Friday, August 24, 2018

பாலா அரிஸ்ட்டம் செய்முறை

பாலா அரிஸ் ட்டம்  செய்முறை                               
 5  கிலோ  குறுந்தோட்டி, 5   கிலோ அமுக்கிராகிளங்கு,  ஆகியவற்றை  சிதைத்து  50  லிட்டர்  தண்ணீரில்  கொதிக்கவைத்து15  லிட்டராக  வர்றவைத்து,  அதில் 10 கிலோ  வெல்லம்  கரைத்து,அத்துடன்  கீரைப்பாலை100  கிராம்  ,  ஆமணாக்குவேர்,  சித்தரத்தை, ஏலக்காய்,  முதியார்கூந்தல்   லவங்கம்  விலாமிச்காம்  நெருஞ்சில்  ஆகியவை  வகைக்கு 50   கிராம்  வீதமும், காட்டத்திப்பூ800  கிராமும்  இடித்து  தூள்  செய்து  கலந்து  நாற்ப்பது  ஊறவைத்து  வடிகட்டிஉபயோகபடுத்தவும்

             முப்பது  மில்லி+நீர்  கலந்து  தினம்  மூன்றுவேளை  கொடுப்பது  வழக்கம் .,பசியின்மை,  பலவீனம் ,நரம்பு தளர்ச்சி ,கீல்வாய்வு,  ஆமவாதம், பலவிதவாதரோகங்களுக்கு  கொடுக்கப்படுகிறது

   இம்மருந்து  செய்ய  மாநில  அரசின்  அனுமதி  தேவை

Friday, August 10, 2018

ரசமணி வகைகள்👼❄

ரசமணி வகைகள் :

நான் ரசமணியை கற்றுகொண்ட போது ரசமணி பற்றி எனக்கு போதித்த சில செய்திகளை எழுதுகிறேன். ரசமணிகளில் முழுக்க முழுக்க மூலிகை சாற்றினாலோ, அல்லது துருசு (மயில் துத்தம்) மற்றும் மூலிகை சாறு பயன்படுத்தியோ அல்லது செயநீர்கள் தயாரித்தோ அல்லது எலி, அட்டை, மண்புழு  போன்றவைகளை கொண்டும் செய்யப்படுகின்றது. இங்கு கடைகளில் காணப்படும் ரசமணிகள் அனைத்தும் வெள்ளியம் கலந்த ரசமணியாக, மயில் துத்ததை கொண்டு செய்யப்படும் ரசமணியாக மற்றும் வெறும் மூலிகை சாற்றினால் செய்யப்படும் ரசமணியாக இருகின்றன.

ரசமணி இரண்டு வகைப்படும்.

 1. நெருப்புக்கு நிற்காமல் ஓடும் ரசமணி.
 2. நெருப்புக்கு ஓடாமல் நிக்கும் ரசமணி

நெருப்புக்கு நிற்காமல் ஓடும் ரசமணி :

 மயில் துத்ததை கொண்டு செய்யப்படும் ரசமணிகள், வெறும் மூலிகைகள் கொண்டு செய்யப்படும் ரசமணிகள் ஆகியவை நெருப்புக்கு நிக்காமல் ஓடும் ரசமணிகள். அதாவது பாதரசத்தை மேல் சொன்னபடி மயில் துத்தம் கொண்டோ அல்லது வெறும் மூலிகைகள் கொண்டோ ஏதாவது ஒரு முறையில் மணியாக கட்டி பின்பு அதை ஒரு இரும்பு உருக்கு களத்தில் வைத்து உருக்கும் போது அவை உருகி நிற்குமே தவிர, மீண்டும் மணியாக வராது. அதாவது மற்ற உலோகத்தை போல  தானாகவே இறுகாமல் நீர்ம   நிலையிலே இருக்கும். இவைகள் நெருப்புக்கு நிற்காமல் ஓடும் ரசமணி ஆகும்.

வெள்ளியம் கலந்த ரசமணி :

வெள்ளியம் கலந்த ரசமணி அடிப்படை ரசமணிகளில் ஒன்று. கடைகளிலும், கோவில் திருவிழாக்களிலும் விற்கப்படும் ரசமணிகள் வெள்ளியத்துடன் பாதரசம் கலந்த ரசமணிகளே பெரும்பாலும் அதிகம் விற்கப்படுகிறது.

வெள்ளியம் கலந்த ரசமணி செய்முறை :

40% வெள்ளியத்தை ஒரு இரும்பு கரண்டியில் வைத்து உருக்கி அதில் 60% பாதரசத்தை ஊற்றினால் அவை வெள்ளியத்துடன் இறுகி ரசமணியாக மாறுகிறது. இதுதான் கடைகளில் அதிகம் விற்கப்படுகிறது. இதன்  அளவு  இப்படிதான் இருக்கவேண்டும் என்று இல்லை. நம் வசதிக்கு ஏற்ப வெள்ளியத்தை குறைத்து பாதரசத்தின் அளவை கூட்டிக்கொள்ளலாம். இதே போல வெள்ளியிலும் செய்யலாம். இது எனக்கு சொல்லப்பட்ட முதல் ரசமணி. வியாபார நோக்கதிற்காக இத்தகைய ரசமணிகள் உருவாக்கப்படுகின்றன.இதன் விலை 150 முதல் 300 வரை இருக்கும். வெள்ளியம் என்ற உலோகம் சல்ரிங் செய்ய பயன்படும் உலோகம் ஆகும். அதைகொண்டு செய்யலாம். இதில் சித்தர்கள் சொன்ன இயல்பான சக்தி உண்டே தவிர புதிய சக்திகள் ஏற்ற முடியாது.

சித்தர்களின் ரசமணி :

சித்தர்களின் ரசமணி என்பது நெருப்புக்கு நிற்காமல் ஓடும் ரசமணிகளில் ஒன்று. அதன் செய்முறையை காணலாம்.

சித்தர்களின் ரசமணி :

ரசமணி செய்முறைகளில் எளிமையான முறைகளில் ஒன்று சித்த ரசமணி. இதற்க்கு விராலி என்ற மூலிகை தேவை மற்றும் துருசு சுண்ணம் தேவை.
ஒரு பாத்திரத்தில் விராலியிலையை நறுக்கி அதில் துருசு சுண்ணத்தை போட்டு மூடிவைத்து விடவேண்டும். சிறிது நேரம் கழித்து பார்த்தால் அதில் அந்த மூலிகையின் சாறு இறங்கி இருக்கும். அந்த சாறை ஒரு இரும்பு கரண்டியில் ஊற்றி, அதற்குள் தேவையான பாதரசத்தை ஊற்றி, எரியும் தீயில் அந்த இரும்பு கரண்டியை வைக்க, அதில் உள்ள பாதரசம் கட்டும். தேவையான மட்டும் உருட்டிக்கொள்ளலாம். இதற்க்கு தேவையான சக்திகளை ஏற்றலாம். இது ரசமணியே அன்றி, குளிகை அல்ல. இப்படி செய்கின்ற ரசமணியின் விலை அதிகமாக இருக்கும்.

நெருப்புக்கு ஓடாத ரசமணி :

நெருப்புக்கு ஓடாத ரசமணி என்பது கட்டிய ரசமணியை ஒரு இரும்பு கரண்டியில் வைத்து உருக்கும் போது உருகி பின்பு தானாகவே கட்டியாக மாறி விடும். இத்தகைய ரசமணிகள்தான் ரசவாதத்திற்கு உதவும். இதில் இருந்துதான் ரசவாத தங்கம் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த ரசமணிகள் எப்படி செய்வது. எப்படி செய்வது என்று எனக்கும் தெரியாது. ஆனால் இதை யாரிடமாவது கேட்டாலும் செய்துதருவது அரிது. இதை செய்வதற்கு செலவும் அதிகம். இதில் இருந்துதான் ரசமணி குளிகைகள் செய்ய முடியும். இப்படி செய்கின்ற ரசமணிகளுக்கு மட்டுமே நவபாசாணங்களான  9 வகையான பாசணங்கள், நவரத்தினகற்களான 9வகையான மணிகற்கள் , நவமூலிகைகளான 9 வகையான மூலிகைகள், மேலும் 64 வகையான உபரசங்கள் ஆகியவற்றை கொண்டு தனித்தனியாக சாரணை செய்ய சக்தி உள்ள ரசமணி குளிகையாக மாறும்.

ரசமணி

*ரசமணி பற்றி நமக்கு தெரியாத பல அபூர்வ உண்மை ரகசியங்கள்....*

பாதரசம், மெர்குரி, புதன், ரசம், சிவன், விந்து, சக்திமூலம், மூன்று நாடி மருத்துவன் என்றெல்லாம் பல பெயர்களில் பாதரசத்தை அழைப்பார்கள். ரசமணியை லிங்கமாகவும், மணியாகவும், தண்ணீரில் வைத்தும், வைத்தியத்திற்கும் பயன்படுத்துவர். தங்கத்தை பிரிக்கவும் பயன்படுத்துகின்றனர்.

மனிதருக்கு மூன்று நாடிகள் உடலில் உள்ளது. வாதம், பித்தம், கபம் இவைகளாகும். இவைகளை சீரமைக்கும் பணி ரசமணி அல்லது பாதரசத்தால் செய்யப்பட்ட எந்த ஒரு பொருளுக்கும் உண்டு. இதன் மகத்துவத்தைக் கொண்டு பல நோய்களை போக்கலாம்.

உடலில் நாடிகளை சுத்தப்படுத்துவதோடு கிருமிகளை நம் உடலில் அண்டவிடாது. ரசத்தை நேரிடையாக உடலில் அணிவதைவிட தண்ணீரில் வைத்து அந்த தண்ணீரைக்கொண்டு குளிப்பதன் மூலமாக வெகுவிரைவாக ஆரோக்கியம் மற்றும் நன்மைகளைப் பெறலாம்.

புதனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் கட்டாயமாக ரசத்தை மோதிரமாகவோ, மணியாகவோ வேறு எந்த வடிவிலும் உடலில் அணியக்கூடாது. தண்ணீரில் வைத்துதான் பயன்படுத்தவேண்டும். புதனின் வீரியம் கொண்ட பாதரசம் புதன் ஆதிக்கத்தில் பிறந்தவரோடு இணையும்போது அதிக வீரிய விபத்து ஏற்பட்டு நரம்பு கோளாறுகள் ஏற்படுகிறது. பக்கவாதம் ஆண்மைக்குறைவு, நரம்பு தளர்ச்சியும் ஏற்படும் எனவே புதன் ஆதிக்கம் நிறைந்தவர் அவசியம் மேற்சொன்னதை அனுசரித்து காத்துக்கொள்ளவும். இதை மறைவின்றி கூறியதால் மற்றவர்கள் பயப்படத்தேவையில்லை. இதன் அருமை பெருமைகளை அறிந்ததினால்தான் எல்லா சித்தர்களுமே ரசத்தை கட்டும் வித்தைக்கு முக்கியத்துவம் கொடுத்தனர்.

ரசத்தை கட்டித்தான் பயன்டுத்த வேண்டுமா அப்படியே பயன்படுத்தக்கூடாதா என பல கேள்விகள் மக்களிடையே உண்டு. இது நியாயமான கேள்விதான் பதில் அறிவீராக. சித்தர்கள் காலம் முதல் இன்றைய காலம் வரை பாதரசத்தை சுத்தம் செய்து கட்டியாக்கியே பயன்படுத்துகிறார்கள். காரணம் பல உண்டு. அதில் ஒரு சிலதை அறியுங்கள். சுத்தமான ரசம் வெப்பத்தில் ஆவியாகி மறைந்துவிடும். ரசத்தை அப்படியே வைத்து பயன்படுத்தலாம். ஆனால் சாதாரண வெப்ப காற்றில்கூட சிறிது சிறிதாக கண்ணுக்கு தெரியாமல் கரைந்து குறைந்துவிடும். அதனால் பலகாலம் வைத்து பயன்படுத்த முடியாது. மேலும் பாதரசம் எதனோடும் ஒட்டி நிற்காது. எனவே அங்கத்தில் படும்படி வைப்பதும், தண்ணீரில் வைத்து பயன்படுத்தி மீண்டும் தண்ணீரில் இருந்து ரசத்தை எடுப்பதும் சிரமமான விஷயம்.

மேலும் ரசம் நேரிடையாக சுத்திகரிக்காமல் பயன்படுத்தினால் பாஷனமாகும் (விஷம்) இதுவே சுத்தப்படுத்தி பயன்படுத்தினால் அமிர்தமாகும். எனவே ரசத்தை சுத்திகரித்து சில மூலிகைகளால் விஷமுறிவு செய்து பயன்படுத்துவதே சிறந்தது. இதைத்தான் அக்காலம் முதல் செய்கிறார்கள். சில அபூர்வ மூலிகைகள் நம் உடலில் நோய் உண்டாகாகமல் காக்கிறது. சில மூலிகைகள் மனிதர் யாவருக்கும் கிரக கதிர்களை சமமாக்கி கிரக தோஷமின்றி பலனை பெற்றுத் தருகிறது. சில மூலிகைகள் எந்த மாந்திரீக கட்டுக்கும் அகப்படாமல் மனிதரை காக்கிறது. இதனால் திருஷ்டி, தோஷம், சாபம், தீயசக்தி என்ற பயமின்றி இருக்கலாம். சில மூலிகைகள் மனிதனின் வளத்திற்கு பயன்படுகிறது. சில மூலிகைகள் பஞ்சபூத சக்தியை உள்ளடக்கியுள்ளது. இதுபோன்ற நன்மை தரும் அபூர்வ சக்தி கொண்ட மூலிகைகளை ஒன்று திரட்டிய சித்தர்கள் பாதரசத்தை கருஊமத்தை மூலிகையாலும், எலுமிச்சை சாறாலும் சுத்தி செய்து விஷமுறிவு உண்டாக்கி பின்பு மேற்சொன்ன சக்திவாய்ந்த அபூர்வ மூலிகைகளை ஒன்று திரட்டி பாதரசத்தோடு சேர்த்து அறைப்பார்கள். இதனால் ஒரு ரசம் நவ (9) ரசமாக மாறும். ஒன்பது வகையான சக்திகளை மனிதனுக்கு கொடுக்கும்.
இந்திரியம் கட்டுதல், நாடி கட்டுதல், கிரகம் கட்டுதல், பஞ்சபூதம் கட்டுதல், நோய் கட்டுதல், தோஷம் கட்டுதல், விஷம் கட்டுதல், அஷ்டகர்ம கட்டு, அதிர்ஷ்ட கட்டு ஆகிய பணிகளை சிறப்பாக செய்கிறது. இவ்வாறு கட்டிய ரசத்தை மணியாக்கி தனக்கு சித்தியான மந்திரத்தை உரு செய்து அணிந்துகொள்ள சொல்வார்கள். இதனால் ரசத்தின் சக்தி மேலும் வலிமைபெறும்.

பழனியில் போகர் சித்தர் முருகன் சிலையை இவ்வாறே வடிவமைத்தார். நவ பாஷனம்கொண்டு வடிவமைத்ததாக கூறுவார்கள். அந்த முருகனின் மேல் பட்டு வரும் அபிஷேக தண்ணீரை அருந்தினால் நோய்கள் விலகும் என்று கேள்விபட்டிருப்பீர்கள். காரணம் அதிசய மூலிகை கட்டும் ரசமும் முக்கிய காரணம் ஆகும். (ஸ்ரீ முருகப்பெருமானின் அருளை இங்கே ஒப்பிடவேண்டாம்) ரசம் என்பதே இறைவன்தான் என்பதை அறிக.

தண்ணீரும், நெருப்பும், ஆகாயமும், காற்றும், பூமியும் ஆகிய பஞ்ச பூதங்கள் எப்படி இறைதன்மை பெற்றதோ அதைப்போல இந்த பஞ்ச பூதங்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றலை மனித உடலுக்கு தரக்கூடிய ஆறாவது முகம் சடாச்சரம், ஆறாவது பூதம், இந்த பாதரசம் ஆகும். ஆனால் தான் இதை வெளிப்படுத்த ஸ்ரீ முருகப்பெருமானின் சிலை வடித்து இதன் சக்தியை உலகறிய செய்தார் போகர் சித்தர். இன்றைக்கு ரசலிங்கமாகவும் பயன்படுத்துகிறார்கள். ஆக ரசத்தை அப்படியே பயன்படுத்துவதைவிட கட்டியாக்கி பயன்படுத்துவதில்தான் முழுமையான பலன் உண்டு. நிறைய ரசத்தின் அற்புதங்களைக் கூறிக்கொண்டே போகலாம். யாம் ஒன்பது வகையான ரசமணி அற்புத பலனை சுருக்கமாகக் கூறிவிட்டேன். அதிலேயே யாவும் அடங்கிவிட்டது.

மேலும் அறிக. இன்றைக்கு பல மூலிகைகள் மக்கள் அறிய முடியாமல் போனதால் ரசகட்டிற்கு ஒன்றிரண்டு மூலிகையைக் கொண்டு கட்டுகிறார்கள். ரசம் கட்டுதல் சில நாளில் உதிர்ந்து போவதும் இன்றைக்கு உண்டு. எனவே காரீயம் கலந்தும் கட்டுகிறார்கள். பாதரசத்தின் விலையேற்றம் காரணமாக வெறும் காரீயத்தால் உருட்டப்பட்ட மணி லிங்க வடிவத்தை ரசம் என்று விற்பதும் இன்றைக்கு நடக்கிறது. எது எப்படியோ நம் நம்பிக்கை ரசத்தின்மேல் பலமாக இருந்தால்தான் ஒரிஜினல் ரசம்கூட சிறப்பாக பணிபுரிவதை உணரமுடியும். இல்லையேல் சித்தர் கொடுத்த ரசமானாலும் அற்புதம் உணரமுடியாது. நம்பிக்கைகொண்டு சாதாரண கூழாங்கல்லை துளையிட்டு கயிறுபோட்டு கழுத்தில் கட்டிக்கொண்டாலும் அற்புதமாக நம் நம்பிக்கை பிரார்த்தனையை பலிதமாக்கித் தரும்.

எனவே மெய்யன்பர்களே தெய்வீகத்தைப் பொறுத்தவரை சில மூலத்தை ஆராயக்கூடாது. அதற்காக ஏமாறவும் கூடாது. மனதில் பட்டதோடு தொடர்புகொள்வது அவசியமாகும். நம்பிக்கைத்தான் கல்லையும் தெய்வமாக்குகிறது என்பதை மறக்கக்கூடாது. ஆனால் ரசம் இதில் சிறு வித்தியாசம் கொண்டது. நம்பினாலும் நம்பவில்லையென்றாலும் விஷமும் மருந்தும் வேலை செய்யும் அல்லவா அதைப்போல ரசம் நம்பிக்கை அற்றவர் அணிந்தாலும் ஓரளவாவது பலனை அளித்தே தீரும்.

ரசமணியை கழுத்தில் கருப்பு அல்லது பச்சை வண்ண நூலில் கட்டி மார்புக்குழிவரை தொங்கவிட்டு கட்டிக்கொண்டால் இதயநோய் சுவாசநோய் வராது. தொழில் பலப்படும், உணர்வுகள் கட்டுப்படுத்தப்படும், தாம்பத்தியத்தின்போது ரசமணியை நாக்கின்கீழ் அதாவது உமிழ்நீர் சுரக்கும் இடம் அவ்விடத்தில் வைத்துக்கொண்டு உறவுகொள்ளும்போது நீண்ட நேரம் உறவுகொள்ளலாம். நாம்கூறும் மந்திரங்கள் பலமடையும். விஷபூச்சிகள் தீண்டாது. எதிரியும் நண்பனாவான். எவ்வழியிலாவது பணம் வந்த வண்ணம் இருக்கும். வாடிக்கையாளர்கள் கூடுவார்கள். கிரக கோளாறுகள் பாதிப்பைத் தராது. ரசமணி அணிவதால் முன்னோர் சாபமும் படிப்படியாக குறையும். தீய கதிர்வீச்சுகளை தடுத்து நம்மை காக்கும் ஆற்றல் பெற்றது.

சித்தர்கள் போற்றிய ரசவாதம் போற்றுதலுக்குறியதாகும். அத்தனை சாஸ்த்திரத்தையும் மனிதர்களுக்கு கொடுத்துதவிய ஞானிகள் பாதரசத்தையும் வழிகாட்டினார்கள் ஏன் என்றால் அனைத்திலும் பாதுகாப்பு ரசத்தில் இருந்து கிடைப்பதே காரணமாகும். சூழ்ச்சும வித்தைகள் பல கொடுத்து உதவிய ஞானிகள் அதில் உச்சி மகுடமாக கண்டதே ரசவாதமாகும்.

மூலிகைகளால் சுத்திகரிக்கப்பட்டு அதன் உறுதி தன்மைக்காக காரீயம் கலந்தே கட்டப்பட்ட ரசமணி  தற்ப்போது உள்ளது.  இந்த ரசமணியை அணிந்தபின் தினசரி உங்களுக்குள் சில மாற்றங்கள் நல்லவிதமாக நடப்பதை உணரலாம். எந்த மதத்தினரும் பயன்படுத்தலாம்.

தீரா நோயால் பீடிக்கப்பட்டவர்களும் அணியலாம். அணிந்து நிவர்த்தி பெறலாம். நோய்க்கு அருமருந்து மனமும் நம்பிக்கையும் தான். அதைப்போல ரசமணி அணிந்துகொண்டு செய்யும் செயல்கள் பலமடைகிறது நல்ல முயற்சி, நல்ல செயல் இவைகளை செய்யும்போது அவை பலப்படும். தீய செயல்களை செய்தாலும் பலப்படும். எனவே தீயதை தவிர்ப்பீர். நம்பிக்கையுடன் மனதிருப்தியுடன் அணியுங்கள் பஞ்சபூதமும் வசியமாகும்.

ரசமணி புதன் கிழமைகளில் வீரியமுடன் பலன் தரும். எனவே புதன்கிழமை தோறும் தண்ணீரில் ரசமணியை வைத்து அந்த தண்ணீரில் குளியல் செய்யவும். பிறகு ரசமணியை எடுத்து எப்பொழுதும் போல் அணிந்துகொள்ளலர்ம்.  அதிக கோபத்தை கட்டுப்படுத்த முடியாதவர்களும், காமத்தை கட்டுப்படுத்த முடியாதவர்களும் ரசமணி அணிந்து பயன்பெறலாம்.

வயதானாலும் இளைமையுடன் வைத்திருக்கும் சக்தி இந்த ரசமணிக்கு எப்பொழுதும் உண்டு, மேலும் ரசமணி அணிபவரை தோற்ற பொலிவுடன் வைத்திருக்கும்.விந்தணுவை கெட்டிப்படுத்தும் சக்தி இரசமணிக்கு உண்டு.

ரசமணி அணிந்தால் காரியசித்தி,வாக்கு பலிதம் போன்றவறை எளிதாக அடையாளம்

செடிகளில் உள்ள சத்துக்கள்💫❄

சில செடிகளில் இருக்கும் சில சத்துக்கள்...

எல்லா தாவர வகையிலும் ஒரு கனிம பொருள் - இரசாயன பொருள் உள்ளடங்கி உள்ளது. இது கர்ம - பாவ புண்ணிய கடத்தியாக செயல்படுகிறது.
1. அத்தி - இரும்புச்சத்து
2. அம்மான் பச்சரிசி - வெள்ளிச்சத்து
3. அக்கிரகாரம் – செம்புச்சத்து
4. ஆத்தி – இரும்புச்சத்து, தாமிரச்சத்து
5. ஆவாரம் – செம்புச்சத்து
6. ஆரைக்கீரை – இரும்புச்ச6. ஆரைக்கீரை – இரும்புச்சத்து
7. ஆவாரை, ஆடாதொடா, கற்றாழை, – தாமிரச்சத்து
8. ஊமத்தை – இரும்புச்சத்து, உப்புச்சத்து
9. எட்டி – இரும்புச்சத்து, கந்தகச்சத்து
10. எள்ளு, கடுகு – கந்தகச்சத்து
11. கத்திரிக்காய் – மெக்னீசியம்
12. கரிசலாங்கண்ணி – தங்கச்சத்து, வெள்ளிச்சத்து
13. கருவேப்பிலை – இரும்புச்சத்து
14. கீழாநெல்லி – காரீயச்சத்து
15. கோபுரந்தாங்கி – தங்கச்சத்து
16. கோவைஇலை – கால்சியம், பாஸ்பரஸ், போரான், இரும்புச்சத்து
17. சங்கு, நாரயணசஞ்சீவி – சுண்ணாம்புச்சத்து, செம்புச்சத்து
18. செந்தொட்டி – செம்புச்சத்து, கந்தகச்சத்து
19. தும்பை – செம்புச்சத்து
20. துத்தி – கால்சியம்
21. தூதுவளை – ஈயச்சத்து
22. நன்னாரி – இரும்புச்சத்து
23. நிலவாகை – தங்கச்சத்து, கந்த்கச்சத்து, 23. நிலவாகை – தங்கச்சத்து, கந்த்கச்சத்து, ஈயச்சத்து
24. பற்பாடகம் – கந்தகச்சத்த24. பற்பாடகம் – கந்தகச்சத்து
25. பிரம்மத்தண்டு – தங்கச்சத்து
26. பிரண்டை – உப்புச்சத்து
27. புதினா – இரும்புச்சத்து
28. பெரும்தும்பை – தங்கச்சத்து
29. பொன்னாங்கண்ணி – இரும்புச்சத்து, ஈயச்சத்து, செம்புச்சத்து
30. மணத்தக்காளி – இரும்புச்சத்து, கால்சியம் சத்து
31. முசுமுசுக்கை – சுண்ணாம்புச்சத்து, தாமிரச்சத்து
32. முருங்கை – இரும்புச்சத்து
33. வெள்ளை அருகு – ஈயசத்து

Thursday, August 9, 2018

மூலிகை கவிதை👍

மூலிகை கவிதை
_________________

மூளைக்கு வல்லாரை
  முடிவளர நீலிநெல்லி
ஈளைக்கு முசுமுசுக்கை
   எலும்பிற்கு இளம்பிரண்டை

பல்லுக்கு வேலாலன்
  பசிக்குசீ  ரகமிஞ்சி
கல்லீரலுக்கு  கரிசாலை
  காமாலைக்கு கீழாநெல்லி

கண்ணுக்கு நந்தியாவட்டை
  காதுக்கு சுக்குமருள்
தொண்டைக்கு அக்கரகாரம்
  தோலுக்கு அருகுவேம்பு

நரம்பிற்கு அமுக்குரான்
  நாசிக்கு நொச்சிதும்பை
உரத்திற்கு  முருங்கைப்பூ
ஊதலுக்கு நீர்முள்ளி

முகத்திற்கு சந்தனநெய்
  மூட்டுக்கு முடக்கறுத்தான்
அகத்திற்கு  மருதம்பட்டை
  அம்மைக்கு வேம்புமஞ்சள்

உடலுக்கு  எள்ளெண்ணை
  உணர்ச்சிக்கு  நிலப்பனை
குடலுக்கு ஆமணக்கு
   கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே

கருப்பைக்கு அசோகுபட்டை
  களைப்பிற்கு சீந்திலுப்பு
குருதிக்கு அத்திப்பழம்
  குரலுக்கு  தேன்மிளகே!

விந்திற்கு ஓரிதழ்தாமரை
  வெள்ளைக்கு கற்றாழை
சிந்தைக்கு  தாமரைப்பூ
  சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை

 கக்குவானுக்கு வசம்புத்தூள்
  காய்ச்சலுக்கு  நிலவேம்பு                         
விக்கலுக்கு மயிலிறகு
   வாய்ப்புண்ணிற்குமணத்தக்காளி

நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்
  நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர்
வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ 
   வெட்டைக்கு சிறுசெருப்படையே

தீப்புண்ணா குங்கிலியவெண்ணை
  சீழ்காதுக்கு நிலவேம்பு
நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்
   நஞ்செதிர்க்க அவரிஎட்டி

குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்
    குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்
பெரும்பாட்டிற்கு அத்திநாவல்
  பெருவயிறுக்கு மூக்கிரட்டை

கக்கலுக்கு  எலுமிச்சைஏலம்
  கழிச்சலுக்கு தயிர்சுண்டை
அக்கிக்கு வெண்பூசனை
  ஆண்மைக்கு பூனைக்காலி

வெண்படைக்கு பூவரசு கார்போகி
   விதைநோயா கழற்சிவிதை
புண்படைக்கு புங்கன்சீமையகத்தி
  புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு

கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்
  கரும்படை வெட்பாலைசிரட்டை
கால்சொறிக்குவெங்காரபனிநீர்
  கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே

உடல்பெருக்க உளுந்துஎள்ளு
   உளம்மயக்க கஞ்சாகள்ளு
உடல்இளைக்க தேன்கொள்ளு
   உடல் மறக்க இலங்கநெய்யே

அருந்தமிழர் வாழ்வியலில்
  அன்றாடம்சிறுபிணிக்கு
அருமருந்தாய் வழங்கியதை
  அறிந்தவரை உரைத்தேனே!!