#உயிர்மீட்கும்
#மருத்துவம்
17.A எளிய மூலிகை மருந்துகள் தயாரிக்கும் முறை
நமது ஆதி மருத்துவ முறையின் மூலம் குறிப்பிட்ட சில மூலிகை மருந்துகளை தயாரித்து பயன்படுத்தும் முறைகளை காண்போம்.!
இதில் கூறியுள்ள மூலிகை மருந்துகளை உங்கள் தேவைக்கு தயாரித்து பயன்படுத்தலாம்.!
வியாபார நோக்கத்தில் தயாரிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.! ஏனெனில் அதற்கு முறையான பல அனுமதிகளை வாங்க வேண்டும்.!
அதோடு மூலிகைகளை தேவையான போது குறைவான அளவில் தயாரித்தால் தரமாக இருக்கும்.! அதிகமான அளவில் தயாரித்து இருப்பு வைக்கும் போது பல விதமான வேதி மாற்றம் ஏற்படும். இதைப்போக்கவே பல பெரிய நிறுவனங்களின் மூலிகை தயாரிப்புகளில் இரசாயணத்தை கலந்து மக்களை ஏமாற்றுகிறார்கள்.!
இதில் கூறப்படும் அனைத்து மூலிகை மருந்துகளும் எனது குரு வடிவீஸ்வரம், பண்டிதர் கிருஷ்ணமூர்த்தி அய்யாவின் சூத்திரங்களின் மூலம் நாம் தயாரிக்கும் மூலிகைப்பொருட்களே இது 100% இயற்கையானது. துளியும் இரசாயணமில்லாதது.!
இது ஒரு பாரம்பரிய மருந்து இதை தயாரிக்கும் அன்பர்கள் இதே முறையில் எந்த மாற்றமும் செய்யாமல்,துளியும் இரசாயணம் சேர்க்காமல் அப்படியே தயாரித்து உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.!
1.#மூலிகை பல்பொடி
1.வேப்பம் பட்டை 100 கிராம்
2.ஆலம்பட்டை 100 கிராம்
3.ஆவாரம்பட்டை 100 கிராம்
4.கருவேலம் பட்டை
100 கிராம்
5.புதினாஇலை 50 கிராம்
6.கடுக்காய்தோடு 50 கிராம்
7.இந்துப்பு 50 கிராம்
8.மிளகு 10 கிராம்
9.நாயுருவி 10 கிராம்
10.வெட்டிவேர் 10 கிராம்
11.தான்றிக்காய் 10 கிராம்
12.கிராம்பு 25 கிராம்
13 மாசிக்காய் 20 கிராம்
14.கண்டங்கத்திரி வேர் 5 கிராம்
15.சிற்றரத்தை வேர் 5 கிராம்
16.ஏலக்காய் 5 கிராம்
17.எலுமிச்சைதோடு 5 கிராம்
18.சுக்கு 5 கிராம்
இந்தப்பொருட்களில் உங்களால் சேகரிக்க முடிந்தப்பொருட்களை சேகரித்து காயவைத்துக் கொண்டு மற்றவற்றை மூலிகை கடையில் வாங்கி சுத்தம் செய்து பொடித்து வைத்துக்கொண்டு காலை இரவு பல் தேய்த்து வர பல்லரிப்பு,வாய்நாற்றம். ஆரம்ப பல்சொத்தை,பல் பலவீனம் போன்றவை மாறுவதோடு நோய் எதிர்ப்பு ஆற்றலும் வலுப்படும்.!
2.மூலிகை #குளியல்பொடி
1.பூந்திக்கொட்டை 200 கிராம்
2.கஸ்தூரி மஞ்சள் 200 கிராம்
3.ரோஜாப்பூ 100 கிராம்
4.செம்பருத்திப்பூ 100 கிராம்
5.ஆவாரம்பூ 100 கிராம்
6.மல்லிகைப்பூ 100 கிராம்
7.சந்தனப்பட்டை 100 கிராம்
8.வேட்டிவேர் 100 கிராம்
9.விலாமிச்சுவேர் 100 கிராம்
10.துளசி இலை 100 கிராம்
11.புதினா இலை 100 கிராம்
12.கோரைக்கிழங்கு 100 கிராம்
13.சீகக்காய் 100 கிராம்
14 கார்போக அரிசி 50 கிராம்
15.அதிமதுரம் 50 கிராம்
16.கிச்சிலிக்கிழங்கு 50 கிராம்
17.தாமரைப்பூ 50 கிராம்
18.சிறுபயறு 400 கிராம்
இந்தப்பொருட்களை சுத்தம் செய்து இயந்திரத்தில் கொடுத்து பொடித்து வைத்துக்கொண்டு குளிக்கும் போது தேய்த்து குளித்து வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும். வியர்வை சுரப்பிகளின் இயக்கம் சீராகி எலும்புகள் வலுப்படும். தோல் நோய் எதுவும் வராமல் பாதுகாக்கும் வந்திருந்தால் குணமாகும். இந்தப்பொடியை தேங்காய் தண்ணீர் விட்டு குழைத்து முகத்தில் பூசிவிட்டு அரைமணி நேரம் கழித்து கழுவினால் முகம் புதுப்பொலிவுடன் தோன்றும்.!
3.இயற்கை #ஊட்டச்த்துமாவு
1.கேழ்வரகு 250 கிராம்
2.வரகு 250 கிராம்
3.கம்பு 250 கிராம்
4.குதிரவாலி 250 கிராம்
5.கறுப்புகொள்ளு 250 கிராம்
6.மக்காச்சோளம் 250 கிராம்
7.தோல் உளுந்து 250 கிராம்
8.கறுப்பு கொண்டைக்கடலை 250 கிராம்
9.வேர்க்கடலை 250 கிராம்
10.பச்சை பட்டாணி 250 கிராம்
11.சிறுபயறு 250 கிராம்
12.மாப்பிள்ளை சம்பா/சிவப்பு அரிசி 250 கிராம்
13.ராஜ்மா 100 கிராம்
14.சோயா 100 கிராம்
15. பாதாம் பருப்பு 25 கிராம்
16 பிஸ்தா பருப்பு 25 கிராம்
17.முந்திரிப்பருப்பு 25 கிராம்
18.ஏலக்காய் 25 கிராம்
19.சுக்கு 25 கிராம்
20.அமுக்ரா கிழங்கு 25 கிராம்
21.பனங்கற்கண்டு 500 கிராம்
இந்தப்பொருட்களை முடிந்தவரை இயற்கையானதாக சேகரித்து சுத்தப்படுத்தி லேசாக வறுத்து பொடித்து வைத்துக்கொண்டு பசும்பால் அல்லது சூடுநீரில் கலந்து கொதிக்க வைத்து காலை,மாலை இருவேளை அல்லது காலை,மதியம் உணவிற்கு முன் ஒரு டம்ளர் விதம் குடித்து வந்தால்,உடல் சோர்வு,எலும்பு பலவீனம்,அடிக்கடி நோய்ப்படுதல்,மலச்சிக்கல்,உடல் நடுக்கம், கைகால் வலி,முதுகுவலி போன்ற குறைபாடுகள் நீங்கும். ஆறு மாத குழந்தைகள் முதல் அனைவருக்கும் கொடுக்கலாம்.!
4.#துளசிமாத்திரை
கருந்துளசி இலை 300 எண்ணம்
வால்மிளகு அல்லது குறுமிளகு 150 எண்ணம்
தேன் 2 தேக்கரண்டி சேர்த்து அம்மி அல்லது மிக்சியில் மைய்யாக அரைத்து சிறுசிறு உருண்டையாக பிடித்து ஒரு தட்டில் வைத்து நிழலில் ஒரு நாள் வெயிலில் ஒருநாள் என்ற விதத்தில் நான்கு நாள் காயவைத்து சிறிய கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைத்துக்கொண்டு சளி,இருமல்,தலைவலி,காய்ச்சல் வந்த சமயத்தில் வேளைக்கு இரண்டு விதம் நாளைக்கு இரண்டு வேளை மூன்று நாள் வரை உணவிற்கு பின் மாத்திரையை கடித்து உமிழ்நீரோடு சேர்த்து உண்டு வந்தால் மேற்கண்ட நோய்கள் நீங்குவதோடு நோயெதிர்ப்பு ஆற்றல் வலுப்படும். வாழ்நாளில் புற்று நோயே வராமல் பாதுகாக்கும்.!
5.அமுக்ரா மாத்திரை
1.அமுக்ரா 250 கிராம்
2 .சுக்கு 150 கிராம்
3.கொத்தமல்லி 25 கிராம்
4.சீரகம் 25 கிராம்
5.தாளிசப்பத்திரி 25 கிராம்
6.சோம்பு 25 கிராம்
7.லவங்கப்பட்டை 25 கிராம்
8.சிறுநாகப்பூ 25 கிராம்
9.மிளகு 15 கிராம்
10.திப்பிலி 15 கிராம்
11.ஏலம் 15 கிராம்
12.லவங்கம் 15 கிராம்
மேற்கண்டப் பொருட்களை தூசி,துரும்பு நீக்கி சுத்தம் செய்து மூலிகை அரவை மில்லில் கொடுத்து பொடித்து வைத்துக்கொண்டு சிறிது பொடியில் பசும்பால் விட்டுப்பிசைந்து சிறுசிறு மாத்திரையாகப் உருட்டி இட்லி தட்டில் ஒரு வாழை இலை அல்லது வெள்ளைத்துணியை விரித்து அதன்மேல் மாத்திரைகளை பரப்பி வைத்து இட்லி குண்டானில் இரண்டு டம்ளர் பசும்பால் விட்டு அதன் மேல் உருட்டிய மாத்திரை இருக்கும் தட்டை எடுத்துவைத்து மூடி ஆவியில் வேக வைத்து எடுத்து ஒரு நாள் நிழல் மறுநாள் வெயில் என்ற விதத்தில் நான்கு நாட்கள் காயவைத்து கண்ணாடி பாட்டிலில் போட்டு பத்திரமாய் வைத்துக்கொண்டு
வாய்வுத்தொல்லை,பக்கவாதம்,தூக்கமின்மை,நரம்புத்தளர்ச்சி,பசியின்மை,அஜீரணம்,ஆண்மைக்குறைவு,சோர்வு,இரத்த அழுத்தம்,கைகால் நடுக்கம்,காக்கை வலிப்பு,கர்பப்பை பலவீனம், தைராய்டு சீரின்மை போன்ற வியாதிகள் இருப்பவர்கள் தினமும் காலையில் இரண்டு மாத்திரையை வெறும் வயிற்றில் உண்டுவிட்டு கால் டம்ளர் சுடுநீர் அருந்திகொள்ள வேண்டும். பிறகு ஒரு மணி நேரம் உணவோ நீரோ அருந்தாமல் இருக்கவேண்டும். இப்படியே 48 நாட்கள் கடைப்பிடித்தால் மேற்கண்ட நோய்கள் கட்டுப்படும். நோய்த்தன்மை அதிகம் இருப்பவர்கள் இரவும் இதுபோல் இரண்டு மாத்திரையை உணவிற்கு பின் உண்டு வந்தால் மேற்கூறிய எத்தகைய வியாதியும் குணமாகும்.!
6.பஞ்சமூலி சூரணம்
1.ஆடாதோடை இலை 200 கிராம்
2.கடுக்காய் தோடு 200 கிராம்
3.நெல்லிவற்றல் 100 கிராம்
4.தான்றிக்காய் தோடு 50 கிராம்
5.சுக்கு 50 கிராம்
இந்தப்பொருட்களை சுத்தம் செய்து பொடித்து வைத்துக்கொண்டு தினமும் இரவு உணவிற்கு பின் தூங்குவதற்கு அரைமணி நேரம் முன்பு ஒருத்தேக்கரண் பொடியை அரை டம்ளர் சுடுநீரில் போட்டு கலக்கி குடிக்க வேண்டும். இது போல் 12 நாட்கள் முதல் 48 நாட்கள் வரை செய்து வந்தால் உடலில் தேங்கியுள்ள நாள்ப்பட்ட நச்சுக்கழிவுகள் அனைத்தும் வெளியேறிவிடும். இதனால் உடல் பருமன்,கைகால் வலி,மலச்சிக்கல்,மூட்டுவலி,நாள்ப்பட்டச் சளி,தோல் நோய்கள்,சளி,இழுப்பு,சக்கரை வியாதி,காதிரைச்சல்,உடல் ஊறல் போன்ற அனைத்து நோய்களும் குணமாகும்.
அதிகமான சளி இருப்பவர்கள் காலை,மதியம் இரு வேளையும் இந்த சூரணத்தை தேனில் குழைத்து உணவிற்கு அரைமணி நேரம் முன் உண்டு வந்தால் 24 நாளில் சளி முழுவதும் வெளியேறிவிடும்.!
7.மூலிகை தேனீர்
1.ஆவாரம்பூ 200 கிராம்
2.செம்பருத்திப்பூ 100 கிராம்
3.ஓரிதழ் தாமரைப்பூ 100 கிராம்
4.ரோஜாப்பூ 100
5.கொத்தமல்லி 50
6.சுக்கு 50
7.ஏலக்காய் 50 கிராம்
8.துளசிஇலை 50 கிராம்
9.வேட்டிவேர் 25 கிராம்
மேற்கண்ட பொருட்களை சுத்தம் செய்து வீட்டிலேயே பரபரவென பொடித்து வைத்துக்கொண்டு தேநீர் தயாரிப்பதைப் போலவே நீரிலோ,பாலிலோ கலந்து சூடாக்கி வடிகட்டி கற்கண்டு/தேன் கலந்து குடித்துவந்தால் நோயெதிர்ப்பு ஆற்றல் வலுப்படும் இரத்தசோகை குணமாகும்.!
8.புதினா தைலம்
1.புதினா உப்பு 20 கிராம்
2.ஓம உப்பு 20 கிராம்
3.பச்சைக்கற்பூரம் 40 கிராம்
தேங்காய் எண்ணெய் 20 மில்லி இந்தப்பொருட்களை ஒன்றாக ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு சிறிது நேரம் குலுக்கினால் திரவம் போன்று திரண்டு வரும். இந்தக்கலவையை லேசாக தொட்டு தலைவலி நேரத்தில் தடவிக்கொள்ளலாம். மூக்கடைப்பு, சளி,போன்றவற்றையும் சரிசெய்யும்.!
9.நிலவேம்பு குடிநீர்
1 நிலவேம்பு 100 கிராம்
2.விலாமிச்சம் வேர் 100 கிராம்
3.வெட்டிவேர் 100 கிராம்
4.சந்தனச்சீவல் 100 கிராம்
5 பற்பாடகம் 100 கிராம்
6.கோரைக்கிழங்கு 100 கிராம்
7.பேய்ப்புடல் 100 கிராம்
8.மிளகு 100 கிராம்
9.சுக்கு 100 கிராம்
இந்த ஒன்பது பொருட்களையும் வாங்கி சுத்தம் செய்து கசாய பதத்திற்கு திருதிருவென இடித்து கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்திக்கொண்டு கைகால் வலி,மூட்டுவீக்கம்,மூட்டுவலி,உடல்வலி,விசக்காய்ச்சல்,தோல் நோய்கள் வந்த காலத்திலோ அல்லது காய்ச்சல்,உடல்வலி போன்றவை வருவது போல் தோன்றும் சூழலிலோ ஒருத்தேக்கரண்டி பொடியை எடித்து ஒன்றரை டம்ளர் நீரில் கொதிக்க வைத்து அது அரை டம்ளர் ஆனதும் இறக்கி வடிகட்டி உணவிற்கு அரை மணி நேரம் முன்பு தொடர்ந்து மூன்று நாட்கள் குடித்து வந்தால் மேற்கண்ட நோய்கள் குணமாகும்.! தேவையெனில் இதுபோலவே இரவிலும் ஒரு வேளை தயாரித்து குடித்து கொள்ளலாம்.!
நோய் இருப்பவர்கள் தொடர்ந்து 12 நாட்கள் இந்த முறையை கடைப்பிடிக்கலாம். நோய் வராமல் தடுக்க நினைப்பவர்கள் மூன்று நாட்களுக்கு மேல் இதை அருந்த வேண்டாம்.! ஒவ்வாமை,குறைஇரத்த அழுத்தம்,குறை சக்கரை இருப்பவர்கள் இந்த மருந்தை தகுந்த முன்னெச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும்.!
எல்லா வகையான மருந்துகளை பயன்படுத்துவோரும் உப்பு,புளி,காரம்,அசைவ உணவு,இரசாயண உணவுகளை குறைத்துக்கொண்டால் உடனடியான பயன் கிடைக்கும்.!
இந்த பகுதியில் நாம் குறிப்பிட்டுள்ள மூலிகை மருந்துகளை நாம் குறிப்பிட்ட அதே அளவில் தேவையானவர்கள் பயன்படுத்தலாம்.!
இந்த மருந்துகள் அனைத்தும் 100% இயற்கையானது என்பதால் இதன் பயனை உடல் உணர சிலருக்கு கொஞ்சம் தாமதமாகலாம்.!
ஆனால்,பயன் நிச்சயம் கிடைக்கும்.!
நலம் பெருகட்டும் …
-ஆதிமருத்துவம் ஏகப்பிரியன்
இது போன்ற பல்வேறு மூலிகை மருந்து தயாரிப்புகள் இயற்கை வாழ்வியல் முறைகள் யோகா,தியான நுட்பங்கள்,வர்ம புள்ளிகள் இயக்கம் அடங்கிய முழுமையான இயற்கை மருத்துவ நூல் " *ஆதிமருத்துவம்* "
#மருத்துவம்
17.A எளிய மூலிகை மருந்துகள் தயாரிக்கும் முறை
நமது ஆதி மருத்துவ முறையின் மூலம் குறிப்பிட்ட சில மூலிகை மருந்துகளை தயாரித்து பயன்படுத்தும் முறைகளை காண்போம்.!
இதில் கூறியுள்ள மூலிகை மருந்துகளை உங்கள் தேவைக்கு தயாரித்து பயன்படுத்தலாம்.!
வியாபார நோக்கத்தில் தயாரிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.! ஏனெனில் அதற்கு முறையான பல அனுமதிகளை வாங்க வேண்டும்.!
அதோடு மூலிகைகளை தேவையான போது குறைவான அளவில் தயாரித்தால் தரமாக இருக்கும்.! அதிகமான அளவில் தயாரித்து இருப்பு வைக்கும் போது பல விதமான வேதி மாற்றம் ஏற்படும். இதைப்போக்கவே பல பெரிய நிறுவனங்களின் மூலிகை தயாரிப்புகளில் இரசாயணத்தை கலந்து மக்களை ஏமாற்றுகிறார்கள்.!
இதில் கூறப்படும் அனைத்து மூலிகை மருந்துகளும் எனது குரு வடிவீஸ்வரம், பண்டிதர் கிருஷ்ணமூர்த்தி அய்யாவின் சூத்திரங்களின் மூலம் நாம் தயாரிக்கும் மூலிகைப்பொருட்களே இது 100% இயற்கையானது. துளியும் இரசாயணமில்லாதது.!
இது ஒரு பாரம்பரிய மருந்து இதை தயாரிக்கும் அன்பர்கள் இதே முறையில் எந்த மாற்றமும் செய்யாமல்,துளியும் இரசாயணம் சேர்க்காமல் அப்படியே தயாரித்து உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.!
1.#மூலிகை பல்பொடி
1.வேப்பம் பட்டை 100 கிராம்
2.ஆலம்பட்டை 100 கிராம்
3.ஆவாரம்பட்டை 100 கிராம்
4.கருவேலம் பட்டை
100 கிராம்
5.புதினாஇலை 50 கிராம்
6.கடுக்காய்தோடு 50 கிராம்
7.இந்துப்பு 50 கிராம்
8.மிளகு 10 கிராம்
9.நாயுருவி 10 கிராம்
10.வெட்டிவேர் 10 கிராம்
11.தான்றிக்காய் 10 கிராம்
12.கிராம்பு 25 கிராம்
13 மாசிக்காய் 20 கிராம்
14.கண்டங்கத்திரி வேர் 5 கிராம்
15.சிற்றரத்தை வேர் 5 கிராம்
16.ஏலக்காய் 5 கிராம்
17.எலுமிச்சைதோடு 5 கிராம்
18.சுக்கு 5 கிராம்
இந்தப்பொருட்களில் உங்களால் சேகரிக்க முடிந்தப்பொருட்களை சேகரித்து காயவைத்துக் கொண்டு மற்றவற்றை மூலிகை கடையில் வாங்கி சுத்தம் செய்து பொடித்து வைத்துக்கொண்டு காலை இரவு பல் தேய்த்து வர பல்லரிப்பு,வாய்நாற்றம். ஆரம்ப பல்சொத்தை,பல் பலவீனம் போன்றவை மாறுவதோடு நோய் எதிர்ப்பு ஆற்றலும் வலுப்படும்.!
2.மூலிகை #குளியல்பொடி
1.பூந்திக்கொட்டை 200 கிராம்
2.கஸ்தூரி மஞ்சள் 200 கிராம்
3.ரோஜாப்பூ 100 கிராம்
4.செம்பருத்திப்பூ 100 கிராம்
5.ஆவாரம்பூ 100 கிராம்
6.மல்லிகைப்பூ 100 கிராம்
7.சந்தனப்பட்டை 100 கிராம்
8.வேட்டிவேர் 100 கிராம்
9.விலாமிச்சுவேர் 100 கிராம்
10.துளசி இலை 100 கிராம்
11.புதினா இலை 100 கிராம்
12.கோரைக்கிழங்கு 100 கிராம்
13.சீகக்காய் 100 கிராம்
14 கார்போக அரிசி 50 கிராம்
15.அதிமதுரம் 50 கிராம்
16.கிச்சிலிக்கிழங்கு 50 கிராம்
17.தாமரைப்பூ 50 கிராம்
18.சிறுபயறு 400 கிராம்
இந்தப்பொருட்களை சுத்தம் செய்து இயந்திரத்தில் கொடுத்து பொடித்து வைத்துக்கொண்டு குளிக்கும் போது தேய்த்து குளித்து வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும். வியர்வை சுரப்பிகளின் இயக்கம் சீராகி எலும்புகள் வலுப்படும். தோல் நோய் எதுவும் வராமல் பாதுகாக்கும் வந்திருந்தால் குணமாகும். இந்தப்பொடியை தேங்காய் தண்ணீர் விட்டு குழைத்து முகத்தில் பூசிவிட்டு அரைமணி நேரம் கழித்து கழுவினால் முகம் புதுப்பொலிவுடன் தோன்றும்.!
3.இயற்கை #ஊட்டச்த்துமாவு
1.கேழ்வரகு 250 கிராம்
2.வரகு 250 கிராம்
3.கம்பு 250 கிராம்
4.குதிரவாலி 250 கிராம்
5.கறுப்புகொள்ளு 250 கிராம்
6.மக்காச்சோளம் 250 கிராம்
7.தோல் உளுந்து 250 கிராம்
8.கறுப்பு கொண்டைக்கடலை 250 கிராம்
9.வேர்க்கடலை 250 கிராம்
10.பச்சை பட்டாணி 250 கிராம்
11.சிறுபயறு 250 கிராம்
12.மாப்பிள்ளை சம்பா/சிவப்பு அரிசி 250 கிராம்
13.ராஜ்மா 100 கிராம்
14.சோயா 100 கிராம்
15. பாதாம் பருப்பு 25 கிராம்
16 பிஸ்தா பருப்பு 25 கிராம்
17.முந்திரிப்பருப்பு 25 கிராம்
18.ஏலக்காய் 25 கிராம்
19.சுக்கு 25 கிராம்
20.அமுக்ரா கிழங்கு 25 கிராம்
21.பனங்கற்கண்டு 500 கிராம்
இந்தப்பொருட்களை முடிந்தவரை இயற்கையானதாக சேகரித்து சுத்தப்படுத்தி லேசாக வறுத்து பொடித்து வைத்துக்கொண்டு பசும்பால் அல்லது சூடுநீரில் கலந்து கொதிக்க வைத்து காலை,மாலை இருவேளை அல்லது காலை,மதியம் உணவிற்கு முன் ஒரு டம்ளர் விதம் குடித்து வந்தால்,உடல் சோர்வு,எலும்பு பலவீனம்,அடிக்கடி நோய்ப்படுதல்,மலச்சிக்கல்,உடல் நடுக்கம், கைகால் வலி,முதுகுவலி போன்ற குறைபாடுகள் நீங்கும். ஆறு மாத குழந்தைகள் முதல் அனைவருக்கும் கொடுக்கலாம்.!
4.#துளசிமாத்திரை
கருந்துளசி இலை 300 எண்ணம்
வால்மிளகு அல்லது குறுமிளகு 150 எண்ணம்
தேன் 2 தேக்கரண்டி சேர்த்து அம்மி அல்லது மிக்சியில் மைய்யாக அரைத்து சிறுசிறு உருண்டையாக பிடித்து ஒரு தட்டில் வைத்து நிழலில் ஒரு நாள் வெயிலில் ஒருநாள் என்ற விதத்தில் நான்கு நாள் காயவைத்து சிறிய கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைத்துக்கொண்டு சளி,இருமல்,தலைவலி,காய்ச்சல் வந்த சமயத்தில் வேளைக்கு இரண்டு விதம் நாளைக்கு இரண்டு வேளை மூன்று நாள் வரை உணவிற்கு பின் மாத்திரையை கடித்து உமிழ்நீரோடு சேர்த்து உண்டு வந்தால் மேற்கண்ட நோய்கள் நீங்குவதோடு நோயெதிர்ப்பு ஆற்றல் வலுப்படும். வாழ்நாளில் புற்று நோயே வராமல் பாதுகாக்கும்.!
5.அமுக்ரா மாத்திரை
1.அமுக்ரா 250 கிராம்
2 .சுக்கு 150 கிராம்
3.கொத்தமல்லி 25 கிராம்
4.சீரகம் 25 கிராம்
5.தாளிசப்பத்திரி 25 கிராம்
6.சோம்பு 25 கிராம்
7.லவங்கப்பட்டை 25 கிராம்
8.சிறுநாகப்பூ 25 கிராம்
9.மிளகு 15 கிராம்
10.திப்பிலி 15 கிராம்
11.ஏலம் 15 கிராம்
12.லவங்கம் 15 கிராம்
மேற்கண்டப் பொருட்களை தூசி,துரும்பு நீக்கி சுத்தம் செய்து மூலிகை அரவை மில்லில் கொடுத்து பொடித்து வைத்துக்கொண்டு சிறிது பொடியில் பசும்பால் விட்டுப்பிசைந்து சிறுசிறு மாத்திரையாகப் உருட்டி இட்லி தட்டில் ஒரு வாழை இலை அல்லது வெள்ளைத்துணியை விரித்து அதன்மேல் மாத்திரைகளை பரப்பி வைத்து இட்லி குண்டானில் இரண்டு டம்ளர் பசும்பால் விட்டு அதன் மேல் உருட்டிய மாத்திரை இருக்கும் தட்டை எடுத்துவைத்து மூடி ஆவியில் வேக வைத்து எடுத்து ஒரு நாள் நிழல் மறுநாள் வெயில் என்ற விதத்தில் நான்கு நாட்கள் காயவைத்து கண்ணாடி பாட்டிலில் போட்டு பத்திரமாய் வைத்துக்கொண்டு
வாய்வுத்தொல்லை,பக்கவாதம்,தூக்கமின்மை,நரம்புத்தளர்ச்சி,பசியின்மை,அஜீரணம்,ஆண்மைக்குறைவு,சோர்வு,இரத்த அழுத்தம்,கைகால் நடுக்கம்,காக்கை வலிப்பு,கர்பப்பை பலவீனம், தைராய்டு சீரின்மை போன்ற வியாதிகள் இருப்பவர்கள் தினமும் காலையில் இரண்டு மாத்திரையை வெறும் வயிற்றில் உண்டுவிட்டு கால் டம்ளர் சுடுநீர் அருந்திகொள்ள வேண்டும். பிறகு ஒரு மணி நேரம் உணவோ நீரோ அருந்தாமல் இருக்கவேண்டும். இப்படியே 48 நாட்கள் கடைப்பிடித்தால் மேற்கண்ட நோய்கள் கட்டுப்படும். நோய்த்தன்மை அதிகம் இருப்பவர்கள் இரவும் இதுபோல் இரண்டு மாத்திரையை உணவிற்கு பின் உண்டு வந்தால் மேற்கூறிய எத்தகைய வியாதியும் குணமாகும்.!
6.பஞ்சமூலி சூரணம்
1.ஆடாதோடை இலை 200 கிராம்
2.கடுக்காய் தோடு 200 கிராம்
3.நெல்லிவற்றல் 100 கிராம்
4.தான்றிக்காய் தோடு 50 கிராம்
5.சுக்கு 50 கிராம்
இந்தப்பொருட்களை சுத்தம் செய்து பொடித்து வைத்துக்கொண்டு தினமும் இரவு உணவிற்கு பின் தூங்குவதற்கு அரைமணி நேரம் முன்பு ஒருத்தேக்கரண் பொடியை அரை டம்ளர் சுடுநீரில் போட்டு கலக்கி குடிக்க வேண்டும். இது போல் 12 நாட்கள் முதல் 48 நாட்கள் வரை செய்து வந்தால் உடலில் தேங்கியுள்ள நாள்ப்பட்ட நச்சுக்கழிவுகள் அனைத்தும் வெளியேறிவிடும். இதனால் உடல் பருமன்,கைகால் வலி,மலச்சிக்கல்,மூட்டுவலி,நாள்ப்பட்டச் சளி,தோல் நோய்கள்,சளி,இழுப்பு,சக்கரை வியாதி,காதிரைச்சல்,உடல் ஊறல் போன்ற அனைத்து நோய்களும் குணமாகும்.
அதிகமான சளி இருப்பவர்கள் காலை,மதியம் இரு வேளையும் இந்த சூரணத்தை தேனில் குழைத்து உணவிற்கு அரைமணி நேரம் முன் உண்டு வந்தால் 24 நாளில் சளி முழுவதும் வெளியேறிவிடும்.!
7.மூலிகை தேனீர்
1.ஆவாரம்பூ 200 கிராம்
2.செம்பருத்திப்பூ 100 கிராம்
3.ஓரிதழ் தாமரைப்பூ 100 கிராம்
4.ரோஜாப்பூ 100
5.கொத்தமல்லி 50
6.சுக்கு 50
7.ஏலக்காய் 50 கிராம்
8.துளசிஇலை 50 கிராம்
9.வேட்டிவேர் 25 கிராம்
மேற்கண்ட பொருட்களை சுத்தம் செய்து வீட்டிலேயே பரபரவென பொடித்து வைத்துக்கொண்டு தேநீர் தயாரிப்பதைப் போலவே நீரிலோ,பாலிலோ கலந்து சூடாக்கி வடிகட்டி கற்கண்டு/தேன் கலந்து குடித்துவந்தால் நோயெதிர்ப்பு ஆற்றல் வலுப்படும் இரத்தசோகை குணமாகும்.!
8.புதினா தைலம்
1.புதினா உப்பு 20 கிராம்
2.ஓம உப்பு 20 கிராம்
3.பச்சைக்கற்பூரம் 40 கிராம்
தேங்காய் எண்ணெய் 20 மில்லி இந்தப்பொருட்களை ஒன்றாக ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு சிறிது நேரம் குலுக்கினால் திரவம் போன்று திரண்டு வரும். இந்தக்கலவையை லேசாக தொட்டு தலைவலி நேரத்தில் தடவிக்கொள்ளலாம். மூக்கடைப்பு, சளி,போன்றவற்றையும் சரிசெய்யும்.!
9.நிலவேம்பு குடிநீர்
1 நிலவேம்பு 100 கிராம்
2.விலாமிச்சம் வேர் 100 கிராம்
3.வெட்டிவேர் 100 கிராம்
4.சந்தனச்சீவல் 100 கிராம்
5 பற்பாடகம் 100 கிராம்
6.கோரைக்கிழங்கு 100 கிராம்
7.பேய்ப்புடல் 100 கிராம்
8.மிளகு 100 கிராம்
9.சுக்கு 100 கிராம்
இந்த ஒன்பது பொருட்களையும் வாங்கி சுத்தம் செய்து கசாய பதத்திற்கு திருதிருவென இடித்து கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்திக்கொண்டு கைகால் வலி,மூட்டுவீக்கம்,மூட்டுவலி,உடல்வலி,விசக்காய்ச்சல்,தோல் நோய்கள் வந்த காலத்திலோ அல்லது காய்ச்சல்,உடல்வலி போன்றவை வருவது போல் தோன்றும் சூழலிலோ ஒருத்தேக்கரண்டி பொடியை எடித்து ஒன்றரை டம்ளர் நீரில் கொதிக்க வைத்து அது அரை டம்ளர் ஆனதும் இறக்கி வடிகட்டி உணவிற்கு அரை மணி நேரம் முன்பு தொடர்ந்து மூன்று நாட்கள் குடித்து வந்தால் மேற்கண்ட நோய்கள் குணமாகும்.! தேவையெனில் இதுபோலவே இரவிலும் ஒரு வேளை தயாரித்து குடித்து கொள்ளலாம்.!
நோய் இருப்பவர்கள் தொடர்ந்து 12 நாட்கள் இந்த முறையை கடைப்பிடிக்கலாம். நோய் வராமல் தடுக்க நினைப்பவர்கள் மூன்று நாட்களுக்கு மேல் இதை அருந்த வேண்டாம்.! ஒவ்வாமை,குறைஇரத்த அழுத்தம்,குறை சக்கரை இருப்பவர்கள் இந்த மருந்தை தகுந்த முன்னெச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும்.!
எல்லா வகையான மருந்துகளை பயன்படுத்துவோரும் உப்பு,புளி,காரம்,அசைவ உணவு,இரசாயண உணவுகளை குறைத்துக்கொண்டால் உடனடியான பயன் கிடைக்கும்.!
இந்த பகுதியில் நாம் குறிப்பிட்டுள்ள மூலிகை மருந்துகளை நாம் குறிப்பிட்ட அதே அளவில் தேவையானவர்கள் பயன்படுத்தலாம்.!
இந்த மருந்துகள் அனைத்தும் 100% இயற்கையானது என்பதால் இதன் பயனை உடல் உணர சிலருக்கு கொஞ்சம் தாமதமாகலாம்.!
ஆனால்,பயன் நிச்சயம் கிடைக்கும்.!
நலம் பெருகட்டும் …
-ஆதிமருத்துவம் ஏகப்பிரியன்
இது போன்ற பல்வேறு மூலிகை மருந்து தயாரிப்புகள் இயற்கை வாழ்வியல் முறைகள் யோகா,தியான நுட்பங்கள்,வர்ம புள்ளிகள் இயக்கம் அடங்கிய முழுமையான இயற்கை மருத்துவ நூல் " *ஆதிமருத்துவம்* "
No comments:
Post a Comment