Tuesday, August 20, 2019

Magic oil👍

மேஜிக் ஆயில்
சர்வ ரோக நிவாரணி
ரணக் கள்ளி சாறு - 1 லிட்டர்
வாழை தண்டு சாறு - 1 லிட்டர்
பச்சைக் கற்பூரம் - 10 கிராம்
சுத்தமான தேங்காய் எண்ணெய் - 1 லிட்டர்
செம்பு பாத்திரம் அல்லது எவர்சில்வர் பாத்திரத்தில் எண்ணெய்யை ஊற்றி எண்ணெய் சூடேறியதும் ரணக்கள்ளி சாற்றினையும் வாழை தண்டு சாற்றினையும் ஊற்றவும். இரும்பு கடாய் உபயோகம் செய்ய கூடாது. சிறு தீயாக எரித்து வரவும். நீர் இல்லாமல் சாறு அனைத்தும் சுண்டிய பின் பச்சை கற்பூரத்தை பொடித்துப் போட்டு எண்ணெயை வடித்துக் கொள்ளவும். இந்த எண்ணெய் காய்ச்சும் போது மட்டி அதிகம் சேராது. மட்டி சிறிது மெழுகு போல் கிடைக்கும். அது பாத்திரத்தில் ஒட்டாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். இதனை ஆர்வமுள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் தயார் செய்து உபயோகம் செய்யலாம். மிக சுலபமான முறை. பயன்களோ மிக அதிகம். 
சாப்பிடும் அளவு:
காலை - மாலை வெறும் வயிற்றில் 3 முதல் 5 மில்லி சாப்பிட்டு வர வேண்டும்.
தீரும் நோய்கள்:
 தீவிரமான முற்றிய நிலையில் இருக்கும் வாய், இரைப்பை, குடல் புண்கள் குணமாகும். ஒட்டுக்குடல் குணமாகும்.
அமிலத் தன்மையினால் உண்டாகும் நெஞ்செரிச்சல் ஒரே நாளில் குறையும். புற்று நோய்க்கு துணை மருந்தாக சாப்பிடலாம். புற்று நோயினால் ஏற்பட்ட புண்களை ஆற்றும்.
சொத்தை பல் குணமாக:
இந்த எண்ணையை 3 நாட்கள் காலை - இரவு "ஆயில் புல்லிங்" செய்து வர சொத்தை பல் குணமாகும். ஈறு வலி, ஈறு வீக்கம் குணமாகும். வாரம் ஒரு முறை வாய் கொப்பளித்து வந்தால் சொத்தை பல்லே வராது.
காலாணி குணமாக:
இரவு தூங்கும் போது காலை சுத்தமாக கழுவி ஈரம் இல்லாமல் துடைத்து இந்த எண்ணையை காலாணி மேல் தடவி வர வேண்டும். காலாணியை அறுக்கத் தேவை இல்லை. முதல் நாளே வலி குறைந்து விடும். 2வது நாளில் நடந்தால் வலி இருக்காது. தொடர்ந்து 15, 20 நாட்கள் தடவி வர காலாணி கரைந்து விடும். மீண்டும் வராது.
மரு:
மருவின் மேல் தடவி வர மரு உதிர்ந்து விடும்.
டான்சில் குணமாக:
காலை மாலை வெறும் வயிற்றில் இந்த எண்ணையை 5 மில்லி லிட்டர் வீதம் சாப்பிட்டு வர வேண்டும். 30 நாட்கள் தொடர்ந்து சாப்பிட டான்சில் குணமாகி விடும். இந்த எண்ணையை சாப்பிட்ட உடன்  தண்ணீர் அரை மணி நேரம் குடிக்காமல் இருக்க வேண்டும். டான்சில் நோய்க்கு மட்டுமல்ல எந்த உபாதைக்கு சாப்பிட்டாலும்  தண்ணீர் அரை மணி நேரம் குடிக்காமல் இருப்பது நல்லது.
டான்சில் உள்ள இடத்தில் வெளிப்புறமாக இந்த எண்ணையை தடவி வர வேண்டும்.
சிறுநீரக கற்கள் உள்ளவர்களும் இந்த எண்ணையை சாப்பிட்டு வர கற்கள் கரைந்து விடும்.
கேன்சர்:
கேன்சருக்கு இந்த எண்ணெய் ஒரு துணை மருந்து. உள்ளேயும் இதை உட்கொண்டு வெளிப்பூச்சாகவும் பூசி வர வேண்டும்.
இந்த எண்ணையை எனக்கு கற்று கொடுத்தவர் சத்தியமங்கலம் அருகே காளியூர் பிரிவில் சித்த மருத்துவமனை வைத்திருக்கும்   திரு.K.A.K.கொழந்தைசாமி கவுண்டர். இவர் இந்த எண்ணையை அணைத்து நோய்களுக்கும் துணை மருந்தாக தருகிறார். எதிர்பாராத பலன் கிடைக்கின்றது.
அனைத்து மருத்துவர்களிடமும் இருக்க வேண்டிய இந்த எண்ணெய் மிக அற்புத பலன்களை தரும்.
மூலத்திற்கு வெளிப்பூச்சாக தடவி வர ஆசன வாய் வெடிப்பு புண்கள் மறையும். கட்டிகள் கரையும்.