🌹🌲🌹🌲🌹🌲🌹🌲அனைவருக்கும் வணக்கம்👏உடல் வலி மூட்டு வலி அடிபட்ட வலி இவற்றிற்கு கிழி : நுணா இலை நொச்சி இலை தழுதாழை இலை எருக்க இலை ஆமணக்கு இலை புளிய இலை உத்தாமணி யிலை இவற்றை வகைக்கு கைப்பிடி எடுத்து துணியில் முடிச்சு கட்டி ஒரு சட்டியில் நல்லெண்ணை ஊற்றி அதில் முடிந்த இலைகளை அடுப்பிலிட்டு சுட வைத்து சூடு தாங்கும் அளவில் வலியுள்ள இடங்களில் ஒத்தடமிட வலி நீங்கும். இது இலைக்கிழி எனப்படும் .🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹2. காய்ந்த சரக்குகளில் சித்தரத்தை ,அதிமதுரம் வாதநாராயணன், முடக்கத்தான்,மஞ்சள் ,நன்னாரி ஆகியன வகைக்கு 50 கிராம் பொடியாக வாங்கி துணியில் முடிச்சு கட்டி சட்டியில் நல்லெண் ணை ஊற்றி சுடவைத்து முடிச்சை அதில் நனைத்து வலியுள்ள இடத்தில் ஒத்தடமிட வலி நீங்கும் . இதுவே பொடிகிழிஎனப்படும் . 🌳🌳🌳🌳🌳🌳 மத்தன் தைலம். ஊமத்தன் இலைச்சாறு அரை லிட்டர் தேங்கா யெண்ணை ஒரு லிட்டர் மயில் துத்தம் 25கிராம் இவற்றை ஒன்றாக கலந்து அடுப்பில் வைத்துக் காய்ச்சி சாறு சுண்டிய பின் இறக்கி வைத்து ஆறாத புண் குழிப்புண் இவற்றில் தடவ ஆறும்.🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀இந்த எண்ணையில் பெட்ரோலியம் ஜெல்லி 350,தேன் மெழுகு150, போட்டு உருக்கி டப்பாக்களில் ஊற்றி பத்திரப்படுத்தி அனைத்து வித புண் காயம் சேற்றுப்புண் இவற்றில் தடவ ஆறும்.🍀🌹🌹🌹🍀🍀🍀🍀🍀🌹🌹🌹🍀🌹🍀🍀சீமையகத்தி இலையை எலுமிச்சம்பழச் சாறுவிட்டு அரைத்து , கருஞ்சீரகம் ,கார்போகரிசி கஸ்த்தூரி மஞ்சள் ஆகிவற்றை வகைக்கு 50கிராம் பொடித்து கலந்து ஒருலிட்டர் நீரடி முத்து எண்ணை யிலிட்டு காய்ச்சி மணல் பதத்தில் இறக்கி வடித்து வடித்த எண்ணையில் தேன் மெழுகு100, பெட்ரோலியம் ஜல்லி400 போட்டு உருக்கி டப்பாவில் ஊற்றவும்.சொறி சிரங்கு படை சேற்றுப்புண்,தேமல் ,பித்த வெடிப்பு இவற்றில் தடவ குணமாகும். நன்றி வணக்கம் .
Friday, July 20, 2018
Tuesday, July 17, 2018
மூலிகை உப்பு எடுக்கும் முறை❄❄❄
*மூலிகை உப்பு எடுக்கும் முறை:*
எந்த மூலிகையாக இருந்தாலும் அதிலிருந்து உப்பு எடுக்க வேண்டும் என்றால் இந்த முறையில் எடுக்கலாம்.
தேவையான மூலிகையை அதிக அளவில் எடுத்து வந்து காயவைத்து (நிழலில் காய வைத்தால் உப்பு அதிக வீரியம் கொண்டதாக இருக்கும்) பின் இரும்பு சட்டியில் காய்ந்த மூலிகையை போட்டு கொளுத்தி சாம்பல் எடுக்க வேண்டும்.
இவ்வாறு சேகரித்த சாம்பலை எல்லாம் ஒரு இரும்பு சட்டி அல்லது மண் சட்டியில் போட்டு அதில் நீர் ஊற்றி மேற்படி சாம்பல் கரையும் வரை வேப்பங்குச்சியால் நன்கு கலக்கவும்.
அதன் பிறகு இந்த நீரை அசையாமல் ஒரு இடத்தில் வைத்து விட்டு 3 அல்லது 4 மணி நேரம் கழித்து மீண்டும் கலக்கவும்.
இது போல ஒரு நாளைக்கு ஐந்து அல்லது ஆறு முறை வீதம் ஒரு வாரம் வரை செய்ய வேண்டும். அப்போது தான் மூலிகையின் சத்துக்கள் முழுவதும் நீரில் கரையும்.
பின்னர் ஒரு வாரம் கழித்து அடியில் தங்கிய கசடை மட்டும் நீக்கி விட்டு தெளிந்த நீரை மட்டும் தனியாக வடித்து எடுத்து இரும்பு சட்டியில் போட்டு காய்ச்சினால் அந்த நீரானது தைலம் போல கொழகொழவென வரும். அதன் பிறகு அடுப்பை அணைத்து விட்டால் சிறிது நேரத்தில் நீரெல்லாம் வற்றி உப்பு மட்டும் அடியில் நிற்கும்.
மேற்படி தெளிந்த நீரை சட்டியில் ஊற்றி காய்ச்சாமல் சிறிய பீங்கான் கிண்ணங்களில் ஊற்றி சூரிய ஒளியில் வைத்தாலும் நீர் வற்றி உப்பு அடியில் நிற்கும். ஆனால் இது அதிக நேரம் எடுப்பதால் அடுப்பு வைத்து காய்ச்சுவது சிறந்தது.
இருப்பினும் சூரிய ஒளியில் வைத்து எடுத்த உப்பு தான் அதிக வீரியமாக இருக்கும்.
மரு.நந்தகுமார்
8248890954
எந்த மூலிகையாக இருந்தாலும் அதிலிருந்து உப்பு எடுக்க வேண்டும் என்றால் இந்த முறையில் எடுக்கலாம்.
தேவையான மூலிகையை அதிக அளவில் எடுத்து வந்து காயவைத்து (நிழலில் காய வைத்தால் உப்பு அதிக வீரியம் கொண்டதாக இருக்கும்) பின் இரும்பு சட்டியில் காய்ந்த மூலிகையை போட்டு கொளுத்தி சாம்பல் எடுக்க வேண்டும்.
இவ்வாறு சேகரித்த சாம்பலை எல்லாம் ஒரு இரும்பு சட்டி அல்லது மண் சட்டியில் போட்டு அதில் நீர் ஊற்றி மேற்படி சாம்பல் கரையும் வரை வேப்பங்குச்சியால் நன்கு கலக்கவும்.
அதன் பிறகு இந்த நீரை அசையாமல் ஒரு இடத்தில் வைத்து விட்டு 3 அல்லது 4 மணி நேரம் கழித்து மீண்டும் கலக்கவும்.
இது போல ஒரு நாளைக்கு ஐந்து அல்லது ஆறு முறை வீதம் ஒரு வாரம் வரை செய்ய வேண்டும். அப்போது தான் மூலிகையின் சத்துக்கள் முழுவதும் நீரில் கரையும்.
பின்னர் ஒரு வாரம் கழித்து அடியில் தங்கிய கசடை மட்டும் நீக்கி விட்டு தெளிந்த நீரை மட்டும் தனியாக வடித்து எடுத்து இரும்பு சட்டியில் போட்டு காய்ச்சினால் அந்த நீரானது தைலம் போல கொழகொழவென வரும். அதன் பிறகு அடுப்பை அணைத்து விட்டால் சிறிது நேரத்தில் நீரெல்லாம் வற்றி உப்பு மட்டும் அடியில் நிற்கும்.
மேற்படி தெளிந்த நீரை சட்டியில் ஊற்றி காய்ச்சாமல் சிறிய பீங்கான் கிண்ணங்களில் ஊற்றி சூரிய ஒளியில் வைத்தாலும் நீர் வற்றி உப்பு அடியில் நிற்கும். ஆனால் இது அதிக நேரம் எடுப்பதால் அடுப்பு வைத்து காய்ச்சுவது சிறந்தது.
இருப்பினும் சூரிய ஒளியில் வைத்து எடுத்த உப்பு தான் அதிக வீரியமாக இருக்கும்.
மரு.நந்தகுமார்
8248890954
Thursday, July 12, 2018
Saturday, July 7, 2018
Bp medicine
Medicine for இரத்த உயர் அழுத்தம் :
மருதம்பட்டை -100 கிராம்
ஜீரகம் -15 கிராம்
சோம்பு -15 கிராம்
மஞ்கள் -15 கிராம்
இவைகளை எல்லாம் பொடியாக்கி காலை, மாலை 6 கிராம் அளவு எடுத்து 400 ml தண்ணீரில் கொதிக்கவைத்து 200 ml ஆக குறுக்கி பருகிவர இரத்த உயர் அழுத்த நோய் உடலைவிட்டு அகலும்
மருதம்பட்டை -100 கிராம்
ஜீரகம் -15 கிராம்
சோம்பு -15 கிராம்
மஞ்கள் -15 கிராம்
இவைகளை எல்லாம் பொடியாக்கி காலை, மாலை 6 கிராம் அளவு எடுத்து 400 ml தண்ணீரில் கொதிக்கவைத்து 200 ml ஆக குறுக்கி பருகிவர இரத்த உயர் அழுத்த நோய் உடலைவிட்டு அகலும்
சத்துமாவு தயாரிக்கும் முறை
#சத்துமாவு__தயாரிக்கும்__முறை !!!
*இதுதான் உண்மையான சத்துமாவு இதை தயாரிக்கும் முறை:*
இயற்கை உணவுகள் பற்றிய விழிப்புணர்வு தற்போது மக்களிடம் பெருகி வருகிறது.
*#தேவையான_பொருட்கள்:*
ராகி 2 கிலோ
சோளம் 2 கிலோ
கம்பு 2 கிலோ
பாசிப்பயறு அரை கிலோ
கொள்ளு அரை கிலோ
மக்காசோளம் 2 கிலோ
பொட்டுக்கடலை ஒரு கிலோ
சோயா ஒரு கிலோ
தினை அரை கிலோ
கருப்பு உளுந்து அரை கிலோ
சம்பா கோதுமை அரை கிலோ
பார்லி அரை கிலோ
நிலக்கடலை அரை கிலோ
அவல் அரை கிலோ
ஜவ்வரிசி அரை கிலோ
வெள்ளை எள் 100 கிராம்
கசகசா 50 கிராம்
ஏலம் 50 கிராம்
முந்திரி 50 கிராம்
சாரப்பருப்பு 50 கிராம்
பாதாம் 50 கிராம்
ஓமம் 50 கிராம்
சுக்கு 50 கிராம்
பிஸ்தா 50 கிராம்
ஜாதிக்காய் 2
மாசிக்காய் 2
*#செய்முறை :*
ராகி, சோளம், கம்பு, பாசிப்பயறு, கொள்ளு ஆகியவற்றை தண்ணீரில் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
தண்ணீரை நன்றாக வடித்த பின்னர் அதை ஒரு துணியில் கட்டி 12 மணி நேரம் கழித்து எடுத்தால், தானியங்கள் முளைவிட்டு இருக்கும். அவற்றை 3 நாள் வெயிலில் காய வைக்க வேண்டும். மற்ற பொருட்களை ஒரு நாள் வெயிலில் காய வைக்க வேண்டும். அனைத்தையும் மொத்தமாக மாவு மில்லில் அரைத்து, 4 மணி நேரம் ஆற வைத்தால் சத்து மாவு தயார். 12 கிலோ மாவு கிடைக்கும்.
சத்து மாவு தயாரிக்க தேவையான பொருட்கள் மளிகைக் கடைகளில் கிடைக்கின்றன. தனியாக இடம் எதுவும் தேவையில்லை. வீட்டிலேயே தானியங்களை ஊற வைத்து, முளை கட்டலாம். வீட்டு வளாகத்தில் காய வைக்கலாம். தானியங்களை வீட்டு மிக்சியில் அரைத்தால் சரியாக வராது. மாவு மில்லில் கொடுத்து அரைக்க வேண்டும்.
*#பயன்கள்*
1.ஒரு நபருக்கு ஒரு டம்ளர் தண்ணீர் வீதம் கொதிக்க வைக்க வேண்டும்.
2. ஒருவருக்கு 2 ஸ்பூன் மாவு வீதம் தண்ணீரில் கலந்து 2 நிமிடம் கொதிக்க வைத்தால் சத்து மாவு கூழ் தயாராகி விடும்.
3.அதில் அவரவர் விருப்பப்படி இனிப்பு அல்லது உப்பு அல்லது உப்பு, மிளகுபொடி சேர்த்து பருகலாம்.
4.எதுவும் கலக்காமல் அப்படியேகூட குடிக்கலாம்.காலையில் 2 டம்ளர் சத்துமாவு பானம் குடித்தால் காலை சாப்பாடு பூர்த்தியாகி விடும்.
5.இதன்மூலம் உடலுக்கு தேவையான சத்துகள் மற்றும் சக்தி கிடைக்கிறது.
6.கார்போஹைட்ரேட், கொழுப்பு குறைவாக இருப்பதால் உடல் பெருக்காது.
7.உடல் எடையை குறைக்க உதவுகிறது. குழந்தைகளுக்கு ஏற்ற உணவு. காலை, மாலை வேளைகளில் அவர்களுக்கு தரலாம்.
8.முதியோர்கள் இதை அருந்தும் போது உடனடி சக்தி கிடைப்பதை உணர முடியும். எளிதில் ஜீரணிக்க கூடிய உணவு.
*#குறிப்பு:*
#6 மாதம் கெடாது
1.சத்துமாவு காயவைத்து, வறுத்து அரைக்கப்படுவதால் 6 மாதம் வரை கெடாது.
2.பொதுவாக ஒரு நபர் ஒரு நாளைக்கு 50 கிராம் வரை பயன்படுத்தினால் ஒரு கிலோ பாக்கெட் 20 நாளில் தீர்ந்து விடும். இதனால், கெட்டு விடுமோ என்ற கவலையும் தேவையில்லை.
இன்றே இதை உங்கள் வீட்டில் நீங்களே தயாரித்து உங்களின் அக்கறை மிக்க குடும்பத்தினர் அனைவரும் பயன்படுத்தி நலமும் வளமும் பெறுங்கள்.
*இதுதான் உண்மையான சத்துமாவு இதை தயாரிக்கும் முறை:*
இயற்கை உணவுகள் பற்றிய விழிப்புணர்வு தற்போது மக்களிடம் பெருகி வருகிறது.
*#தேவையான_பொருட்கள்:*
ராகி 2 கிலோ
சோளம் 2 கிலோ
கம்பு 2 கிலோ
பாசிப்பயறு அரை கிலோ
கொள்ளு அரை கிலோ
மக்காசோளம் 2 கிலோ
பொட்டுக்கடலை ஒரு கிலோ
சோயா ஒரு கிலோ
தினை அரை கிலோ
கருப்பு உளுந்து அரை கிலோ
சம்பா கோதுமை அரை கிலோ
பார்லி அரை கிலோ
நிலக்கடலை அரை கிலோ
அவல் அரை கிலோ
ஜவ்வரிசி அரை கிலோ
வெள்ளை எள் 100 கிராம்
கசகசா 50 கிராம்
ஏலம் 50 கிராம்
முந்திரி 50 கிராம்
சாரப்பருப்பு 50 கிராம்
பாதாம் 50 கிராம்
ஓமம் 50 கிராம்
சுக்கு 50 கிராம்
பிஸ்தா 50 கிராம்
ஜாதிக்காய் 2
மாசிக்காய் 2
*#செய்முறை :*
ராகி, சோளம், கம்பு, பாசிப்பயறு, கொள்ளு ஆகியவற்றை தண்ணீரில் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
தண்ணீரை நன்றாக வடித்த பின்னர் அதை ஒரு துணியில் கட்டி 12 மணி நேரம் கழித்து எடுத்தால், தானியங்கள் முளைவிட்டு இருக்கும். அவற்றை 3 நாள் வெயிலில் காய வைக்க வேண்டும். மற்ற பொருட்களை ஒரு நாள் வெயிலில் காய வைக்க வேண்டும். அனைத்தையும் மொத்தமாக மாவு மில்லில் அரைத்து, 4 மணி நேரம் ஆற வைத்தால் சத்து மாவு தயார். 12 கிலோ மாவு கிடைக்கும்.
சத்து மாவு தயாரிக்க தேவையான பொருட்கள் மளிகைக் கடைகளில் கிடைக்கின்றன. தனியாக இடம் எதுவும் தேவையில்லை. வீட்டிலேயே தானியங்களை ஊற வைத்து, முளை கட்டலாம். வீட்டு வளாகத்தில் காய வைக்கலாம். தானியங்களை வீட்டு மிக்சியில் அரைத்தால் சரியாக வராது. மாவு மில்லில் கொடுத்து அரைக்க வேண்டும்.
*#பயன்கள்*
1.ஒரு நபருக்கு ஒரு டம்ளர் தண்ணீர் வீதம் கொதிக்க வைக்க வேண்டும்.
2. ஒருவருக்கு 2 ஸ்பூன் மாவு வீதம் தண்ணீரில் கலந்து 2 நிமிடம் கொதிக்க வைத்தால் சத்து மாவு கூழ் தயாராகி விடும்.
3.அதில் அவரவர் விருப்பப்படி இனிப்பு அல்லது உப்பு அல்லது உப்பு, மிளகுபொடி சேர்த்து பருகலாம்.
4.எதுவும் கலக்காமல் அப்படியேகூட குடிக்கலாம்.காலையில் 2 டம்ளர் சத்துமாவு பானம் குடித்தால் காலை சாப்பாடு பூர்த்தியாகி விடும்.
5.இதன்மூலம் உடலுக்கு தேவையான சத்துகள் மற்றும் சக்தி கிடைக்கிறது.
6.கார்போஹைட்ரேட், கொழுப்பு குறைவாக இருப்பதால் உடல் பெருக்காது.
7.உடல் எடையை குறைக்க உதவுகிறது. குழந்தைகளுக்கு ஏற்ற உணவு. காலை, மாலை வேளைகளில் அவர்களுக்கு தரலாம்.
8.முதியோர்கள் இதை அருந்தும் போது உடனடி சக்தி கிடைப்பதை உணர முடியும். எளிதில் ஜீரணிக்க கூடிய உணவு.
*#குறிப்பு:*
#6 மாதம் கெடாது
1.சத்துமாவு காயவைத்து, வறுத்து அரைக்கப்படுவதால் 6 மாதம் வரை கெடாது.
2.பொதுவாக ஒரு நபர் ஒரு நாளைக்கு 50 கிராம் வரை பயன்படுத்தினால் ஒரு கிலோ பாக்கெட் 20 நாளில் தீர்ந்து விடும். இதனால், கெட்டு விடுமோ என்ற கவலையும் தேவையில்லை.
இன்றே இதை உங்கள் வீட்டில் நீங்களே தயாரித்து உங்களின் அக்கறை மிக்க குடும்பத்தினர் அனைவரும் பயன்படுத்தி நலமும் வளமும் பெறுங்கள்.
Thursday, July 5, 2018
பற்கள் உறுதி பெற வெட்பாலை பற்பொடி
*பற்கள் உறுதி பெற வெட்பாலை*
உலர்ந்த வெட்பாலை இலை – 200 கிராம்
கொய்யா இலை - 200 கிராம்
மாதுளை இலை - 200 கிராம்
மாவிலை - 200 கிராம்
நெல்லிக்காய் - 200 கிராம்
கடுக்காய் - 200 கிராம்
தான்றிக்காய் - 200 கிராம்
மாசிக்காய் - 200 கிராம்
தாளிசபத்ரி - 200 கிராம்
சித்தரத்தை - 200 கிராம்
ஆகியவற்றை எடுத்து, நன்கு காய வைத்து அரைத்து வைத்துக்கொள்ளவும்.
இந்தப் பொடியைக் கொண்டு பல் துலக்கி வர, பல்வலி, பல்கூச்சம், பல் ஆட்டம், ஈறுகளில் ரத்தம் வருதல், சொத்தைப் பல் போன்ற குறைபாடுகள் முழுமையாய்த் தீரும்.
உலர்ந்த வெட்பாலை இலை – 200 கிராம்
கொய்யா இலை - 200 கிராம்
மாதுளை இலை - 200 கிராம்
மாவிலை - 200 கிராம்
நெல்லிக்காய் - 200 கிராம்
கடுக்காய் - 200 கிராம்
தான்றிக்காய் - 200 கிராம்
மாசிக்காய் - 200 கிராம்
தாளிசபத்ரி - 200 கிராம்
சித்தரத்தை - 200 கிராம்
ஆகியவற்றை எடுத்து, நன்கு காய வைத்து அரைத்து வைத்துக்கொள்ளவும்.
இந்தப் பொடியைக் கொண்டு பல் துலக்கி வர, பல்வலி, பல்கூச்சம், பல் ஆட்டம், ஈறுகளில் ரத்தம் வருதல், சொத்தைப் பல் போன்ற குறைபாடுகள் முழுமையாய்த் தீரும்.
மூலிகை சாப நிவர்த்தி💫
இவை அனைத்து பழைய மூலிகை ஜாலரத்தினம் என்னும் நூலில் வே,ஶ்ரீ பாலகிருஷ்ண முதலியார் அவர்களால் இயற்ற பட்டது மூலிகைகள் சாப நிவர்த்தி முறைகளும் அஷ்ட கர்ம மூலிகைகள் அறுபத்தி நான்கும்.....*
**********************************************************************
மூலிகை சாப நிவர்த்தி*
****************************
மூலிகை எடுக்க உரிய நாளில் மூலிகை இருக்கும் இடத்திற்கு சென்று மூலிகையை சுற்றி உள்ள இடத்தை சுத்தம் செய்து அதன்பின் அந்த இடத்தை கோமியம் அல்லது மஞ்சள் நீர் தெளிக்கவும். பின் தேங்காய், பழம், ஊதுபத்தி வெற்றிலை பாக்கு, சூடம், சாம்பிராணி இவைகளை வைத்து ஒரு மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து பின் விக்னம் நீக்கும் வினாயகரை மனமாற துதித்து பின் எந்த காரியத்திற்காக மூலிகை எடுக்கிறோமோ அதற்குறிய திசை பார்த்து அமர்ந்து கன்னி நூல் [மஞ்சள் நிற நூல்] காப்புகட்டி தேங்காய் உடைத்து சாம்பிராணி தூபம் தீபம் காட்டி எலுமிச்சை காவு கொடுத்து பொங்கல் நைவேத்யம் வைத்து *"ஓம் ஸ்ரீம் ஹ்ரீம், ஐம் க்லீம் ஸெளம், ஸர்வ மூலி சாபம் நாஸய நாஸய சித்தர் சாபம் நாஸய நாஸய, தேவ முனி அசுர முனி சாபம் நாஸய நாஸய ஹூம் பட் ஸ்வாஹா*- என 108 உரு சொல்லியும், *சிங்வங்சிவயநம சங்வங் சரஹணபவ* - என்று ஒரு முறை சொல்லி பின் இரும்பு ஆயுதங்கள் படாமலும், சுண்டு விரல்களும், நகங்கள் பத்தும் படாமலும் இலையை கிள்ளுவதோ செடியை பிடுங்குவதோ எப்படி செய்தாலும் பலிக்கும். இது என் அனுபவ ரீதியில் கைகண்டது.
*மூலிகை பறிக்க உகந்த கிழமைகள் :*
************************************
வசியத்திற்கு - ஞாயற்றுகிழமை,
மோகனத்திற்கு - திங்கள்கிழமை,
ஏவலுக்கு - செவ்வாய்கிழமை
தம்பனம் - புதன்கிழமை,
உச்சாடனம் - வியாழன்,
ஆகர்ஷ்ணம் - வெள்ளி,
மாரணம் - சனி
*மூலிகை பறிக்க உகந்த திசைகள் :*
**************************************
வசியம் - கிழக்கு பார்த்து அமரவும்,
மோகனம் - தெற்கு,
உச்சாடனம் - மேற்கு,
பேதனம் - வடக்கு,
ஏவல், தம்பனம் - தென்மேற்கு
******************************************
ஆதிகாலத்தில் வாழ்ந்து பல அற்புதங்களை செய்த நம்தமிழக சித்தர்கள் மூலிகைகளை கொண்டே மந்திர உருவேற்றிஅஷ்டகர்மங்கள் ( எட்டு சித்திகள் ) செய்ய ஒரு சித்திக்கு 8மூலிகை என அஷ்ட சித்திக்கு 64 மூலிகைகள் ஆகும். அஷ்டகர்ம்ம்என்பது 1. ஆகர்ஷனம், 2. உச்சாடனம், 3. தம்பனம், 4. பேதனம், 5.மாரணம், 6. மோகனம், 7. வசியம, 8. வித்வேஷனம் ஆகும். இந்தஅஷ்ட கர்ம செயல்களை பற்றி விரிவாக காணலாம்.
1. *ஆகர்ஷனம் :*
*******************
நமக்கு தேவையானதை இருக்கும்இடத்திலிருந்து நாம் இருக்கும் இடத்திற்கே வரவழைக்கும்வித்தையாகும். இதற்கு உதவும் மூலிகைகள் 1. வேளை, 2.உள்ளொட்டி, 3. புறவொட்டி, 4.சிறு முன்னை, 5. குப்பைமேனி, 6.அழுகண்ணி, 7. சிறியாநங்கை, 8. எருக்கு என எட்டு மூலிகைகளாகும்.இதில்
மிருகங்களை அழைப்பதற்கு - வேளை, குப்பைமேனி.
பெண்களை அழப்பதற்கு - உள்ளொட்டி, அழுகண்ணி.
அரசர், பிரபுக்ளை அழைப்பதற்கு - சிறுமுன்னை.
துர்தேவதைகளை அழைப்பதற்கு - புறவொட்டி.
தேவதைகளை அழைப்பதற்கு - எருக்கு.
அனைத்து அழைப்பிற்கும் - சிறியாநங்கை.
2. *உச்சாடனம் :*
*****************
பேய், பிசாசு, கெட்ட ஆவிகள், நோய்கள்தீமைகளை விரட்டியடித்தல். இதற்கு பயன்படும் மூலிகைகள் 1. பேய்மிரட்டி, 2. மான் செவிகள்ளி, 3. தேள்கொடுக்கி, 4. கொட்டைகரந்தை, 5.வெள்ளை கண்டங்கத்திரி, 6. மருதோன்றி, 7. பிரமதண்டு, 8. புல்லுருவிஆகும். இதில்
மிருகங்களை விரட்ட - பேய்மிரட்டி.
எதிரிகளை விரட்ட - மான்செவிகள்ளி.
உடலில் ஏறிய விஷங்களை விரட்ட - தேள்கொடுக்கி.
நீர்வாழ் உயிரனங்களை விரட்ட - கொட்டைகரந்தை.
கால்நடைகளை விரட்ட - வெள்ளை கண்டங்கத்தரி.
பூத பைசாசங்களை விரட்ட - மருதோன்றி, புல்லுருவி
பிறர் நமக்கு செய்யும் தீமகளை விரட்ட - பிரமதண்டு.
3. *பேதனம் :*
***************
ஒன்றை மற்றொன்றாக மாற்றுதல், அதாவது ஒருவிஷயத்தை நினைத்து நம்மிடம் வருபவரை அந்த நினைப்பைவேறுபட்டு போகும்படி செய்தல். இதற்கு பயன்படும் மூலிகைகள் 1.வட்டதுத்தி, 2. செம்பசளை, 3. மாவிலங்கு, 4. பாதிரி, 5. கோழியாவரை, 6. சீந்தில்கொடி, 7. புடலங்கொடி, 8. ஆகாயதாமரை ஆகும்.
நெருப்பின் உக்கிரத்தை பேதிக்க - வட்டதுத்தி,
மனிதனின் எண்ணத்தை பேதிக்க - செம்பசளை,
பூத, பிசாசுகளை பேதிக்க - மாவிலங்கு, பாதிரி,
துர்தேவதைகளை பேதிக்க - கோழியாவரை,
எதிரிகளை பேதிக்க - சீந்தில்கொடி,
பெண்களை பேதிக்க - புடலங்கொடி,
வியாதிகளை பேதிக்க - ஆகாயதாமரை.
4. *மாரணம் :*
***************
கொல்வது அல்லது மாற்றுவது. உலோகங்களைஅதன் தன்மையில் இருந்து மாற்றுவது. எதிரிகளுக்கு நோயைஉண்டாக்கி கொல்வது. இதற்கு பயன்படும் மூலிகைகள் 1. நச்சுப்புல், 2. நிர்விஷம், 3. சித்திரமூலம், 4. அம்மன் பச்சரிசி, 5. கார்த்திகைகிழங்கு, 6. மருதோன்றி, 7. கருஞ்சூரி, 8. நாவி ஆகும்.
மனிதர்களை மாரணம் செய்ய - நச்சுப்புல், நிர்விஷம்,
வியாதிகளை மாரணம் செய்ய - சித்திரமூலம், கருஞ்சூரை,
கண்ணாடிகளை மாற்ற - அம்மன் பச்சரிசி,
மிருகங்களை மாரணம் செய்ய - மருதோன்றி, கார்திகைகிழங்கு.
5. *மோகனம் :*
*****************
பிறரை நம்மிடம் மயங்கி இருக்க செய்வது.இதற்கு பயன்படும் மூலிகைகள் 1. பொன்னூமத்தை, 2. கஞ்சா வேர், 3.வெண்ணூமத்தை, 4. கோரைக்கிழங்கு, 5. மருளூமத்தை, 6. ஆலமரவிழுது, 7. நன்னாரி, 8. கிராம்பு ஆகும்.
பெண்களை மோகிக்க - பொன்னூமத்தை,
பொதுமக்களை மோகிக்க - கஞ்சா வேர்,
உலகத்தை மோகிக்க - வெண்ணூமத்தை,
விலங்குகளை மோகிக்க - கோரைக்கிழங்கு,
தேவதைகளை மோகிக்க - மருளூமத்தை,
அரசர்களை மோகிக்க - ஆலம்விழுது,
மனிதர்களை மோகிக்க - கிராம்பு,
எல்லாவற்றையும் மோகிக்க - நன்னாரி.
6. *வசியம் :*
*************
எல்லாவற்றையும் நம்மிடம் விருப்பமாகவும் இஷ்டமாயும் இருக்க வைத்தல். இதற்கு பயன்படு்ம் மூலிகைகள் 1.சீதேவிச் செங்கழுநீர், 2. நிலவூமத்தை, 3. வெள்ளை விஷ்ணுகிரந்தி, 4.கருஞ்செம்பை, 5. வெள்ளை குன்றி மணி, 6. பொன்ணாங்கன்னி, 7.செந்நாயுருவி, 8. வெள்ளெருக்கு ஆகும்.
இராஜ வசியத்திற்கு - சீதேவி செங்கழுநீர்,
பெண் வசியத்திற்கு - நிலவூமத்தை,
லோக வசியத்திற்கு - வெள்ளெருக்கு,
ஜன வசியத்திற்கு - கருஞ்செம்பை, விஷ்ணுகிராந்தி,
விலங்கு வசியத்திற்கு - வெள்ளை குன்றி மணி,
தேவ வசியத்திற்கு - பொனணாங்கன்னி,
சாபம், வழக்குகள் வசியத்திற்கு - செந்நாயுருவி.
7. *வித்துவேஷனம் :*
************************
பகையை உண்டாக்குதல். இதற்குபயன்படும் மூலிகைகள். 1. கருங்காக்கனம், 2. வெள்ளை காக்கனம், 3.திருகு கள்ளி, 4. ஆடுதின்னாபாளை, 5. பூனைக்காலி, 6. கீழாநெல்லி, 7.ஏறண்டம், 8. சிற்றாமணக்கு ஆகும்.
அரசர்களுக்குள் பகை உண்டாக்க - கருங்காக்கணம்,
தேவர்களுக்கு - வெள்ளைக்காக்கணம், திருகுகள்ளி,
பூத, பைசாசங்களுக்கு - ஆடுதின்னாபாளை,
பெண்களுக்கு நோய் உண்டாக்க - பூனைக்காலி,
எதிரிகளால் உண்டாகும் ஆபத்தை தடுக்க - கீழாநெல்லி,
உணவை உண்ணாமல் செய்ய - சிற்றாமணக்கு.
8. *தம்பனம் :*
***************
தடுத்து நிறுத்துத்தல், விலங்குகளின்வாயை கட்டுதல். இதற்க்கு பயன்படும் மூலிகைகள் 1. கட்டுக்கொடி, 2. பால்புரண்டி, 3. பரட்டை, 4. நீர்முள்ளி, 5. நத்தைச்சூரி, 6. சத்திசாரணை, 7. பூமிச்சர்கரை, 8. குதிரைவாலி ஆகும்.
விந்துவை கட்ட - கட்டுக்கொடி, பால்புரண்டி, நீர்முள்ளி,
தண்ணீரைக்கட்டி அதன் மேல் அமர - கட்டுக்கொடி,
பெண்களின் முலைபாலை கட்ட - பால்புரண்டி,
வயிற்றுப் போக்கை நிறுத்த - பரட்டை,
கற்களை கறைக்க - நத்தைச்சூரி,
செயல்களை செயல்படாமல் கட்ட - சத்திசாரணை,
திரவத்தை கட்டி திடமாக்க - பூமிச்சர்கரை கிழங்கு,
கருப்பையில் உள்ள கருவை கட்ட - குதிரைவாலி.
மேற்படி மூலிகைகளை உரிய நாளில் காப்பு கட்டி,சாபநிவர்த்தி மந்திரம் சொல்லி பிடுங்கி வந்து உரிய மந்திர உருவேற்றிமேற்பட்ட அஷ்டகர்ம செயல்களை செய்ய அனைத்தும் வெற்றியாகும்
**********************************************************************
மூலிகை சாப நிவர்த்தி*
****************************
மூலிகை எடுக்க உரிய நாளில் மூலிகை இருக்கும் இடத்திற்கு சென்று மூலிகையை சுற்றி உள்ள இடத்தை சுத்தம் செய்து அதன்பின் அந்த இடத்தை கோமியம் அல்லது மஞ்சள் நீர் தெளிக்கவும். பின் தேங்காய், பழம், ஊதுபத்தி வெற்றிலை பாக்கு, சூடம், சாம்பிராணி இவைகளை வைத்து ஒரு மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து பின் விக்னம் நீக்கும் வினாயகரை மனமாற துதித்து பின் எந்த காரியத்திற்காக மூலிகை எடுக்கிறோமோ அதற்குறிய திசை பார்த்து அமர்ந்து கன்னி நூல் [மஞ்சள் நிற நூல்] காப்புகட்டி தேங்காய் உடைத்து சாம்பிராணி தூபம் தீபம் காட்டி எலுமிச்சை காவு கொடுத்து பொங்கல் நைவேத்யம் வைத்து *"ஓம் ஸ்ரீம் ஹ்ரீம், ஐம் க்லீம் ஸெளம், ஸர்வ மூலி சாபம் நாஸய நாஸய சித்தர் சாபம் நாஸய நாஸய, தேவ முனி அசுர முனி சாபம் நாஸய நாஸய ஹூம் பட் ஸ்வாஹா*- என 108 உரு சொல்லியும், *சிங்வங்சிவயநம சங்வங் சரஹணபவ* - என்று ஒரு முறை சொல்லி பின் இரும்பு ஆயுதங்கள் படாமலும், சுண்டு விரல்களும், நகங்கள் பத்தும் படாமலும் இலையை கிள்ளுவதோ செடியை பிடுங்குவதோ எப்படி செய்தாலும் பலிக்கும். இது என் அனுபவ ரீதியில் கைகண்டது.
*மூலிகை பறிக்க உகந்த கிழமைகள் :*
************************************
வசியத்திற்கு - ஞாயற்றுகிழமை,
மோகனத்திற்கு - திங்கள்கிழமை,
ஏவலுக்கு - செவ்வாய்கிழமை
தம்பனம் - புதன்கிழமை,
உச்சாடனம் - வியாழன்,
ஆகர்ஷ்ணம் - வெள்ளி,
மாரணம் - சனி
*மூலிகை பறிக்க உகந்த திசைகள் :*
**************************************
வசியம் - கிழக்கு பார்த்து அமரவும்,
மோகனம் - தெற்கு,
உச்சாடனம் - மேற்கு,
பேதனம் - வடக்கு,
ஏவல், தம்பனம் - தென்மேற்கு
******************************************
ஆதிகாலத்தில் வாழ்ந்து பல அற்புதங்களை செய்த நம்தமிழக சித்தர்கள் மூலிகைகளை கொண்டே மந்திர உருவேற்றிஅஷ்டகர்மங்கள் ( எட்டு சித்திகள் ) செய்ய ஒரு சித்திக்கு 8மூலிகை என அஷ்ட சித்திக்கு 64 மூலிகைகள் ஆகும். அஷ்டகர்ம்ம்என்பது 1. ஆகர்ஷனம், 2. உச்சாடனம், 3. தம்பனம், 4. பேதனம், 5.மாரணம், 6. மோகனம், 7. வசியம, 8. வித்வேஷனம் ஆகும். இந்தஅஷ்ட கர்ம செயல்களை பற்றி விரிவாக காணலாம்.
1. *ஆகர்ஷனம் :*
*******************
நமக்கு தேவையானதை இருக்கும்இடத்திலிருந்து நாம் இருக்கும் இடத்திற்கே வரவழைக்கும்வித்தையாகும். இதற்கு உதவும் மூலிகைகள் 1. வேளை, 2.உள்ளொட்டி, 3. புறவொட்டி, 4.சிறு முன்னை, 5. குப்பைமேனி, 6.அழுகண்ணி, 7. சிறியாநங்கை, 8. எருக்கு என எட்டு மூலிகைகளாகும்.இதில்
மிருகங்களை அழைப்பதற்கு - வேளை, குப்பைமேனி.
பெண்களை அழப்பதற்கு - உள்ளொட்டி, அழுகண்ணி.
அரசர், பிரபுக்ளை அழைப்பதற்கு - சிறுமுன்னை.
துர்தேவதைகளை அழைப்பதற்கு - புறவொட்டி.
தேவதைகளை அழைப்பதற்கு - எருக்கு.
அனைத்து அழைப்பிற்கும் - சிறியாநங்கை.
2. *உச்சாடனம் :*
*****************
பேய், பிசாசு, கெட்ட ஆவிகள், நோய்கள்தீமைகளை விரட்டியடித்தல். இதற்கு பயன்படும் மூலிகைகள் 1. பேய்மிரட்டி, 2. மான் செவிகள்ளி, 3. தேள்கொடுக்கி, 4. கொட்டைகரந்தை, 5.வெள்ளை கண்டங்கத்திரி, 6. மருதோன்றி, 7. பிரமதண்டு, 8. புல்லுருவிஆகும். இதில்
மிருகங்களை விரட்ட - பேய்மிரட்டி.
எதிரிகளை விரட்ட - மான்செவிகள்ளி.
உடலில் ஏறிய விஷங்களை விரட்ட - தேள்கொடுக்கி.
நீர்வாழ் உயிரனங்களை விரட்ட - கொட்டைகரந்தை.
கால்நடைகளை விரட்ட - வெள்ளை கண்டங்கத்தரி.
பூத பைசாசங்களை விரட்ட - மருதோன்றி, புல்லுருவி
பிறர் நமக்கு செய்யும் தீமகளை விரட்ட - பிரமதண்டு.
3. *பேதனம் :*
***************
ஒன்றை மற்றொன்றாக மாற்றுதல், அதாவது ஒருவிஷயத்தை நினைத்து நம்மிடம் வருபவரை அந்த நினைப்பைவேறுபட்டு போகும்படி செய்தல். இதற்கு பயன்படும் மூலிகைகள் 1.வட்டதுத்தி, 2. செம்பசளை, 3. மாவிலங்கு, 4. பாதிரி, 5. கோழியாவரை, 6. சீந்தில்கொடி, 7. புடலங்கொடி, 8. ஆகாயதாமரை ஆகும்.
நெருப்பின் உக்கிரத்தை பேதிக்க - வட்டதுத்தி,
மனிதனின் எண்ணத்தை பேதிக்க - செம்பசளை,
பூத, பிசாசுகளை பேதிக்க - மாவிலங்கு, பாதிரி,
துர்தேவதைகளை பேதிக்க - கோழியாவரை,
எதிரிகளை பேதிக்க - சீந்தில்கொடி,
பெண்களை பேதிக்க - புடலங்கொடி,
வியாதிகளை பேதிக்க - ஆகாயதாமரை.
4. *மாரணம் :*
***************
கொல்வது அல்லது மாற்றுவது. உலோகங்களைஅதன் தன்மையில் இருந்து மாற்றுவது. எதிரிகளுக்கு நோயைஉண்டாக்கி கொல்வது. இதற்கு பயன்படும் மூலிகைகள் 1. நச்சுப்புல், 2. நிர்விஷம், 3. சித்திரமூலம், 4. அம்மன் பச்சரிசி, 5. கார்த்திகைகிழங்கு, 6. மருதோன்றி, 7. கருஞ்சூரி, 8. நாவி ஆகும்.
மனிதர்களை மாரணம் செய்ய - நச்சுப்புல், நிர்விஷம்,
வியாதிகளை மாரணம் செய்ய - சித்திரமூலம், கருஞ்சூரை,
கண்ணாடிகளை மாற்ற - அம்மன் பச்சரிசி,
மிருகங்களை மாரணம் செய்ய - மருதோன்றி, கார்திகைகிழங்கு.
5. *மோகனம் :*
*****************
பிறரை நம்மிடம் மயங்கி இருக்க செய்வது.இதற்கு பயன்படும் மூலிகைகள் 1. பொன்னூமத்தை, 2. கஞ்சா வேர், 3.வெண்ணூமத்தை, 4. கோரைக்கிழங்கு, 5. மருளூமத்தை, 6. ஆலமரவிழுது, 7. நன்னாரி, 8. கிராம்பு ஆகும்.
பெண்களை மோகிக்க - பொன்னூமத்தை,
பொதுமக்களை மோகிக்க - கஞ்சா வேர்,
உலகத்தை மோகிக்க - வெண்ணூமத்தை,
விலங்குகளை மோகிக்க - கோரைக்கிழங்கு,
தேவதைகளை மோகிக்க - மருளூமத்தை,
அரசர்களை மோகிக்க - ஆலம்விழுது,
மனிதர்களை மோகிக்க - கிராம்பு,
எல்லாவற்றையும் மோகிக்க - நன்னாரி.
6. *வசியம் :*
*************
எல்லாவற்றையும் நம்மிடம் விருப்பமாகவும் இஷ்டமாயும் இருக்க வைத்தல். இதற்கு பயன்படு்ம் மூலிகைகள் 1.சீதேவிச் செங்கழுநீர், 2. நிலவூமத்தை, 3. வெள்ளை விஷ்ணுகிரந்தி, 4.கருஞ்செம்பை, 5. வெள்ளை குன்றி மணி, 6. பொன்ணாங்கன்னி, 7.செந்நாயுருவி, 8. வெள்ளெருக்கு ஆகும்.
இராஜ வசியத்திற்கு - சீதேவி செங்கழுநீர்,
பெண் வசியத்திற்கு - நிலவூமத்தை,
லோக வசியத்திற்கு - வெள்ளெருக்கு,
ஜன வசியத்திற்கு - கருஞ்செம்பை, விஷ்ணுகிராந்தி,
விலங்கு வசியத்திற்கு - வெள்ளை குன்றி மணி,
தேவ வசியத்திற்கு - பொனணாங்கன்னி,
சாபம், வழக்குகள் வசியத்திற்கு - செந்நாயுருவி.
7. *வித்துவேஷனம் :*
************************
பகையை உண்டாக்குதல். இதற்குபயன்படும் மூலிகைகள். 1. கருங்காக்கனம், 2. வெள்ளை காக்கனம், 3.திருகு கள்ளி, 4. ஆடுதின்னாபாளை, 5. பூனைக்காலி, 6. கீழாநெல்லி, 7.ஏறண்டம், 8. சிற்றாமணக்கு ஆகும்.
அரசர்களுக்குள் பகை உண்டாக்க - கருங்காக்கணம்,
தேவர்களுக்கு - வெள்ளைக்காக்கணம், திருகுகள்ளி,
பூத, பைசாசங்களுக்கு - ஆடுதின்னாபாளை,
பெண்களுக்கு நோய் உண்டாக்க - பூனைக்காலி,
எதிரிகளால் உண்டாகும் ஆபத்தை தடுக்க - கீழாநெல்லி,
உணவை உண்ணாமல் செய்ய - சிற்றாமணக்கு.
8. *தம்பனம் :*
***************
தடுத்து நிறுத்துத்தல், விலங்குகளின்வாயை கட்டுதல். இதற்க்கு பயன்படும் மூலிகைகள் 1. கட்டுக்கொடி, 2. பால்புரண்டி, 3. பரட்டை, 4. நீர்முள்ளி, 5. நத்தைச்சூரி, 6. சத்திசாரணை, 7. பூமிச்சர்கரை, 8. குதிரைவாலி ஆகும்.
விந்துவை கட்ட - கட்டுக்கொடி, பால்புரண்டி, நீர்முள்ளி,
தண்ணீரைக்கட்டி அதன் மேல் அமர - கட்டுக்கொடி,
பெண்களின் முலைபாலை கட்ட - பால்புரண்டி,
வயிற்றுப் போக்கை நிறுத்த - பரட்டை,
கற்களை கறைக்க - நத்தைச்சூரி,
செயல்களை செயல்படாமல் கட்ட - சத்திசாரணை,
திரவத்தை கட்டி திடமாக்க - பூமிச்சர்கரை கிழங்கு,
கருப்பையில் உள்ள கருவை கட்ட - குதிரைவாலி.
மேற்படி மூலிகைகளை உரிய நாளில் காப்பு கட்டி,சாபநிவர்த்தி மந்திரம் சொல்லி பிடுங்கி வந்து உரிய மந்திர உருவேற்றிமேற்பட்ட அஷ்டகர்ம செயல்களை செய்ய அனைத்தும் வெற்றியாகும்
Sunday, July 1, 2018
ஜீவ பஸ்ப விபூதி தயார் செய்யும் முறை❄
ஜீவ பஸ்ப விபூதி தயார் செய்யும் முறை:
1. படிகார பஸ்பம் – 10 கிராம்
2. கல்நார் பஸ்பம் – 10 கிராம்
3. குங்கிலிய பஸ்பம் – 10 கிராம்
4. நண்டுக்கல் பஸ்பம் – 10 கிராம்
5. ஆமை ஓடு பஸ்பம் – 10 கிராம்
6. பவள பஸ்பம் – 10 கிராம்
7. வேற்பவள பஸ்பம் – 10 கிராம்
8. சங்கு பஸ்பம் – 10 கிராம்
9. சிலா சத்து பஸ்பம் – 10 கிராம்
10.சிருங்கி பஸ்பம் – 10 கிராம்
11. முத்து சிப்பி பஸ்பம் – 10 கிராம்
12. நத்தை ஓடு பஸ்பம் – 10 கிராம்
13. பசுஞ்சான விபூதி – 2 கிலோ
பசுஞ்சான விபூதி – 2 கிலோ வினை ஒரு தாம்பளத்தில் நன்றாக பரப்பி 1 முதல் 12 வரை குறிப்பிடபட்ட சரக்குகளை(இவை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) பசுஞ்சான விபூதியுடன் ஒவ்வொன்றாக கலந்து வைத்து கொள்ள வேண்டும்.
இந்த ஜீவ பஸ்ப விபூதியை கொண்டு எந்த காரியம் வேண்டுமானாலும் சாதிக்கலாம்.
இதில் உயிர் உள்ள ஜீவ பஸ்பங்கள் சேர்ந்திருப்பதால் மிளகு பிரமாணம் எடுத்து நீரில் கலந்து சாப்பிட உடலில் இருக்கும் நோய்கள் தீரும்.
மந்திரங்கள் ஜபித்து நெற்றியில் பூசும்போது தொழில் பிரச்சனைகள், குடும்ப பிரச்சனைகள் அனைத்தும் தீரும்.
இந்த ஜீவ பஸ்ப விபூதி யை பத்திரமாக ஒரு பட்டுப்பையில் சேமித்து வைத்து உபயோகப்படுத்தி வரலாம்.
உபாசகர்கள் மந்திர ஜபம் செய்யும் போது தனது வலது உள்ளங்கையில் முறைப்பபடி தயாரிக்கப்பட்ட ஜீவ பஸ்ப விபூதியை வைத்து பின்பு ஜபம் முடிந்தவுடன் அதைப் பத்திரமாக ஒரு பட்டுப்பையில் சேமித்து வைக்கவும். அடுத்த முறை மந்திர ஜபம் செய்யும் போது தனது வலது உள்ளங்கையில் அதே விபூதியை வைத்து பின்பு ஜபம் முடிந்தவுடன் அதே பட்டுப்பையில் சேமித்து வைக்கவும். இப்படியே செய்து வர வர ஜபம் செய்பவர்களது எண்ண அலைகள் விபூதியில் சேமிக்கப்படும். பின்பு ஏதேனும் ஒரு காரியத்திற்காக விபூதி கொடுக்கும் முன்னர் மூல மந்திரத்தை 108 முறை ஜபித்துக் கொடுக்க அந்த காரியம் அப்படியே பலிக்கும்.
Subscribe to:
Posts (Atom)