Monday, September 24, 2018

நறுவிலி(மூக்குச்சளிப்பழம்)

நறுவிலி... மூக்குச்சளிப்பழம் என்றால் பலருக்குத் தெரியும். இனிப்புச் சுவையுடன் காணப்படும் இந்த நறுவிலிப் பழத்தைச் சாப்பிட்டால், நெஞ்சில் கட்டியிருக்கும் கோழையை அகல்வதுடன் இருமல் நீங்கும். ஆண்மைக்குறை உள்ளவர்கள் இந்தப் பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டால் பிரச்னை நீங்கும். அதுமட்டுமல்ல, வயிற்றுப்புழுக்களைக் கொல்லும்; சிறுநீர் வராமல் அவதிப்படுபவர்கள் இந்தப் பழத்தைச் சாப்பிட்டால் அடுத்த சில நிமிடங்களில் சிறுநீர் தானாக வெளிவரும். உடல் சூட்டைத் தணிப்பதுடன் பெண்களைப் பாடாய்ப் படுத்தும் வெள்ளைப்படுதல் பிரச்சினையை சரிசெய்யும். ரத்தம் சுத்திகரிக்கும்; குடலுக்குப் பலம் தரும்; குரல் கம்மல், வயிற்றுக் கடுப்பு நீக்கும். மூட்டு வலி, சிறுநீரகக் கோளாறுகள், மண்ணீரல் வீக்கம் போன்றவற்றைக் குணப்படுத்தும்.

No comments:

Post a Comment