Wednesday, June 6, 2018

எலும்பு முறிவிற்கு எப்படி கட்டுப் போடுதல்❄


எலும்பு முறிவிற்கு எப்படி கட்டுப் போடுதல் என்பதை  வெளியிட்டுள்ளேன். பDITHத்து பயனடையுங்கள்.  முதலில் முட்டைப் பற்றிட தேவையான பொருட்கள்
( 1 ) நாட்டுக் கோழி முட்டை (கிடைக்கவில்லை என்றால் லக்கான் கோழி முட்டை உபயோகிக்கலாம்)
( 2 ) உளுந்தம் பொடி மிக மெல்லியதாய் அரைத்தது
( 3 ) நல்லெண்ணெய்
( 4 ) அத்திக்காய் காய வைத்தது மெல்லியதாய் பொடி செய்து அரைத்தது (கிடைக்கவில்லை என்றால் விட்டுவிடலாம்)
( 5 ) காடாத் துணி வேண்டிய அளவுக்கு
( 6 ) துளி அளவு சுண்ணாம்பு
முதலில் நாட்டுக் கோழி முட்டைகளை கட்டுப் போட தேவையான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த கட்டிற்கு 4 முட்டைகள் தேவை என்பதால் 4 முட்டைகள் மட்டும் எடுத்துள்ளேன்.
அடுத்து நாட்டுக் கோழி முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் தனியே பிரித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
மேற்கண்ட முட்டை வெள்ளைக் கருவுடன் உளுந்தம் பொடியை சேர்த்து கட்டி இல்லாமல் பிசைந்து கொண்டு அத்துடன் அத்திக்காய்ப் பொடியும் சேர்த்துப் பிசைந்து கொள்ள வேண்டும்.
அத்துடன் நல்லெண்ணெய் சேர்த்துப் பிசைந்து நல்ல ஒட்டும் பருவம் வந்தவுடன் அதில் துளியளவு நீற்றுச் சுண்ணாம்பை சேர்த்து பிசைந்து துணியில் தடவி மேலே போட்டு காற்று குமிழ் இல்லாமல் இறுக்கமாக போட்டு கட்டுப் போட்டுவிடவும்.
இந்த முட்டைப் பற்று சாதாரணமாக அலோபதி எலும்பு முறிவு மருத்துவர்கள் போடும் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் கட்டுப் போடுவது போலன்று. இது எலும்பும், எலும்பு மச்சையும், எலும்பிலுள்ள சவ்வுகளையும் மிக நன்றாக ஒட்ட வல்லது.
இத்துடன் உள்ளுக்குச் சாப்பிட நத்தைச் சூரி எண்ணெயும், வஜ்ஜிர வல்லி என்னும் பிரண்டையை லேகியமாகச் செய்து தர ஒரு வாரத்தில் எலும்பு கூடும்.
.
இத்துடன் கால்களை அசைக்காமல் இருப்பது அவசியம்.நடக்க முயற்சிக்காமல் இருப்பது மிக நல்லது.
.
இதே எலும்பு முறிவை அலோபதி வைத்தியத்தில் சரி செய்ய 3 மாதங்கள் ஆகும். அத்துடன் சிறுநீரக செயல் இழப்பு, கல்லீரல் செயலிழப்பு, மண்ணீரல் செயலிழப்பு போன்றவைகள் அலோபதி வைத்தியத்தில் போனசாக வழங்கப்படும். இது தேவையா என்று யோசியுங்கள்?
இந்த முட்டைப் பற்றை
# ஒடிந்த எலும்பைச் சேர்க்க மற்றும் எலும்புத் தேய்மானம்,
# சவ்வு கிழிதல்,
# சவ்வு விலகல்,
# இடுப்பெலும்பு தேய்மானம்,
# முதுகுத் தண்டுவட விலகல்,
# கழுத்தெலும்புத் தேய்வு
# ப்ரொக்ஷிமல் ACL டியர்
ஆகியவற்றைக் குணமாக்கும்.
இந்தக் கட்டை மூன்று முதல் ஆறு நாட்களுக்குள் பிரிக்கலாம். அது வீக்கம் முழுவதும் வடிந்து கட்டு மிக தளர்வாக ஆவதைப் பொறுத்து தீர்மானிக்க வேண்டும்.
.
முட்டை பற்று முட்டியை சரியான position மற்றும் ஜவ்வை சரி செய்துவிடும். ஆனால் அதற்கு பிறகு என்ன செய்தால் இது போன்ற காயங்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம், முட்டின் ஜவ்வை எப்படி வலுவாகுவது, குதிரை போல் காலும் வலுவாக வேண்டும், அதை விட வேகமாக ஓட வேண்டும் என்று விருப்பம் உள்ளவர்கள் கிழே கொடுக்கப்பற்றுள்ளவற்றை பின்பற்றவும்.
எலும்புச் சட்டகம்தான் உடலைத் தூக்கி நிறுத்துகிறது .எலும்புச் சட்டகம் வளர 25 வயதிற்குள் சில பொருட்கள் உடம்பில் சேர்ந்தால் வளரும் நன்கு பலம் பெறும். அதற்கு
1)பிரண்டை உப்பும், இயற்கை சுண்ணாம்புச் சத்துக்களான
2)சங்கு பற்பம்,
3)பவள பற்பம்,
4)சிருங்கி பற்பம்,
5) ஆமையோட்டு பற்பம்
ஆகிய ஐந்து மருந்துகளை சம எடை வாங்கிச் சேர்த்து வல்லாரை நெய்யில் குழைத்து வெறும் வயிற்றில் மூன்று வேளையும் உண்ண 6 மாதத்தில் எலும்புகள் நல்ல பலம் பெறும்.
மேலும் சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன் மூட்டு வலித் தைலம் இதற்கு நல்ல பலன் தரும். இது மூட்டு வலிக்காக மட்டுமல்ல,
# மூட்டுக்கள் பூட்டு விட்டுப் போதல் (Dislocation),
# எலும்பு முறிவு (Fracture),
# மூட்டுக்களில் சவ்வு கிழிந்து போதல் (Ligament Tear),
# இரத்தக் கட்டு,
# மூட்டுக்களில் மசகு இல்லாமல் சடசட எனச் சத்தத்துடன் வலி வருதல்,
# தசைப் பிடிப்பு (Muscle Cramp),
# நரம்பு வலி (Pain in Motor Veins),
# நரம்பு இசிவு (Inflammation in Motor Veins),
# நரம்புகள் சுருண்டு கொள்ளுதல்,
# சுழுக்கு மற்றும் வாதக் கோளாறுகள் (Loco Motor Disorders),
# முதுகுத் தண்டு தட்டுக்கள் நழுவுதல் ,
# கீழ் முதுகு வலி,
# பக்க வாதம் (Single Side and Double Side Paralysis)
போன்ற பல வியாதிகளைக் கண்டிக்கும். இதை மேற்பூச்சாகப் பூசி வர நல்ல பலன் கிடைக்கும். இதிலுள்ள அத்திப் பால் எலும்பை என்றும் ஒடியாத இரும்பாக்கும்.
.
இந்தபதிவில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து மூலிகைகளும் நீங்கள் வசிக்கும் இடத்தின் அருகில் உள்ள நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.                       வாழ்க வளமுடன்.

1 comment:

  1. Thank you sir thank you so much for your selfless service

    ReplyDelete