Sunday, October 14, 2018

மூங்கில் குருத்து பயன்

உலகில் அதிக நாள் உயிர் வாழும் ஜப்பானிய மக்களின் உணவுகளில் மூங்கில் குருத்து உயர்ந்ததாக  இருக்கிறது என்பதற்காக,மூங்கில் குருத்து பற்றிய உள்வாங்கி உணரபட்ட தரவுகளின் அடிப்படையாக கொண்டு  அன்னூர்,மாட்டுஹள்ளி,கேர்மாளம்,நொக்கனூர்,சாம்ராஜ்நகர்,மைசூர் பகுதியில் இதை பயன்படுத்தும் மக்கள் கூறிய கூற்றுகளில் இருந்தும் என்னால் புரிந்து கொள்ளபட்ட விதத்தில் இதை பதிவிடுகிறேன்.

தீராத வயிற்றுவலி கர்ப்பப்பை கட்டி இடுப்பு வலி மார்புவலி ஆகியவற்றிற்கு மூங்கில் குருத்து பிரதான உணவாகவும் மருந்தாகும் பயன்படுத்துகின்றனர் இங்குள்ள மக்கள் அதுவும் திருமணம் ஆகபோகும் ஆண்களுக்கு இது தான் விசேசமான உணவு உறவுக்காரர்கள் மத்தியில் .....

மூங்கில் குருத்தில் புரதம் மிகையாக இருக்கும் பாஸ்பரஸ் சுண்ணாம்பு சத்து நார்ச்சத்து இரும்பு சத்தும் நிறைய உண்டு என்பதை நவீன அறிவியலும் உறுதி படுத்துகின்றன மேலும்  அதுவும் நீரில் கரையும் விட்டமின் பி3 எனப்படும் நியாசின் இதில் தான்  மிகவும் அதிகம்

நியாசின் குறைபாட்டால் ஏற்படும் நோய்கள்

தோல் வரட்சி
உயிர் சத்து குறைபாடு(ஸ்கர்வி)
தயாமின் குறைபாடு(பெரிபெரி)
எலும்புருக்கி நோய்
மாலைக்கண் நோய் போன்றவவையாகும்  மூங்கில் குருத்தே மிகவும் சிறந்த உணவு மருந்தும்.

கர்ப்பிணி பெண்களுக்கு இதன் குருத்தை தரகூடாது அப்படி கொடுக்கும் பட்சத்தில் நிச்சயமாக கருகலைப்பு நிகழுமாம் .அதற்கு காரணம் இவற்றில் உள்ள நஞ்சு தன்மையுடைய  பென்சாயிக் அமிலமும்,Phytocyane Glycoside தான். பென்சாயிக் அமிலம் நமது DNAஐ சிதைக்கும் பண்பு கொண்டது இந்த அமிலம் தான் புற்றுநோயை உருவாக்கும் முக்கிய காரணியான கார்சினொஜென்ஸை உருவாக்குகிறது. ஐந்து மாதம் கடந்த கர்பிணி பெண்களுக்கு இதை தரலாம் சிறந்த சத்தான உணவு .

மூங்கில் குருத்தை பயன்படுத்தும் போது சுத்தி செய்தே பயன்படுத்த வேண்டும் அதனால் பத்து மணி நேரம் வரை நீரில் ஊரவைத்து  இதை நான்கு முறைக்கு மேல் பிழிந்து சமைக்கும் போது வெள்ளாட்டு பாலில் சமைக்க வேண்டும்.சித்த மருத்துவத்தில் கந்தகத்தை சுத்தம் செய்ய வெள்ளாட்டு பாலை தான் பயன்படுத்துகின்றனர் என்பதை இங்கும் பொருத்தி பார்த்து கொள்ளலாம் வெள்ளாட்டு பாலில் உள்ள அயனிகள் தீங்கான அம்சங்களை நீக்கி விடுகிறது ஆட்டு பால் கிடைக்கவில்லை என்றால் பசுமாட்டு பாலை பயன்படுத்தலாம் .

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு மிகச்சிறந்த உணவு இந்த மூங்கில் குருத்து இவற்றில் மிகையாக உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீராக்குகிறது இவற்றில் இருந்து பெறப்படும் மூங்கில் உப்பு உடலுக்கு வலிமை தரும் விந்துவை அடர்த்தியாக்கும் குறிப்பாக இதில் தான் சிலிகா டை ஆக்சைடு 96.9% உள்ளன சிலிகா தான் மிக மிக உயர்ந்த மருந்து சித்த மருத்துவத்தில் மூளை தண்டுவடத்தில் உள்ள கழிவுகளை நீக்கி மருந்தாக செயல்படும் உள்ளுறுப்புகளில் உள்ள கழிவுகளை நீக்கி ஊட்டமாக்குவதில் சிலிகா தான் முதன்மையானது .

உடல் குறைப்பில் இது பெரும் பங்கு வகிக்கும் இதை சாப்பிட்டதும் ஓரிரு நாளில் இரண்டு கிலோ வரை உடலின் எடை குறைந்தது எனக்கு இதையும் கவனத்தில் கொள்வோம் .

நீண்டகால தாவரமான மூங்கில் சூரிய ஒளியை பிரதானமாக கொண்டு வளருகிறது பூமியின் உள்ள அனைத்து விதமான உலோக அலோக உப்புகளை அயனியாக்கி கிரகித்து வைத்துள்ளது அதனாலேயே சுமார் 150 வருடம் வரை உயிர் வாழும் யானைகளின் பிரதான விருப்ப உணவு மூங்கில்.

மூங்கில் குருத்தை உணவாக பயன்படுத்தும் முறை;

மூங்கில் குருத்தை நன்றாக கழுவி பொடி பொடியாக துருவி கொண்டு அதனை நீரில் ஊறவைத்து இரண்டு மணி நேரம் கழித்து பிழிந்து தண்ணீர் மாற்றி மூன்று முறை செய்து இதனை சுத்திகரித்தே பயன்படுத்த வேண்டும் . இவற்றிற்கு தண்ணீருக்கு பதிலாக வெள்ளாட்டு பால் சிறந்தது அல்லது பசுமாட்டு பாலை பயன்படுத்தி சமைக்க வேண்டும் அவரை பருப்பை அவசியம் பயன்படுத்தி சமைக்க வேண்டுமாம் மசாலா சேர்க்கப்பட்ட இதன் சுவை மிகவும் அபாரமாக இருக்கும் .

இருளர் இன மக்கள் வசிக்கும் பகுதிக்கு போகும் போது இதை சமைத்து தர சொல்லி சாப்பிட்டு பாருங்கள் உலக தரம் வாய்ந்த உணவும் சுவையும் இதுவாக தான் இருக்க கூடும் .


1 comment: