பிட வேண்டும்.
மேலும்,
4.மேக ரோகம் அதனால் ஏற்பட்ட பலவீனம்.

5.நீர்கசியும் கிரந்தி,அரிப்பு, தினவு, எரிச்சல்.

6.உஷ்ணத்தினால் மஞ்சள்,சிவப்பு நிறங்களில் நீர் போதல்.

7.தாது இழப்பு, விந்து நட்டம், விந்து நீர்த்தல், பலவீனம் , விந்து முந்துதல் தீர்ந்து  விந்து தடிப்பாகும்.

8.அரையாப்பு, தொடைக்கட்டி, உறுப்புகளின் அக,புற ரணங்கள், சீழ் வடிதல் தீரும்.

9.மிக அற்புதமான மலச்சிக்கல் நிவாரணி.

10.தொடர்ந்து கொடுத்து வர குழந்தைகளின் உடல் தேறும்.

அளவு:
காலை மாலை ஐந்து மில்லி அளவு கொடுத்து காரம், புளி நீக்க வேண்டும்.

தாது புஷ்டி லேகியம்💪💪💪

*தாது புஷ்டி லேகியம்*
1.சீமை அமுக்குரா கிழங்கு 200கிராம்,
2.நிலப்பனங்கிழங்கு 200கிராம்,
3.தண்ணீர் விட்டான் கிழங்கு200கிராம்,
4.காமசர்க்கரை கிழங்கு 200கிராம்,
5.பூமிசர்கரை கிழங்கு 200கிராம்,
6.பூனைக்காலி விதை 200கிராம்,
7.ஆடுதீண்டாபாலை விதை 200கிராம்,
8.ஓரிதல் தாமரை 200 கிராம்,
9.நீர் முள்ளி விதை 200 கிராம்,
10.விஷ்ணுகிரந்தி 50 கிராம்,
11.சிறு நெருஞ்சில் விதை 50 கிராம்,
12.அத்தி விதை 50 கிராம்,
13.அரசு விதை 50 கிராம்,
14.ஆல் விதை 50 கிராம்,
15.முருங்கை விதை 50 கிராம்,
16.இசப்புகோல்விதை 25 கிராம்,
17.தேற்றான் விதை 50 கிராம்,
18.பூலாங்கிழங்கு 50 கிராம்,
19.சுலேற்மிசில் 50 கிராம்,
20.நன்னாரி 50 கிராம்,
21.நெல்லி வற்றல்50 கிராம்,
22.மாசிக்காய் 5,
23.சாதிக்காய் 5,
24.சாதிப்பத்திரி 25 கிராம்,
25.நற்சீரகம் 50 கிராம்,
26பெருஞ்சீரகம் 50 கிராம்,
27.வேலம் பிசின் 25கிராம்,
28.முருங்கை பிசின் 25 கிராம்,
29.பாதாம் பிசின் 25 கிராம்,
30.முள்ளிலவம் பிசின் 25 கிராம்,
31.அதிமதுரம் 25 கிராம்,
32.ஏலம் 25 கிராம்,
33.கசகசா 25 கிராம்,
34.மதனகாம பூ 50 கிராம்,
35.அக்ரகாரம் 25 கிராம்,
36.பஞ்சாப் சாலாமிசிரி 100 கிராம்,
37.சாரபருப்பு 25 கிராம்,
38.அக்ரோட் பருப்பு25 கிராம்,
39.பாதாம் 25 கிராம்,
40.பிஸ்தா 25 கிராம்,
41.முந்திரி 25 கிராம்,
42.கருப்பு உலர் திராட்சை 25 கிராம்,
43.தேன் தேவையான அளவு,
44.நெய் தேவையான அளவு,
45.வெள்ளாட்டு பால் தேவையான அளவு,
46.பசும்பால் தேவையான அளவு.
*செய்முறை* ஒன்று முதல் ஐந்து வரை உள்ள சரக்குகளை தனித்தனியே பசும்பாலில் அவித்து நிழலில் உலர்த்தி இடித்து துணியில் சலித்துக் கொள்ளவும்.
ஐந்து முதல் ஏழுவரை உள்ள சரக்குகளை (பூனைக்காலி விதையை தோல் நீக்கி) வெள்ளாட்டுப்பாலில் மைய அரைத்து வில்லை தட்டி காய வைத்து பொடித்து வைத்துக்கொள்ளவும். மற்றவைளையும் சுத்தி செய்து தூளாக்கி கலந்து தேவையான அளவு எடுத்து லேகியம் கிளறி பத்திரப்படுத்தவும்.
*அளவு மற்றும் அனுபானம்*
 காலை, இரவு நெல்லிக்காயளவு சாப்பிட்டு பால் சாப்பிடவும்.
*பயன்கள்* தாது வலிமையை தரும். உடல் புத்துணர்ச்சி பெரும். கடினமான வேலை செய்தாலும் உடல் சளைக்காது. சனேந்திர உறுப்புகள் பலம் பெரும். உயிரணு அபரிவிதமாக உற்பத்தி ஆகும். ஆண்களுக்கான அருமருந்து. *அனுபவ மருந்து*


Wednesday, June 6, 2018

எலும்பு முறிவிற்கு எப்படி கட்டுப் போடுதல்❄


எலும்பு முறிவிற்கு எப்படி கட்டுப் போடுதல் என்பதை  வெளியிட்டுள்ளேன். பDITHத்து பயனடையுங்கள்.  முதலில் முட்டைப் பற்றிட தேவையான பொருட்கள்
( 1 ) நாட்டுக் கோழி முட்டை (கிடைக்கவில்லை என்றால் லக்கான் கோழி முட்டை உபயோகிக்கலாம்)
( 2 ) உளுந்தம் பொடி மிக மெல்லியதாய் அரைத்தது
( 3 ) நல்லெண்ணெய்
( 4 ) அத்திக்காய் காய வைத்தது மெல்லியதாய் பொடி செய்து அரைத்தது (கிடைக்கவில்லை என்றால் விட்டுவிடலாம்)
( 5 ) காடாத் துணி வேண்டிய அளவுக்கு
( 6 ) துளி அளவு சுண்ணாம்பு
முதலில் நாட்டுக் கோழி முட்டைகளை கட்டுப் போட தேவையான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த கட்டிற்கு 4 முட்டைகள் தேவை என்பதால் 4 முட்டைகள் மட்டும் எடுத்துள்ளேன்.
அடுத்து நாட்டுக் கோழி முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் தனியே பிரித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
மேற்கண்ட முட்டை வெள்ளைக் கருவுடன் உளுந்தம் பொடியை சேர்த்து கட்டி இல்லாமல் பிசைந்து கொண்டு அத்துடன் அத்திக்காய்ப் பொடியும் சேர்த்துப் பிசைந்து கொள்ள வேண்டும்.
அத்துடன் நல்லெண்ணெய் சேர்த்துப் பிசைந்து நல்ல ஒட்டும் பருவம் வந்தவுடன் அதில் துளியளவு நீற்றுச் சுண்ணாம்பை சேர்த்து பிசைந்து துணியில் தடவி மேலே போட்டு காற்று குமிழ் இல்லாமல் இறுக்கமாக போட்டு கட்டுப் போட்டுவிடவும்.
இந்த முட்டைப் பற்று சாதாரணமாக அலோபதி எலும்பு முறிவு மருத்துவர்கள் போடும் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் கட்டுப் போடுவது போலன்று. இது எலும்பும், எலும்பு மச்சையும், எலும்பிலுள்ள சவ்வுகளையும் மிக நன்றாக ஒட்ட வல்லது.
இத்துடன் உள்ளுக்குச் சாப்பிட நத்தைச் சூரி எண்ணெயும், வஜ்ஜிர வல்லி என்னும் பிரண்டையை லேகியமாகச் செய்து தர ஒரு வாரத்தில் எலும்பு கூடும்.
.
இத்துடன் கால்களை அசைக்காமல் இருப்பது அவசியம்.நடக்க முயற்சிக்காமல் இருப்பது மிக நல்லது.
.
இதே எலும்பு முறிவை அலோபதி வைத்தியத்தில் சரி செய்ய 3 மாதங்கள் ஆகும். அத்துடன் சிறுநீரக செயல் இழப்பு, கல்லீரல் செயலிழப்பு, மண்ணீரல் செயலிழப்பு போன்றவைகள் அலோபதி வைத்தியத்தில் போனசாக வழங்கப்படும். இது தேவையா என்று யோசியுங்கள்?
இந்த முட்டைப் பற்றை
# ஒடிந்த எலும்பைச் சேர்க்க மற்றும் எலும்புத் தேய்மானம்,
# சவ்வு கிழிதல்,
# சவ்வு விலகல்,
# இடுப்பெலும்பு தேய்மானம்,
# முதுகுத் தண்டுவட விலகல்,
# கழுத்தெலும்புத் தேய்வு
# ப்ரொக்ஷிமல் ACL டியர்
ஆகியவற்றைக் குணமாக்கும்.
இந்தக் கட்டை மூன்று முதல் ஆறு நாட்களுக்குள் பிரிக்கலாம். அது வீக்கம் முழுவதும் வடிந்து கட்டு மிக தளர்வாக ஆவதைப் பொறுத்து தீர்மானிக்க வேண்டும்.
.
முட்டை பற்று முட்டியை சரியான position மற்றும் ஜவ்வை சரி செய்துவிடும். ஆனால் அதற்கு பிறகு என்ன செய்தால் இது போன்ற காயங்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம், முட்டின் ஜவ்வை எப்படி வலுவாகுவது, குதிரை போல் காலும் வலுவாக வேண்டும், அதை விட வேகமாக ஓட வேண்டும் என்று விருப்பம் உள்ளவர்கள் கிழே கொடுக்கப்பற்றுள்ளவற்றை பின்பற்றவும்.
எலும்புச் சட்டகம்தான் உடலைத் தூக்கி நிறுத்துகிறது .எலும்புச் சட்டகம் வளர 25 வயதிற்குள் சில பொருட்கள் உடம்பில் சேர்ந்தால் வளரும் நன்கு பலம் பெறும். அதற்கு
1)பிரண்டை உப்பும், இயற்கை சுண்ணாம்புச் சத்துக்களான
2)சங்கு பற்பம்,
3)பவள பற்பம்,
4)சிருங்கி பற்பம்,
5) ஆமையோட்டு பற்பம்
ஆகிய ஐந்து மருந்துகளை சம எடை வாங்கிச் சேர்த்து வல்லாரை நெய்யில் குழைத்து வெறும் வயிற்றில் மூன்று வேளையும் உண்ண 6 மாதத்தில் எலும்புகள் நல்ல பலம் பெறும்.
மேலும் சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன் மூட்டு வலித் தைலம் இதற்கு நல்ல பலன் தரும். இது மூட்டு வலிக்காக மட்டுமல்ல,
# மூட்டுக்கள் பூட்டு விட்டுப் போதல் (Dislocation),
# எலும்பு முறிவு (Fracture),
# மூட்டுக்களில் சவ்வு கிழிந்து போதல் (Ligament Tear),
# இரத்தக் கட்டு,
# மூட்டுக்களில் மசகு இல்லாமல் சடசட எனச் சத்தத்துடன் வலி வருதல்,
# தசைப் பிடிப்பு (Muscle Cramp),
# நரம்பு வலி (Pain in Motor Veins),
# நரம்பு இசிவு (Inflammation in Motor Veins),
# நரம்புகள் சுருண்டு கொள்ளுதல்,
# சுழுக்கு மற்றும் வாதக் கோளாறுகள் (Loco Motor Disorders),
# முதுகுத் தண்டு தட்டுக்கள் நழுவுதல் ,
# கீழ் முதுகு வலி,
# பக்க வாதம் (Single Side and Double Side Paralysis)
போன்ற பல வியாதிகளைக் கண்டிக்கும். இதை மேற்பூச்சாகப் பூசி வர நல்ல பலன் கிடைக்கும். இதிலுள்ள அத்திப் பால் எலும்பை என்றும் ஒடியாத இரும்பாக்கும்.
.
இந்தபதிவில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து மூலிகைகளும் நீங்கள் வசிக்கும் இடத்தின் அருகில் உள்ள நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.                       வாழ்க வளமுடன்.

Monday, June 4, 2018

குமரி நெய்

*குமரி நெய்*
(வர்ம சூத்திரம் - 100)

தேவையான மருந்துகள் :
1.  குமரி சாறு - 1 நாழி
2.  பசு நெய் - 1 படி
3. . 1) சீரகம் 3) சுக்கு 5) அதிமதுரம்
 2) ஏலம் 4) திப்பிலி - வகைக்கு சம அளவு

செய்முறை :
3-ல் உள்ள சரக்குகளை பொடித்து சூரணம் செய்யவும். சாறை அடுப்பேற்றி சூடாக்கி கொதிக்கும் போது நெய்யை சேர்த்து காய்ச்சி கூடவே 3-ல் உள்ள கற்க சரக்குகளை போட்டு கிளறி, மெழுகு பருவத்தில் வடிக்கவும்.

அளவு :
குழந்தைகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும் கரண்டியளவு 2 வேளை உள்ளே கொடுக்கலாம்.

தீரும் நோய்கள் :
இந்நெய்யை தலை முழுகவும் செய்யலாம். முறிவுகளில் தடவலாம். குழந்தைகளுக்கு வரும் கணை நோய்களுக்கும் பயன்படுத்தலாம். பசியின்மை குணமாகும். வர்மம், வறட்சை குணமாகும்.

குறிப்பு: வர்ம மருந்து செய்முறைகள்