Monday, February 10, 2025

மூலிகை பொடி பயன்கள்

 நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் எந்த மூலிகை பொடி எதற்கு பயன்படும்..?


அருகம்புல் பொடி:

அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி.


நெல்லிக்காய் பொடி:

பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது.


கடுக்காய் பொடி:

குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.


வில்வம் பொடி:

அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது.


அமுக்கரா பொடி:

தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.


சிறுகுறிஞான் பொடி:

சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.


நாவல் பொடி:

சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.


வல்லாரை பொடி:

நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.


தூதுவளை பொடி:

நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.


துளசி பொடி:

மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.


ஆவரம்பூ பொடி:

இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.


கண்டங்கத்திரி பொடி:

மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.


ரோஜாபூ பொடி:

இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.


ஓரிதழ் தாமரை பொடி:

ஆண்மை குறைபாடு,

மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளை படுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா.


ஜாதிக்காய் பொடி:

நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.


திப்பிலி பொடி:

உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.


வெந்தயப் பொடி:

வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.


நிலவாகை பொடி:

மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.


நாயுருவி பொடி:

உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.


கறிவேப்பிலை பொடி:

கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது. ரத்தம் முழுவதும் சுத்தமாகும்.இரும்புச் சத்து உண்டு.


வேப்பிலை பொடி:

குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.


திரிபலா பொடி:

வயிற்று புண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.


அதிமதுரம் பொடி:

தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.


துத்தி இலை பொடி:

உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.


செம்பருத்திபூ பொடி:

அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.


கரிசலாங்கண்ணி பொடி:

காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.


சிறியாநங்கை பொடி:

அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.


கீழாநெல்லி பொடி:

மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.


முடக்கத்தான் பொடி:

மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது.


கோரைகிழங்கு பொடி:

தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.


குப்பைமேனி பொடி:

சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.


பொன்னாங்கண்ணி பொடி:

உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.


முருங்கை விதை பொடி:

ஆண்மை சக்தி கூடும்.


லவங்கபட்டை பொடி:

கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.


*வாதநாராயணன் பொடி:

பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.


*பாகற்காய் பவுட்ர்:

குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.


*வாழைத்தண்டு பொடி:

சிறுநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.


*மணத்தக்காளி பொடி:

குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.


*சித்தரத்தை பொடி:

சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.


*பொடுதலை பொடி:

பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.


*சுக்கு பொடி:

ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.


*ஆடாதொடை பொடி:

சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.


*கருஞ்சீரகப்பொடி:

சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.


*வெட்டி வேர் பொடி:

நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.


*வெள்ளருக்கு பொடி:

இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.


*நன்னாரி பொடி:

உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நாவறட்சிக்கு சிறந்தது.


*நெருஞ்சில் பொடி:

சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.


*பிரசவ சாமான் பொடி:

பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.


*கஸ்தூரி மஞ்சள் பொடி:

தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.


*பூலாங்கிழங்கு பொடி:

குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.


*வசம்பு பொடி:

பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.


*சோற்று கற்றாழை பொடி:

உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.


*மருதாணி பொடி:

கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.


*கருவேலம்பட்டை பொடி:

பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும். ஒரு ஸ்பூன் போட்டு தண்ணீரில் கலக்கி காலை, இரவு சாப்பாட்டுக்கு பின் சாப்பிடவும்.


இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..?


1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.


2. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.


3. இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.


4. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.


5. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.


6. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.


7. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்....

No comments:

Post a Comment